07 December 2015

சென்னை வெள்ளம் மருத்துவ நிவாரணக்குழு









மருத்துவ நிவாரணக்குழு இரண்டாவது அணி இதோ இப்போது புறப்படப் போகிறது.கொட்டும் மழையில் வழியனுப்பி வைக்க போய்க்கொண்டிருக்கிறேன். ஒரு போர் வீரனைப்போல மழைக்கோட்டையும் துணிமணிகளையும் கையில் எடுதுக்கொண்டு கிராமங்களில் இருந்து வந்து நிற்கும் இவர்கள் தெய்வங்கள். துறையில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கான அழைப்பை இயக்குனர் டாக்டர்.குழந்தைசாமி அவர்கள் கொடுத்தபோது கொஞ்சம் மலைத்தேன். யாரும் முன்வருவார்களா? என்று. எல்லோரைப் போல அரசு அலுவலர்கள் பற்றிய பொது புத்தியுடன். இரண்டு மணி நேரத்தில் நான்,நீ என் போட்டி போட்டுக்கொண்டு பெயர் கொடுத்தார்கள்.குறிப்பாக பெண்கள் கிராம சுகாதார செவிலியர் களின் எண்ணிக்கை அதிகம். அமைச்சுப் பணியாளர்களுக்கான அழைப்பு இல்லாதது இவர்களுடன் பங்கேற்க முடியவில்லியே என்ற ஏக்கத்தை தருகிறது.என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்துங்கள். பொது சுகாதாரத் துறையில் பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன்.

08 September 2015

ரூ. 276 கோடியில் புதிய கட்டடங்கள்

சுகாதாரத் துறைக்கு ரூ. 276 கோடியில் புதிய கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

தமிழகத்தில் ரூ. 276.38 கோடியில் சுகாதாரத் துறை சார்ந்த பல்வேறு கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
 சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த கட்டடங்களை காணொலிக் காட்சியின் மூலம் அவர் திறந்து வைத்தார்.
 சென்னையில்...சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 3.77 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை, நரம்பியல் சிறுநீரகவியல் ஆகிய சிகிச்சைப் பிரிவுகள், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நுண்ணுயிரியல் ஆய்வகக் கட்டடம், அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 6. 37 கோடியில் கட்டடம், எழும்பூர் மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவமனை செவிலியர்கள், செவிலியர்கள் மாணவர்களுக்கு ரூ. 2.70 கோடியில் விடுதிக் கட்டடங்கள், கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து, ஆராய்ச்சி நிலையத்தில் ரூ. 1.2 கோடியில் நோய் எதிர்ப்புத் திறன் கண்டறியும் ஆய்வகக் கட்டடம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.
 புற நோயாளிகள் பிரிவு: பெரியகுளம், ஆண்டிபட்டி, செஞ்சி, திருச்செந்தூர், பொள்ளாச்சி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைகள், ஈரோடு, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ரூ. 13.50 கோடியில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்கம், அறுவைச் சிகிச்சைக்குப் பிறகான கவனிப்பு வார்டு, பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு, மருந்துப் பொருள்கள் கிடங்கு, அவசர கால தாய் சேய் தீவிர சிகிச்சைப் பிரிவு, நவீன சமையல் கூடம், யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருந்தகம், அடிப்படை கண் சிகிச்சைப் பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பிரிவு, குழந்தைகள் பிரிவு ஆகியவற்றுக்கான கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
 ஹோமியோபதி: மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் ரூ. 1.49 கோடியில் ஆண்கள் விடுதி, நவீன சமையல் கூடம்,
 பார்வையாளர்கள் காத்திருப்புக் கூடம் ஆகியவை திறக்கப்பட்டன.
 பொது சுகாதாரம், ஊரக நலப்பணிகள்: பொது சுகாதார இயக்ககத்துக்கு ரூ. 9 கோடியில் அலுவலகக் கட்டடம், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ரூ. 26.69 கோடியில் அவசர கால மேலாண்மை கட்டுப்பாட்டு மையம், மருத்துவமனை நிர்வாகம், சுகாதார அமைப்புகள் பயிற்சி நிலையகக் கட்டடம் ஆகியவையும் திறக்கப்பட்டுள்ளது.
 இது தவிர நீலகிரி, சேலம், தஞ்சாவூர், கரூர், மதுரை, நாகப்பட்டினம், தருமபுரி, விழுப்புரம், கன்னியாகுமரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ரூ. 15.25 கோடியில் 15 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், 22 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ. 3.64 கோடியில் கட்டப்பட்டுள்ள செவிலியர் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
 அடிக்கல்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரூ. 75 கோடியில் அடுக்குமாடி கட்டடம், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்
 ரூ. 58.65 கோடி செலவில் புறநோயாளிகள், முடநீக்கியல் பிரிவுக்கான கட்டடம், சிறுநீரகவியல் அறுவைச் சிகிச்சை, சிறுநீரகவியல் பிரிவுகளுக்கு ரூ. 19.65 கோடியில் கட்டடம், சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ரூ. 6 கோடியில் விடுதிக் கட்டடம் என மொத்தம் ரூ. 159.30 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
 புதிய கருவிகள்: சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் ரூ.9.59 கோடியில் நிறுவப்பட்டுள்ள "சி.டி. ஸ்டிமுலேட்டர்', டிஜிட்டல் எக்ஸ்ரே, புறநாடித் துடிப்புக் கருவி, மிகையளவு அண்மைக் கதிர்வீச்சுப் பிரிவு ஆகிய மருத்துவ உபகரணங்களின் சேவையையும் முதல்வர் தொடக்கி வைத்தார்.
 ரூ. 200 கோடியில் புதிய மருத்துவக் கல்லூரி, ரூ. 107.48 கோடியில் புதிய கட்டடங்கள், ரூ. 9.59 கோடியில் புதிய உபகரணங்கள், ரூ. 159.30 கோடியில் புதிய கட்டடங்களுக்கான அடிக்கல் என முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தும், அடிக்கல் நாட்டிய மொத்த திட்டங்களின் மதிப்பு ரூ.276.38 கோடியாகும்.
போதை மறுவாழ்வு மையம்!
 தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ. 6.52 கோடியில் போதை மறுவாழ்வு மையங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
 விழுப்புரம், தருமபுரி, தேனி ஆகிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதை மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 6.02 கோடியில் அவசர கால தாய் சேய் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம், போதை மறுவாழ்வு மையம், தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 1 கோடி செலவில் போதை மறுவாழ்வு மையம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 1.50 கோடியில் போதை மறுவாழ்வு மையம், வைரஸ் ஆராய்ச்சி பரிசோதனைக் கூடம் ஆகியவையும் திறக்கப்பட்டுள்ளன. இந்த போதை மறுவாழ்வு மையங்கள் அனைத்தும் மருத்துவக் கல்லூரியின் உளவியல் சிகிச்சைத் துறையின் கீழ் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அம்மா குழந்தை நல பரிசுப்பெட்டகம்

