31 December 2008

2009 ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


zwani.com myspace graphic comments
Myspace New Years Comments



2009 ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.அனைத்து வளங்களும் பெற்று மகிழ்வோடு வாழவும்,வருடம் முழுதும் வாழ்வில் வசந்தம் வீசவும் வாழ்த்துகிறேன்.
அன்புடன்
வெங்கட்

30 December 2008

இதய அறுவை சிகிச்சை உதவித்தொகை அதிகரிப்பு




Photobucket

அரசு ஆணை எண் 407 நாள் 05.12.2008 படி ஏழை குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு அளித்துவரும் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது
Name of the Surgery Existing Rate Revised Rate
1 Closed Heart Surgeries Rs.10,000/- Rs.20,000/-
2 Major Open Heart Surgeries Rs.30,000/- Rs.50,000/-
3 Complex Open Heart Surgeries Rs.70,000/- Rs.1,00,000/-

இதய அறுவை சிகிச்சை உதவித்தொகை அதிகரிப்பு

Photobucket


அரசு ஆணை எண் 407 நாள் 05.12.2008 படி ஏழை குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு அளித்துவரும் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது

Name of the Surgery Existing Rate Revised Rate
1 Closed Heart Surgeries Rs.10,000/- Rs.20,000/-
2 Major Open Heart Surgeries Rs.30,000/- Rs.50,000/-
3 Complex Open Heart Surgeries Rs.70,000/- Rs.1,00,000/-

22 December 2008

ஒரு தவறான செய்தி வதந்தியாக பரவி............

ஒரு தவறான செய்தி வதந்தியாக பரவி கானக நெருப்பாய் மருத்துவமணைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் கூடவும் பதற்றம் ஏற்படவும் காரண்மாகியுள்ளது.

முதல் நாள் இரவே ஆரம்பசுகாதார நிலையத்திற்கு வந்து தங்கி போலியோ சொட்டுமருந்து கேரியர்களை தயார்செய்வது போன்ற் பல பணிகளைச் செய்துவிட்டு விடியற்காலை 5.00 மணிக்கே எழுந்து அனைத்து பூத்துகளுக்கும் பணியாள்ர்களையும் ஊர்திகளில் கொண்டு விட்டு சொட்டு மருந்து பெட்டிகளை வினியோகம் செய்து ஐந்து வயதுக்குட்பட்ட ஒரு குழந்தைகள் கூட விடுபடாமல் சொட்டுமருந்து போடப்பட்டுள்ளதா?என ஆய்வு செய்து மருத்துவ அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களால் ஒரு மாபெரும் நோய்தடுப்புப் பணிநடத்தி முடிக்கப் பட்டுள்ளது.

ஒரு தவறான செய்தியினால் பரவிய வதந்தி இப் பணியில் ஈடுபட்டுள்ள அனத்துப் பணியாளர்களயும் குழந்தைகளின் பெற்றோர்களையும் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதித்துள்ளது.
சிறு குழந்தைகளை கையில் சுமந்து கொண்டு உண்மையிலேயே நம் குழந்தக்கு இந்த சொட்டு மருந்தினால் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ? என்கிற பதைபதைப்புடன் கண்களில் மிரட்சியுடன் ஆரம்பசுகாதார நிலயங்களுக்கு வந்துள்ள பெற்றோர் களுக்கு மருத்துவர்களும் ஏனய பணியாளர்களும் தக்க பதிலளித்து வதந்திதான் தைரியமாக இருங்கள் உங்கள் குழந்தைக்கு ஒனறும் ஆகாது என நம்பிக்கை அளித்து அவர்களை ஆற்றுப்படுத்தி வருகிறார்கள்.அரசும் இது தொடர்பாக ஊடகங்கள் மூலமாக விளக்கங்கள் அளித்து வருகிறது.இந்த நிமிடம் வரை(10.15.Pஆ 21.12.2008) ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் மருத்துவர்களும் பணியாளர்களும் பெற்றோர்களுக்கு பதிலளித்து வருகிறார்கள்.உண்மையில் ஒரு குழந்தைக்கு கூட போலியோ சொட்டுமருந்தினால் பாதிப்பு ஏற்படாதபோது இது போன்ற வதந்திகளுக்கு மக்களும் ஊடகங்களும் மதிப்பளிக்காமல் பொறுப்புடன் செயல்பட்டு போலியோ ஒழிப்பு என்கிற மாபெரும் பணி சிறக்க உதவ வேண்டும்.

Photobucket

வாகனம் தயார் நிலையில்

மருத்துவ அலுவலரின் மேற்பார்வை மற்றும் ஆய்வு.


முகாம் படங்கள்



வழிகாட்டு வகுப்புக் காட்சிகள்



களப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான வழிகாட்டு வகுப்புக் காட்சிகள்.

துவக்கி வைக்கப்படுகிறது





21.12.2008 போலியோ சொட்டுமருந்து முதல் தவணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் துவக்கி வைக்கப்படுகிறது.

21.12.2008 போலியோ சொட்டுமருந்து முதல் தவணை









21.12.2008 போலியோ சொட்டுமருந்து முதல் தவணை க்காக ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து சொட்டுமருந்தினை கிராமப்பகுதிகளுக்கு எடுத்துச்செல்ல கேரியர்களை தயார்நிலையில் வைக்கும் பணியில் ஊழியர்கள்.

18 December 2008

போலியோ பற்றிய கேள்விக்கான பதில்களை தெரிவியுங்கள்

1.போலியோ சொட்டு மருந்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் ஏன் கொடுக்க வேண்டும்?

2.வருடா வருடம் இந்த முகாம் ஏன் நடத்தப் படுகிறது?

3.குழந்தை பிறந்த உடன் சொட்டுமருந்து போட்டிருந்தாலும் வருடத்திற்கு இரு முகாம்களில் ஏன் போட்டுக் கொள்ளவேண்டும்?

4.குறிப்பாக ஜனவரி, பிப்ரவரி மாதஙளே ஏன் தெரிவு செய்யப்படுகிறது?

