20 June 2009

மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்

மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்


கரூர் மாவட்டத்தில் துவக்க விழா




முதலமைச்சர் மு கருணாநிதியின் 86ஆவது பிறந்த நாளான (ஜுன் 3-2009) தமிழகத்தில் 6,7,8, வகுப்புகளில் படிக்கும் 24 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு, கண் பரிசோதனை செய்யும் திட்டம் தொடங்கப்ட்டது


சிறப்பு கண்ணொளி திட்டம்
பள்ளிக்கூடங்களில் படிக்கும் 4.7 சதவீத மாணவர்களுக்கு பார்வை குறைபாடு உள்ளது. இதனால் படிப்பு பாதிக்கப்படுகிறது. இதனை கண்டறிந்து கண் பரிசோதனை செய்து கண்ணாடி அணிந்தால் பார்வை குறைபாட்டை சரி செய்ய இயலும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6, 7, 8-ம் வகுப்புகளில் பயிலும் சுமார் 24 லட்சம் பள்ளி சிறார்களுக்கு சிறப்பு மருத்துவக் குழுவின் மூலம் கண் பரிசோதனைகள் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியருக்கு பயிற்சி

ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் ஒரு ஆசிரியருக்கு மருத்துவர்கள் மற்றும் கண் மருத்துவ உதவியாளர்களால் தகுந்த பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களிடையே பார்வை குறைபாடுள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களை மேல்பரிசோதனைக்கு பரிந்துரை செய்வார்கள். கண் மருத்துவ உதவியாளர்கள் பார்வை குறைபாட்டின் தன்மையை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் கண்களுக்கு கண்ணாடிகள் வழங்குவார்கள்.

இவ்வாறு வழங்கப்படும் கண்ணாடிகள் மிகவும் பாதுகாப்பானவை, மிகவும் தரமானவை, உடைபடாத தன்மை கொண்டவையாகும். பார்வை குறைபாடு சுமார் 2 லட்சம் சிறார்களுக்கு இருக்க வாய்ப்புள்ளது என உத்தேசமாக தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நகர்புறங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.


இந்த திட்டத்திற்கென ரூ.5.38 கோடி நிதி தேசிய ஊரக நல்வாழ்வு திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பிறந்தநாளான 15.9.2009 அன்று இத்திட்டம் நிறைவடையும்.


இத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில்

132 நடுநிலைப் பள்ளிகள்,

48 உயர்நிலைப் பள்ளிகள்,

43 மேல்நிலைப் பள்ளிகள்

ஆக மொத்தம் 223 பள்ளிகளில் பயிலும்

சுமார் 44,788 மாணவ-மாணவிகளுக்கு

கண் பரிசோதனை செய்யப்படவுள்ளது.


02 June 2009

வீடு கட்டும் முன் பணம்

அரசு ஊழியர்கள் வீடு கட்டும் முன் பணம் பெறுவதற்கான மனு நகல் இங்கே.
டவுன்லோடு செய்து தேவையான அளவு எடிட் செய்து கொள்ளலாம்.

HBA FORM HBA FORM venkatasubramaniyan

அரசின் அனுமதி பெற மாதிரி படிவங்கள்

அரசு ஊழியர்கள் அசையும்சொத்து  ரூ.10000/க்கு மேல் வாங்கவோ விற்கவோ வேண்டுமானால் அரசின் அனுமதி பெறுதல் வேண்டும். சி,டி பிரிவு ஊழியர்களுக்கு மண்டல அதிகாரியும், பி,ஏ, பிரிவு ஊழியர்களுக்கு துறைத்தலைவரும் அனுமதி அளிக்க வேண்டும். அனுமதி பெருவதற்கு படிவம் 1 முதல் ஆறு வரையிலான படிவங்களுடன் மனு சமர்ப்பிக்க வேண்டும். அப் படிவ நகல் இங்கு மாதிரிக்கு.

THE TAMIL NADU GOVERNMENT SERVANTS' CONDUCT RULES,  7(1) a ல்
//after notice to the prescribed authority// என்ற வாக்கியம் தான் அசையா சொத்து தொடர்பாக பயன்படுத்தப் படுகிறது.
முன் அனுமதி தேவையில்லை.தெரிவித்தால் போதுமானது .அரசுக்கடன் அல்லது வருங்கால வைப்பு நிதியிலிருந்து கடன் பெற்று வீடு கட்ட மட்டுமே உரிய படிவத்தில் உரிய அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

Form5

FORM V FORM V venkatasubramaniyan