
தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்று செவிலியர் என செவிலியர்கள் பணியமர்த்தப்ப்ட்டுள்ளனர்.இதில் பெரும்பான்மையோர் NRHM,RCH மூலம் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர்.மாதச் சம்பளம் 3500, ஓராண்டு பணி முடித்தவர்களுக்கு 4000,ஈராண்டு பணிமுடித்தவர்களுக்கு 5000, என ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.இந்த காலங்களில் இவர்களுக்கு மேற்கண்ட தொகைகளைத்தவிர ஒரு பிரசவத்திற்கு ரூ.25/- ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.பணிநிரந்தரம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு ஒரு வருடத்திற்கு சீருடைபடியாக ரூ.1800/- வழங்கப்பட்டு வருகிறது.சலவைப்படியாக மாதம்தோறும் ரூ.60 வழங்கப்படுகிறது.ஆனால் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு சீருடைப்ப்டி வழங்கப்ப்டவில்லை.சலவைப்படியும் இல்லை.மேலும் Mobile Medical Unit ல் பணியாற்றும் செவிலியர்கள் தினமும் கிராமங்களுக்குச் செல்வதால் சீருடை பராமரிப்பு என்பது அவர்களுக்கு சிரமமாக இருக்கிறது. எனவே NRHM , RCH லிருந்து அவர்களுக்கு
சீருடைப்படிவருடத்திற்கு ரூ.1800ம்
சலவைப்படி பிரதிமாதம் ரூ60/ம், வழங்கினால் தொகுப்பூதியம் பெறும் செவிலியர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும்.தொகுப்பூதியம் மற்றும் நிரந்தர செவிலியர்களுக்கிடையே ஊதிய வேறுபாடு ஏற்க்கக் கூடியதே, ஆனால் சீருடை அப்படியல்ல.நிர்வாகத்தின் பார்வைக்கு இதனை கொண்டு செல்வது நமது கடமை.
Good info... thanks for sharing.
ReplyDelete