5.இந்த வருடம் மட்டும் ஏன் டிசம்பரிலேயே முதல் ரவுண்டு நடத்தப்படுகிறது?

6.இந்த தேதியை நிர்ணயிப்பது எந்த அமைப்பு?

7.இதே போல உலக அளவில் எந்தெந்த நாடுகளிள் வருடா வருடம் போலியோ முகாம்கள் நடத்தப் படுகிறது?

8.இந்த வருடமவது "பைனல் புஷ்" ஆக இருக்குமா?

மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்
ம‌ற்றும்
மரு.சுரேஷ்

ஆகியோர் ப‌தில‌ளிக்க‌ கேட்டுக் கொள்கிறேன்.

14 December 2008

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திருச்சி வருகை









மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மான்புமிகு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் திருச்சி வருகை தொடர்பான பத்திரிகை செய்திகள் இங்கே.

சுகாதாரத் துறையில் காலி பணியிடங்கள் மூன்று மாதங்களில் நிரப்பப்படும்



சுகாதாரத் துறையில் காலி பணியிடங்கள் மூன்று மாதங்களில் நிரப்பப்படும் என மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மான்புமிகு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் திருச்சியில் தெரிவித்துள்ளார்.5124 செவிலியர்களும்,4418 டாக்டர்களும்,12332 மருத்துவம் சாராத பணியாள்ர்களும் இதுவரை நியமணம் செய்யப்பட்டுள்ளனர்.11 சதவிகிதமாக இருந்த காலிபணியிடஙள் தற்போது 3 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.இன்னும் 3 மாதங்களில் காலிபணியிடங்களே இல்லாத நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

27 November 2008

கரூர் மாவட்டம்





கரூர் மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏப்ரல் 2008 முதல் அக்டோபர் 08 வரை பிரசவ எண்ணிக்கை வட்டார ஆரம்பசுகாதார நிலையங்கள் வாரியாக நிரல்படம்.

நிர்வாக கட்டமைப்பு நிரல்படம்




தோகமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் , கூடுதல் ஆரம்ப சுகாதார நிலயங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களின் நிர்வாக கட்டமைப்பு நிரல்படம்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களின் எண்ணிக்கை






தோகமலை வட்டாரத்திற்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2008 09 ம் வருடத்தில் அக்டோபர் 2008 வரை நடைபெற்ற பிரசவங்களின் எண்ணிக்கை தொடர்பான நிரல்படம்.

26 November 2008

பரங்கிப்புண்










யாஸ் ‍பரங்கிப்புண் எனப்படுவது ஒரு வகை தோல்நோய்

இந் நோய்க்கு காரணமான கிருமியின் பெயர் டிரிபோனிம பெர்டினு வகை பாக்டீரியா

காட்டு மாரியாத்தா

பெக்கனி புண்ணு

பெக்கல் மாரியாத்தா

பரங்கிப்புண்ணு

என்ற பெயர்களில் மலைவாழ் பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய கிராமங்களில் உள்ள மக்களால் அழைக்கப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம்,குளித்தலை,தோகமலை,மற்றும் கடவூர் ஆகிய வட்டாரங்களில் சுமார் 500 கிராமங்களில் நேரடி பரங்கிபுண் (யாஸ்) சர்வேபணி நடத்தப்பட்டது.

17 November 2008

ஜனனி சுரக்ஷா யோஜனா JSY




வறுமை கோட்டிற்கு கீழுள்ள பெண்களுக்கு முதல் இரு பிரசவத்திற்கு ரூ.700/ ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவமான பெண்ணிற்கு மரு.பாரதிராஜா அவர்கள் காசோலை வழங்கும் காட்சி.

16 November 2008

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிசேரியன்


திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிசேரியன் முறையில் பிரசவம் நடைபெற்றுள்ளது.சிறுகாம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இப் பணியினை மேற்கொண்ட மருத்துவகுழுவிற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

மானிய கோரிக்கை

2008 _ 09 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மானிய கோரிக்கை இங்கே பி டி எஃப் வடிவில்.

டவுன்லோடு செய்ய இங்கே



health_FW_t

15 November 2008

நரம்பு சிலந்தி நோயை ஒழித்தது எப்படி

குறிப்பு:இந்தப் பதிவு மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ் அவர்களது வலத்தளத்திலிருந்து எடுத்து பயன்படுத்தப்படுகிறது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலினுள் ஒரு புழு இருக்கும்.

இந்த புழுவை எப்படி வெளியில் எடுப்பது. அதை ஒரு தீக்குச்சியில் (அல்லது ஏதாவது குச்சியில்) சுற்றிக்கொண்டு தினமும் சிறிது சிறிதாக எடுக்க வேண்டும்
ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ”படி கிணறுகள்” (step wells) அதிகம் உண்டு. நம் ஊர் போல் கயிறு வாளி எல்லாம் தேவையில்லாமல் கிணற்றில் நேரடியாக இறங்கி நீரை எடுக்க வேண்டியது தான்.

இங்கு தான் பிரச்சனையே ஆரம்பம் !!

இந்த புழுவினால் பாதிக்கப்பட்ட ஒருவர் கிணற்றினுள் இறங்குகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். உடனே அவரது காலில் இருக்கும் அந்த புழு சிறிது எட்டிப்பார்த்து நீரினுள் லார்வாக்களை விட்டு விடுகிறது. (மற்ற நேரங்களில் லார்வாக்களை வெளியிடாது. மற்ற நேரங்களில் வெளியிட்டால் லார்வாக்களால் பிழைக்க முடியாது என்பதால் அதனால் பலனில்லை என்பதை தெரிந்து வைத்திருக்கும் புத்திசாலி புழு அது !!)

அந்த லார்வாக்கள் (இவைகளை L1 லார்வாக்கள் என்று அழைக்கிறார்கள்) சைக்லாப்ஸ் (cyclops) என்னும் சிறிய உயிரினங்களுக்குள் புகுந்து ஒரு 15 நாட்கள் உள்ளே இருந்து வளர்ச்சி பெறுகின்றன. (வளர்ச்சி பெற்ற பின் அவை L3 லார்வாக்கள் ஆகிவிடுகின்றன)

இப்படி இருக்கையில் அதே நீர்நிலைக்கு ஒருவர் வருகிறார். அங்கிருந்து நீரை எடுத்து செல்கிறார். அதை காய்ச்சாமல், வடிகட்டாமல் அப்படியே குடிக்கிறார். சைக்ளாப்ஸும் (அதனுள் இருக்கும் லார்வாவும்) அவரின் வயிற்றிற்கும் செல்கின்றன. சைக்லாப்ஸ் ஜீரணமாகி விடுகிறது. அதனுள் இருக்கும் L3 லார்வா வெளிவருகிறது இரைப்பையின் சுவற்றை துளைத்து சென்று உடலினுள் புகுந்து தோலுக்கு அடியில் வந்து விடுகிறது

9 முதல் 12 மாதங்களில் அவை புழுக்களாகிவிடுகின்றன. அதன் பிறகு இந்த நபர் நீரில் காலை வைத்தால் உடன் L1 லார்வாக்களை வெளியிட்டு, அவை L3
லார்வாக்கள் ஆகி, அந்த நீரை ஒருவர் வடிகட்டாமல் குடித்து அவருடம்பில் மீண்டும் புழுவாக வேண்டியது தான்.

இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். ஒரு காலத்தில் தமிழகத்தில் பரவலாக இருந்த இந்த நோய் இன்று கிடையவே கிடையாது. இதிலென்ன, ஒரு காலத்தில் பரவலாக இருந்த பெரியம்மையும், போலியோவும் கூடத்தான் இன்று கிடையாது. டெட்டெனஸ், கக்குவான் இருமல் டிப்தீரியா போன்றவையும் வெகுவாக குறைந்து விட்டன என்று நீங்கள் கூறலாம்.

அந்த நோய்களை எல்லாம் நாம் தடுப்பூசி மூலமே கட்டுப்படுத்தியுள்ளோம். ஆனால் நரம்பு சிலந்தியை கட்டுப்படுத்தி பின்னர் காணாமல் ஆக்கியது தடுப்பூசி மூலம் அல்ல. பொது சுகாதார நடவடிக்கைகள் மூலமே

நோயை தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ ஊசியோ, மாத்திரையோ இல்லாமல் மக்களின் நடத்தை மாற்றம் மூலம் மட்டுமே ”அழிக்க”ப்பட்ட ஒரு நோய் நரம்பு சிலந்திதான்..

ஒரு நோயை தடுக்க அறுவை சிகிச்சை / மாத்திரை/ ஊசிகளுடன் வாழ்க்கை முறை மாற்றமும் முக்கியம், என்ற நிலையில் இருந்து வாழ்க்கை முறை மாற்றமே முதல் வைத்தியம், அறுவை சிகிச்சையும் மருந்தும் ஊசியும் இரண்டாம் பட்சம் தான் என்ற அளவிற்கு (From "Life Style Modification as a supplement to drugs and surgery" to "Life Style Modification as the Main Mode of Treatment and Drugs / Surgery only in rare cases) ஒரு சிந்தனை மாற்றத்தை அளித்த நிகழ்வு நரம்பு சிலந்தி ஒழிப்பு திட்டம் தான்



1981 முதல் 1990 பத்தாண்டுகளை ஐ.நா சபை சர்வதேச குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதார பத்தாண்டு (International Drinking Water Supply and Sanitation Decade ) என்று வரையறுத்தவுடன் ஏற்கனவே பெரியம்மையை “ஒழித்தி”ருந்த அனுபவமும் உற்சாகமும் கை கொடுக்க நரம்பு சிலந்தியை கட்டுப்படுத்த கிளம்பிவிட்டனர்

அப்பொழுது இந்தியாவில் 7 மாநிலங்களில் இந்த நோய் அதிக அளவில் இருந்தது

ராஜஸ்தான்

குஜராத்

ஆந்திர பிரதேசம்

மத்திய பிரதேசம்

மகாராஷ்ட்ரா

கர்நாடகா

தமிழ்நாடு

இந்தியாவிலும் இந்த திட்டம் 1980 முதல் செயல்படுத்தப்பட்டது. கிராமம் கிராமமாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கணக்கெடுக்கப்பட்டார்கள்.
இந்தியாவில் 1983ஆம் ஆண்டு இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44819
1984ல் ஒரு மாநிலத்திலிருந்து இந்த நோய் முற்றிலும் மறைந்திருந்தது
1984ல் 89 மாவட்டங்களில் 12840 கிராமங்களில் 39,792 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்
1986ல் உலக சுகாதார சபை நரம்பு சிலந்தியை ஒழிப்பது என்று தீர்மானம் இயற்றிய போது இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22610வாக குறைந்திருந்த்து.

1987ல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17031.

1988ல் அதில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் குணமடைந்திருந்தனர். அப்பொழுது கூட ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் இந்த நோய் முற்றிலும் மறைந்திருந்தது

பொது சுகாதாரத்தில் முதல் இடத்தில் இருக்கும் தமிழகத்திலிருந்து நாலே வருடங்களில் நாம் சாதித்ததை ராஜஸ்தானால் 16 வருடங்கள் கழித்து தான் சாதிக்க முடிந்தது


1996ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநில ஜோத்பூர் மாவட்டத்திலிருந்து 3 கிராமங்களில் 9 பேர்களிட தான் நரம்பு சிலந்தி கடைசியாக காணப்பட்டது

1999 வரை ஏழு முறை இந்த திட்டம் ஆய்வு செய்யப்பட்டது. ஏப்ரல் 1999ல் கடைசி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

