22 November 2012

டெங்கு தடுப்பு: சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஆட்சியர் அழைப்பு


திருச்சி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட கிராமப்புறங்களில் சுகாதாரத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் 7 பேர் மற்றும் 35 சுகாதார ஆய்வாளர்கள் தாற்காலிகமாக நியமிக்கப்படவுள்ளனர்.
 
வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 500, சுகாதார ஆய்வாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 400 வழங்கப்படும். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, விருப்பமுள்ளவர்கள் துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் மற்றும் குடும்ப நல அலுவலகத்தை அணுகலாம்.

குறிப்பு:

இது மாதிரியான பணியமர்த்தல்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உண்டு

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம்