22 December 2009

கலைஞர் காப்பீட்டுத் திட்டம்

தமிழகத்தில் ஒரு கோடி ஏழை குடும்பத்தினர் பயன் பெற, உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை கடந்த ஜூலை 23ஆம் தேதி முதல்வர் கலைஞர் தொடங்கி வைத்தார். அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவாக உள்ள குடும்பத்தினர் பயன் பெற முடியும்.
கலைஞர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 14.12.2009அன்று நடைபெற்றது. பல்வேறு தனியார் மருத்துவமணையிலிருந்து மருத்துவர்களும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் அதிகாரிகளும் பங்கேற்ற இம் முகாமில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.தகுதியானவர்கள் உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்




























தோகமலையில் சித்த மருத்துவம்

16.12.2009 இன்று சித்த மருத்துவர் திருமதி.சங்கரவடிவு அவர்கள் தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் சேர்ந்தார்.அவருடன் மருந்தாளுனர் திருமதி ஆனந்தி அவர்களும் பணியேற்றார்.பிரதிவாரம் புதன்,வியாழன்,வெள்ளி ஆகிய மூன்று தினங்கள் இவர்களுக்குப் பணி.தேசிய கிராமப்புர சுகாதார மிஷன் திட்டம் மூலமாக இவர்களுக்கு பணி நியமனம் வழங்கியுள்ளது.
இப்புதிய வரவினால் தோகமலை பகுதி மக்கள் மிகுந்த பயனடைவர்.
இவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

தமிழ் நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில்

200 இடங்களில் சித்த மருத்துவப் பிரிவும்,
30 இடங்களில் ஓமியோபதி பிரிவும்
25 ஆயுர் வேதா பிரிவும்,
25 யுனானி சிகிச்சை பிரிவும் ,
20 இடங்களில் இயற்கை மற்றும் யோகா பிரிவும்,
என மோத்தம் 300 ஆரம்ப சுகாதார நிலையங்களில் என்.ஆர்.எச்.எம் மூலமாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமொயோபதி பிரிவு துவக்கப்பட்டுள்ளது