உலக சுகாதார நிறுவனத்தில் நிபுணர் குழு 1999 நவம்பர் 9 முதல் 25 வரை ஆய்வு செய்தனர்
அதன் பின்னர் 2000 இந்தியாவில் இந்த நோய் இல்லை (eliminated) என்ற சான்று வழங்கப்பட்டது
2001 பிப்ரவரி 15ஆம் தேதி இந்திய நரம்பு சிலந்தியற்ற நாடு என்று அறிவிக்கப்பட்டது (free of guinea worm)
முதன் முதலாக இந்த சான்றை பெற்ற ஆசிய நாடு நாம் தான்
குடிக்கும் நீரில் நரம்பு சிலந்தியின் L3 லார்வா, இரைப்பையினுள் செல்லுதல்

காலில் இருக்கும் புழு நீரினுள் L1 லார்வாக்களை வெளியிடுதல்
ஆக இவை இரண்டையும் தடுத்தாலே நரம்பு சிலந்தி புழுவால பரவ முடியாது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தால்
குடிக்கும் நீரில் நரம்பு சிலந்தியின் L3 லார்வா, இரைப்பையினுள் செல்லுவதை தடுத்தல்
ஆழ்துளை கிணறுகளை அமைத்தல்
கைபம்புகளை அமைத்தல்
தண்ணீரை காய்ச்சுதல்
வடிகட்டிய தண்ணீரை மட்டுமே குடித்தல்
காலில் இருக்கும் புழு நீரினுள் L1 லார்வாக்களை வெளியிடுவதை தடுத்தல்
படி கிணறுகளை மூடி ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் அவ்வளவு தான்
நன்றி: மரு.புருனோ (www.payanangal.in)
http://www.payanangal.in/2008/10/18-how-guinea-worm-was-eradicated-in.html

14 November 2008

பொது சுகாதார‌த் துறை இயக்குனர்

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறை இயக்குனர் திரு.டாக்டர்.இளங்கோ அவர்களை 5 முறை நேரில் நெருக்கமாக சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.(நெருக்கமாக என்பதற்கு அருகில் என்பதை தவிர வேறு அர்த்தம் இல்லை.விவேக் காமெடியில் சொல்வது போல "அவரை எனக்குத்தெரியும் அவருக்கு என்னைத்தெரியாது")
முதலில் சந்தித்தது திண்டுக்கல்லில். கரூர் மாவட்டத்தில் என்னுடன் பணி புரிந்த திரு.ராமனாதன் உதவியாளர் அவர்களின் திருமணத்திற்கு திண்டுக்கல் சென்றிருந்த போது .அப்போது அவர் திண்டுக்கல் துணை இயக்குனர்.

இரண்டாவது, திருச்சியில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மருத்துவர்களுக்கான ஒரு பட்டறை திருச்சியில் ஏற்பாடு செய்திருந்தனர்.அப்போதய தலைமை கணக்கு அலுவலர் மற்றும் நிதி ஆலோசகர் திரு.நாராயணன் அவர்களின் வகுப்பும் இருந்தது.அவருக்கு பவர் பாய்ண்ட் உதவிக்கு இயக்குனரக உதவியாளரும் எனது நெருங்கிய நண்பருமான திரு.ராஜனின் அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்தேன்.அப்பொது தான் திரு.ஜி.ஆர்.ரவீந்திரநாத்,நாரண்ம்மா தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் புதல்வர் திரு.அறம்.,காதுகள் நாவல் எழுதிய சாகித்திய அகாடமி விருது பெற்ற‌ எம்.வி.வெங்கட்ராம் அவர்களின் பேத்தி மரு.ஏ.ஆர்.சாந்தி ,ஆகியோரை பார்த்தேன். தற்காலிக பணியாளர்களாக இருந்த போதே நிவாகம், துறை பணிகள் போன்றவைகளிள் அவர்களுக்கு இருந்த ஆர்வம் கண்டு ஆச்சிரியப்பட்டேன்.(இது தொடர்பாக தனி பதிவு எழுதவேண்டும்).சரி விஷயத்திற்கு வருகிறேன்,
அந்த பட்டறைக்கு ஒரு சிலைடு ஷோவுடன் துறை தொடர்பான நீண்ட வகுப்பு எடுத்தார்.அவரது பேச்சை அரங்கில் இருந்த அனைவரும் மிக அமைதியாகவும்,கவனமாகவும் வுள்வாங்கிய அந்நிகழ்வு இன்றும் என் நினைவில் உள்ளது.அவரது பேச்சாற்றலை நான் எதிர் பார்க்கவில்லை.திருநெல்வெலி துவங்கி,சமூகநீதி,மாணவர் சக்தி,என சுவாரசியமான பல விஷயங்கள் இடைஇடையே.இறுதியில் கேள்விநேரம்.சளைக்காத கேள்வி,சளைக்காத பதில்.ஒரு அதிகாரியாக பார்த்தது போய் ஒரு ஆளுமையுள்ள பேச்சாளராக அங்கு பார்த்தேன்.

3 வது சென்னையில் திரு.அரங்கஅனந்த கிருட்டிணன் அவர்களுடன் எங்கள் சங்க மாநில நிர்வாகிகள் அனைவரும் அவரது அலுவலகத்தில் அவரை ஒரு மாலைப்பொழுதில் சந்தித்தோம்.எந்த கோரிக்க்கைகளும் இல்லாத ஒரு சாதாரண சந்திப்புதான்.வந்த அனைவருக்கும் இருக்கைகள் தந்து உட்காரச்சொன்னார்.அமைச்சுப்பணியாளர்களை உட்காரவைத்துப் பேசிய அவரது பண்பு போற்றுதலுக்கு உரியது.கோரிக்கைகள், பணிகள்,இவைகளையெல்லாம் தாண்டி நச் சென்று அவர் சொன்ன ஒரு சங்கதி

1. உங்களது ஒவ்வொரு கூட்டத்திலும் துவங்குமுன் ஒரு மணி நேரம் உஙகளை நீங்களே சுய விமரிசனம் செய்து கொள்ளுவதற்கு நேரம் ஒதுக்குங்கள்.இன்று நாம் வேலைக்கு வந்து எத்தனை பேருக்கு உதவி செய்துள்ளோம்,எத்தனை கோப்புகளை எடுத்து பணி செய்துள்ளோம். என்பது மதிரியான பயிற்சிகள் மேற்கொள்ள முயற்சி செய்யுங்கள்.சங்கம், கோரிக்கைகள் அத்ற்கான போராட்டஙள் அனத்தும் தேவைதான்
கூடவே சுயபரிசோதனையும் தேவை.

4 வது சந்திப்பு அவர் இயக்குனராக பதவி உயர்வு பெற்றபின்.இயக்குனர் அறையில். சம்பிரதாய சந்திப்பு
5 வது சந்திப்பு தோழர்.அரங்க அனந்தகிருட்டிணன் அவர்களுடன்.இயக்குனர் அறையில் அவர் எதிரே உயர்நிலை அலுவலர்கள் பலர்.இடயிடயே தம்பி சீனு (பி சி) அவசர செய்திகளை தொடர்பு கொள்ள தொலைபேசியுடன்.மிகுந்த பரபரப்பான சூழல்.அந்த சூழலிலும் கிடைத்த சிறிது நேரத்தில் கோரிக்கை படிவத்தினை கொடுத்தார் தோழர். கோரிக்கை ஒரு சிறு புத்தகம் போல இருந்தது.(அனைத்தும் அரங்க அனந்த கிருட்டிணன் அவர்கள் உழைப்பு) அப்போது இயக்குனர் சொன்ன வார்த்தைகள் இவர் சாதிப்பதற்காக வந்துள்ளார் என்பதை உணர்த்தியது.

உங்கள் கோரிக்கைகளை சுருக்கமாக 3 கட்டம் போட்டு தெரிவியுங்கள்.

1.கோரிக்கை சுறுக்கமாக.
2.எங்கு நிலுவை?
3.என்ன செய்தால் தீர்வுகிட்டும்?

இவைகளுடன் முதலில் இணை இயக்குனர்(நிர்வாகம்) அவர்களுடனான முதல் கட்ட பேச்சு நடத்துங்கள் அடுத்து
அதன் பிறகு அவர்களுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கிறேன்.என்றார்.இதற்கிடையில் தோழர்.அரங்க அனந்தகிருட்டிணன் மற்றும் நிவாகிகள் இயக்குனர் அருகில் பேசிக்கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.இயக்குனர் சிரித்துக்கொண்டே கண்ணாடியை நாசி நுனிக்கு இறக்கி மேல் பக்கமாக பார்த்து புகைப்படம் எடுத்தவரை பர்ர்த்து கேட்டார்." என் அறையில் என்னை புகைப்படம் எடுக்க என்னிடம் அனுமதி பெறவேண்டாமா?"
தவறை உணர்ந்து உடன் மன்னிப்பு கோரினார் நண்பர்.பேசி முடித்த பிறகு விடைபெற்றோம். அப்போது தோழர்.அரங்க அனந்தகிருட்டிணன் இயக்குனரிடம் கேட்டார் "எங்கள் மாநில நிர்வாகிகள் உங்களுடன் ஒரு புகைப்பட்ம் எடுத்துக் கொள்ள அனுமதிப்பீர்களா அய்யா?" "ஓ.எஸ்".என்ற அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டனர் மாநில நிர்வாகிகள்

விளம்பரம்

ஆரம்ப சுகாதர நிலயங்கள் தற்போது நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.தரமான குடிநீர்,கழிப்பறை,காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமை,பிணியாளர்களுக்கு தொலைக்கட்சி பெட்டி,பிரசவித்த தாய்மார்களுக்கும்,குழந்தைகளுக்கும்,குடிக்க குளிக்க சுடுநீர்,24 மணி நேரமும் மருத்துவரின் கவனிப்பு என அதிக வசதிகள் இருக்கிறது.இருந்தும் இவைகளின் இருப்பை மக்களுக்கு தெரிவிக்க விளம்பரம் தேவை யாக உள்ளது.தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சிலவிளம்பரங்கள் இங்கே.

தடுப்பூசி பெரிய சவால்






தட்டம்மை தொடர்பான இந்த ஊடகச்செய்தி கவலை அளிக்கிறது.
போலியோவும்,பெரியம்மையும்,தமிழ்நாட்டில் இல்லாமல் செய்த பொது சுகாதாரத் துறைக்கு இது பெரிய சவால்தான்.இதனை எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறோம்?.
தற்போது குழந்தைகளுக்கு தடுப்பபூசி போட தாய்மார்கள் ஆரம்ப சுகாதார நிலயதிற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.ந‌டைமுறையில் இது அவர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கிறது.அவர்கள் வசிக்கும் கிராமங்களிலேயே துணை சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதில் இருக்கும் வசதி இதில் இல்லை.பெரும்பாலும் விவசாயக் கூலிகளாக இருக்கும் பெண்கள் தடுப்பூசி போடும் நாட்களிள் பேருந்து பிடித்து அருகில் உள்ள ஆரம்பசுகாதார நிலையத்திற்கு வரவேண்டியுள்ளதோடு ஒரு நாள் கூலியையும் இழக்க நேரிடுகிறது.அறிவுசால் நமது துறை அறிஞர்கள் இது தொடர்பாக ஆரோக்யமான விவாத பங்களிப்பை தரவேண்டிய அவசியம் உள்ளது.
மரு.புருனோ,பழனி சுரேஷ் போன்றோர் இதனை முன்னெடுக்கலாம்.

02 November 2008

மருத்துவர் தாக்கப்பட்டுள்ளார்



பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மாபாளயம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் களப்பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்கப்பட்டுள்ளார்.இது கொடுஞ்செயல்,கண்டிக்கத்தக்கது.மருத்துவர் ரமேஷ் அவர்களை தாக்கியதாக குற்றம் சாற்றப்படும் முத்தையா அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.இவ் விஷயத்தில் ஒன்று பட்டு குரல் எழுப்பி போராடிவரும் பொது சுகதாரத்துறை சகோதர சகோதரிகள் அனைவரின் ஒற்றுமை பாராட்டப்பட வேண்டியஒன்று.

29 October 2008

ஆரம்ப சுகாதார நிலையப் பணிகள்

ஆரம்ப சுகாதார நிலையப் பணிகள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் , களப்பணியாள்ர்கள் ஆகியோரது பணிகள் குறித்த அரசு ஆணைகள் கீழே.

27 October 2008

தீபாவளி வாழ்த்து



தீபாவளி திருநாளான இன்றய தினம் அனைவருக்கும் மற்றும் ஆரம்ப சுகாதார நலையங்களில் கடமை ஆற்றிவரும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

26 October 2008

ஊட்டியா?, பெங்க‌ளூரா?



இப் புகைப்படங்கள் எங்கே எடுக்கப்பட்டன?


ஊட்டியா?, பெங்க‌ளூரா? பூங்காவா? இதெல்லாம் இல்லை
க‌ரூர் மாவ‌ட்ட‌த்தில் உள்ள‌ ஒர் ஆர‌ம்ப‌சுகாதார‌ நிலைத்தில் ப‌ராம‌ரிக்க‌ப்ப‌டும் தோட்ட‌ம்.

அந்த‌ ஆர‌ம்ப‌ சுகாதார‌ நிலைய‌ம் காவ‌ல்கார‌ன்ப‌ட்டி

பேரரிஞர் அண்ணா பிறந்தநாள் விழா



15.09.2008 பேரரிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா அன்று உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து அவைகளது முன்னிலையில் நடைபெற்ற விழாவில் கர்பிணிபெண்களுக்கு வாராந்திர பரிசோதணையின் போது இலவச மதிய உணவு ,மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு மூன்றுவேளை சத்துணவு ( மூன்று நாளைக்கு),குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்களுக்கு மூன்றுவேளை சத்துணவு ( மூன்று நாளைக்கு),திட்டம் செயல்படுத்தப்பட்டது.


தற்போது பிரசவமாகி மருத்துவமணை யிலிருந்து வீட்டிற்கு செல்லும் போதே குழந்தைக்கான பிறப்புச் சான்று ஆரம்பசுகாதார நிலையத்திலேயே வழங்கப்பட்டு வருகிற நிகழ்வை கொண்டாடும் வகையில் அன்றைய தினம் டிஸ்சார்ஜ் ஆன தாய்மார்களுக்கு குழந்தக்கான பிறப்புச்சான்று வழங்கப்பட்டது.

பிரசவமான ஒரு வாரத்திற்குள் ஜனனி சுரக்க்ஷா யோஜனா திட்டத்தின் மூலம் ரூ.700 க்கான காசோலை பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்பட்டது.
உடன் கர்பிணிப்பெண்களுக்கு வளையல் காப்பும் கொண்டாடப்பட்டது.


மருத்துவ அலுவலர் திரு.பி.பாரதிராஜா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவை வட்டார சுகாதார அய்வாளர் திரு.இ.இராஜலிங்கம் ஏற்பாடு செய்திருந்தார்.
உடன் கர்பிணிப்பெண்களுக்கு வளையல் காப்பும் கொண்டாடப்பட்டது.


மருத்துவ அலுவலர் திரு.பி.பாரதிராஜா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவை வட்டார சுகாதார அய்வாளர் திரு.இ.இராஜலிங்கம் ஏற்பாடு செய்திருந்தார்.


இதே விழா காவல்காரன்பட்டி ஆரம்ப்ப சுகாதார நிலையத்திலும் நடைபெற்றது.மரு.தேன்மொழி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ் விழாவில் கர்பிணிபெண்களுக்கு வளைகாப்பு சிறப்பாக செய்யப்பட்டது. சில புகைப்படங்கள் சிலைடு ஷோவாக.

புகை தடைச்சட்டம்



பொது இடங்களில் புகைபிடிக்க தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளது.மத்திய கலால், வருமான வரி, விற்பனை வரி, சுகாதாரம், போக்குவரத்து ஆகிய துறைகளின் ஆய்வாளர்கள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து பொது இடங்களிலும் யார் புகைபிடித்தாலும் நடவடிக்கை எடுக்கலாம்.

ரயில் நிலையம் மற்றும் அதற்குட்பட்ட பகுதிகளில் ரயில் நிலைய அதிகாரிகள், துணை நிலைய அதிகாரி, தலைமை நிலைய அதிகாரி, நிலைய பொறுப்பாளர்கள் நடவடிக்கை எடுக்கலாம்.

அரசு அலுவலகங்களில் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள், அதற்கு இணையான அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இயக்குநர்கள், மருத்துவ கண்காணிப்பாளர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், தபால் நிலையங்களில் தபால் நிலைய அதிகாரிகள், தனியார் அலுவலகங்களில் தலைமை நிலைய அதிகாரிகள், மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள், கல்வி நிலையங்களில் கல்லூரி முதல்வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் அவரவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடவடிக்கை எடுக்கலாம்.

நூலகங்கள், வாசகர் அறைகளில் நூலகர், துணை நூலகர், நூலக பொறுப்பாளர்கள் மற்றும் நூலக அலுவலர்கள், விமான நிலையங்களில் விமான நிலைய மேலாளர்கள், அதிகாரிகள், அனைத்து பொது இடங்களிலும் பொது சுகாதாரத் துறை இயக்குநர்கள், மத்திய, மாநில பொறுப்பு அதிகாரிகள், புகையிலைக் கட்டுப்பாடு மாநில, மாவட்ட நிலையங்களின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் ஆகியோர் அவரவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடவடிக்கை எடுக்கலாம்.
இது தொடர்பாக தோகமலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில் களப்பணியாளர்கள் இப் பகுதியில் சிறு பிரச்சாரம் செய்தனர்.அதன் புகைப்படங்கள் சில சிலைடு ஷோவாக.

25 October 2008

அரசுஆணைகள் தொகுப்பு

106 பக்கங்கள் கொண்ட அரசு ஆணைகளின் தொகுப்பு பிடிஎஃப் வடிவில் ‍டவுன்லோடு .

23 October 2008

கிராம சுகாதாரம் நீர் மற்றும் துப்புறவுக் குழு

துறை நண்பர்களின் வேண்டுகோளின் படி அரசு ஆணைகள் மற்றும் துறை தொடர்பான முக்கிய ஆவணங்கள் இந்த வலைப் பூவில் கொடுக்கலாம் என இருக்கிறேன்.

முதலில் கிராம சுகாதாரம் நீர் மற்றும் துப்புறவுக் குழு

த‌மிழ்நாட்டில் மொத்தம் உள்ள 12618 ஊராட்சிகளில் கிராம சுகாதாரம் நீர் மற்றும் துப்புறவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.வருடத்திற்கு ரூ.10000/ இக் குழுக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.பாதுகாப்பான குடிநீர் வழங்கவும்,கிராமங்களில் சுகாதாரம் பேணவும் இத் தொகை பயன்படுத்தப்பட வேண்டும்.

Village health and water sanitation commitee,Patient welfare society, தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டு ஆவணம் பிடிஎஃப் வடிவில் இங்கே.


RNTCP

திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத்திட்டம்(RNTCP) தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் காவல்காரன்பட்டி ஆரம்பசுகாதார நிலயத்தில்.

தேசிய மலேரியா ஒழிப்பு மாதம்



ஜூன் 2008 தேசிய மலேரியா ஒழிப்பு மாதமாக‌ அனுச‌ரிக்க‌ப்ப‌டுவ‌தை தொட‌ர்ந்து காவ‌ல்கார‌ன்பட்டி ஆர‌ம்ப‌ சுகாதார‌ நில‌ய‌த்தின் சார்பாக ப‌ள்ளி மாண‌வ‌ மாண‌விக‌ளைக் கொண்டு விழிப்புண‌ர்வுப் பேர‌ணி ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌து.ம‌லேரியா தொட‌ர்பான‌ வினாடி வினா நிக‌ழ்ச்சி மாண‌வ‌ர்க‌ளுக்கு இடையே நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.டாக்டர்.சவுமியா அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி மற்றும் பேரணியை சுகாதார ஆய்வாளர் திரு.வாசுதேவன் அவர்களும் கிராம சுகாதார செவிலியர்களும் முன்நின்று நடத்தினர்.

22 October 2008

பொது சுகாதாரம் தொடர்பான டாக்டர்.புருனோ வின் வலைப்பக்கம்

சமீபத்தில் ஒரு வலைப்பக்கம் பார்க்க நேர்ந்தது. டாக்டர்.புருனோ அவர்களின் அனுபவங்கள், மற்றும் மருத்துவத் துறை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு.நீண்ட நாட்களாக தமிழில் இத்தகைய வலை பக்கங்களைப் பார்க்க மாட்டோமா? என நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தேன்.நல்ல வரவு.உங்களுக்கும் பரிந்துரை செய்கிறேன்
டாக்டர்.புருனோ வின் வலைப்பக்கம்

17 October 2008

உணவு கலப்படத்தடுப்புத் திட்டம்




22.07.2008 அன்று சென்னை முதல் கன்யாகுமரி வரை ஒரே நாளில் பால் பொருட்களில் கலப்பட‌த்தைக் கண்டுபிடிப்பதற்காக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறையினரால் பெரிய அளவிலான ரெய்டு நடத்தப்பட்டது.
இந்தியாவிலேயே இப்படி ஒரே நேரத்தில் மாநிலம் முழுதும் நடத்தப்பட்ட ரெய்டு இது ஒன்றாகத் தான் இருக்கும்.
இந்த ரெய்டு தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இணை இயக்குநரும் உணவு கலப்படத்த‌டுப்புத்திட்ட அதிகாரியுமான திரு.டி.ஜெயக்குமார் அவர்கள் 5.10.2008 தினமணி கதிர் இதழுக்கு இந்த ரெய்டு பற்றியும் உணவு கலப்படத்தடுப்புத் திட்டம் ப்ற்றியும் அளித்துள்ள விரிவான பேட்டி மேலே.
தோகமலை ஆரம்ப சுகாதார நிலைய களப்பணியாளர்கள் ரெய்டின்போது slide show வாக‌ (சிலைடு ஷோ தெரிய flash player தேவை)


டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் கனவு.



எனக்கு ஒரு கனவு உண்டு அது நாடு முழுதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்க‌ள் திற‌மையான மருத்துவர்களைக் கொண்டும், மருத்துவ வசதிகளைக் கொண்டும் 100 சதவீதம் செயல்படவேண்டும் என புதுவை ஜிப்மர் மருத்துவமணையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பேசினார்.(16.10.2008 தினகரன் செய்தி)

உங்கள் கனவு நன‌வாகும் நாள் வெகு தொலைவில் இல்லை அய்யா.

காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய தினம் 06.05.2008


தோகமலை வட்டாரத்தில் மூன்று ஆரம்ப சுக்காதார நிலையங்கள் உள்ளன.
1. வட்டார ஆரம்ப சுகதார நிலையம் தோகமலை
2. ஆரம்பசுகாதார நிலயம் காவல்காரன்பட்டி
3. ஆரம்பசுகாதார நிலயம் சேப்ளாப்பட்டி


06.05.2008 அன்று
ஆரம்ப சுகாதார நிலைய தினம்
காவல்காரன்பட்டி ஆரம்பசுகாதார நிலயத்தில்
கொண்டாடப்பட்டது .அன்றய தினம் மக்கள் பிரதிநிதிகளை வரவழைத்து நலப்பணிகளுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது செய்யப்பட்டு வரும் சிறப்பு சேவைகள் பற்றி பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
பிறப்புச் சான்றிதழ்கள் வழஙப்பட்டன.ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தினுள் மரக்கன்றுகள் நடப்பட்டன.மருத்துவ அலுவலர் திருமதி.தேன்மொழி அவர்கள் தலைமயில் நடைபெற்ற இவ் விழாவில் பகுதிக்கு உட்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை சுகாதார ஆய்வளர்கள் திரு.பி.முத்தையன், திரு.எஸ்.வாசுதேவன், அகியோர் செய்திருந்தனர்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் இளம் சிறார் இருதய பாதுகாப்பு திட்டம்


படத்தில் உள்ள இச் சிறுமி கரூர் மாவட்டம் தோகமலை வட்டாரத்திற்கு உட்பட்ட அ.உடயாபட்டி கிராமம் காலனியை சேர்ந்த திரு.ராஜா /மஞ்சுளா தம்பதியரின் புதல்வி.இவர்கள் வருட வருமானம் ரூ.12000/ க்கு உட்பட்ட வறுமை கோட்டிற்கு உட்பட்ட விவசயக்கூலிகள்.அ.உடயாப்பட்டியில் உள்ள பள்ளியில் இச்சிறுமி படித்து வரும் போது தோகமலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவால் பள்ளி சிறார் நலவாழ்வு திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வின்போது இவருக்கு இருதய கோளாறு இருந்தது கண்டறியப்பட்டது.03.06.2008 ல் கரூரில் நடைபெற்ற மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் இளம் சிறார் இருதய பாதுகாப்பு திட்ட மருத்துவ முகாமில் இச்சிறுமிக்கு (வி.எஸ்.டி பி கிரேடு) அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு சென்னை மரு.கே.எம்.செரியன் ஹார்ட் பவுன்டேஷன் ல் 27.08.2008 அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.தற்போது இச்சிறுமி நல்ல நிலையில் உள்ளார்.இதற்காக இச்சிறுமியின் குடும்பத்தார்க்கு எந்த செலவும் இல்லைமுழுக்க முழுக்க அரசே போக்குவரத்து செலவு உட்பட அனைத்தயும் செய்துள்ளது. இதே போல் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள மற்ற நான்கு மாணவர்களின் புகப்படம்சிலைடுஷோவக இங்கே.

15 October 2008

சர்வதேச கைகள் கழுவும் தினம் 15/10/2008

15/10/2008 சர்வதேச கைகள் கழுவும் தினம் அனுசரிக்கப்பட்டது.ஆரம்ப சுகாதார நிலயத்திற்கு வந்திருந்த பயனாளர்களுக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கும் சோப்பினால் கைகழுவுவதின் முக்கியத்துவத்துவம் பற்றியும் ,கைகழுவும் முறை பற்றியும் மருத்துவ அலுவலர் ,செவிலி, சமூக சுகாதார செவிலி,மற்றும் பகுதி சுகாதார செவிலியர்கள் எடுத்து கூறினர்.வட்டார மருத்துவ அலுவலர் திரு.பாரதிராஜா,சமூக‌.சு.செவிலி திருமதி.நாகராணி,பகுதி சு.செவிலி திருமதி பங்கஜம்,செவிலியர் திருமதி.சாந்தி,மற்றும் கண்காணிப்பாளர் கலந்துகொண்டோம்.

07 October 2008

தொழு நோய் பற்றிய விழிப்புணர்வு கலைக்குழு

இன்று தொழு நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டுஒரு கலைக்குழு ஆ.சு.நி.க்கு வந்திருந்தது.தொழுநோய் பற்றிய பல தகவல் களை மிக யதார்தமாக ஒரே ஒரு மைக் வைத்து கொண்டு பர்வையாளர்களை தங்கள் பக்கம் கவர்ந்து கவனிக்கச் செய்துவிடும் லாவகம் அபாரம்.கணவன் மனைவி பாத்திரஙளை ஏற்று நடித்த இருவரும் நடிக்க வில்லை. ஆனால் ஒலிபெருக்கியில் பேசும்போது நடிப்பது போனற ஒரு நளினம்.கிட்ட தட்ட டப்பிங் கலை.உடலில் ஏற்படும் தேமல்கள் பற்றி பொது மக்களிடம் ஊள்ள அறியாமை என்ன என்பதை (எச்சிதழும்பு,அதிர்ஷ்டதழும்பு) நகைச்சுவயுடன்விள‌க்கியதோடு . அறிகுறி உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன, யாரை தொடர்பு கொள்ள வேண்டும், போன்ற பல தகவல்களை அற்புதமான எற்ற இறக்க வசனங்களுடன் நடித்த பாங்கு நன்றாய் யிருந்தது.நிகழ்சி ஏற்பாடுகளை திரு.டி.ஜெயராமன் என்.எம்.ஸ். அவர்கள் செய்திருந்தார்.மருத்துவ அலுவலர்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர்,சமூக சுகாதார செவிலி,கண்காணிப்பளர் ஆகியோர் ந்கழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

02 September 2008

டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்

டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள கர்பிணி பெண்களுக்கு

கருவிலே வளரும் சிசு உருவுடனும் திருவுடனும் வளர்ந்திட கர்ப்பிணித்தாய்வலிவோடும் பொலிவோடும் வாழ்ந்திட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதிஉதவித்திட்டத்தின் கீழ் நிதி உதவி அளிக்கப்படுகிறது றது. இத்திட்டத்திற்கென ரூ.400கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2006 ஆம் ஆண்டில் 2,41,095 கர்ப்பிணிகளும்,2007 ஆம் ஆண்டில் 5,62,420 கர்ப்பிணித்தாய்மார்களும் இதுவரைபயனடைந் திருக்கிறார்கள்.

01 September 2008

ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பணிகள்

இது கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகளை தெரிவிக்கும் ஒரு முயற்சி . இது அதிகாரப்பூர்வமான வலைபூ அல்ல .

ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கும் விதம்,கள‌ப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகளை தெரிவித்தல்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளையும் சேமிக்கும் நல்ல நோக்கில் தான் இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.