ரூ.1000 மதிப்பில் 16 பொருட்களுடன் “அம்மா குழந்தை நல பரிசுப்பெட்டகம்”.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பில் 16 வகையான பொருட்களை வழங்கும் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா 07.08.2015 அன்று தொடங்கி வைத்தார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ‘அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்' என்ற திட்டத்தை அறிவித்தார். அதன் படி, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.1,000 மதிப்பில் 16 வகையான பொருட்களுடன் அம்மா குழந்தைநல பரிசுப்பெட்டகம் வழங்கப்படும்



குழந்தை படுக்கை, குழந்தை பாதுகாப்பு வலை, குழந்தை நாப்கின், 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா, பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பூ, சோப்பு பெட்டி, சோப்பு, நகவெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, சுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி லிட்டர் அளவு கைகழுவும் திரவம், பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு, பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தாய்ப்பாலை அதிகரிக்கவும் ‘சவுபாக்கியா' சுண்டிலேகியம் என மொத்தம் 16 பொருட்கள் இருக்கும்.


10 July 2015

Singapore International Foundation லிருந்து உயரலுவலர்கள் இன்று திருச்சிக்கு வந்திருந்தனர், மகாத்மாகாந்தி மருத்துவமணையில் நடக்க இருக்கும் பயிற்சி தொடர்பாக பயிற்சி நடக்க உள்ள அறை களை பார்வையிட்டனர். அருகில் இருக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.திட்டமிடுதலில் அவ்வளவு துல்லியம். இருக்கைகள் எப்படி இருக்க வேண்டும், டேபிள் எந்த அளவு இருக்க வேண்டும், மைக், ஸ்கிரீன் என ஒவ்வொன்றிலும் தனி கவனம் எடுத்துக்கொண்டனர். எனக்கு இது புது அனுபவமாக இருந்தது. கடந்த ஒரு வருட காலத்தில் இது மூன்றாவது முறை இவர்கள் வருவது.3 நாட்கள் நடக்க இருக்கும் பயிற்சிக்கு இவ்வளவு சிரத்தைஎடுத்துக்கொள்ளும் இவர்கள் பணி ஆச்சரியப்படுத்துகிறது. Jane Lee,Manager, Communications, Communications & Corporate Devolopement Division, Thavamalar Balakrishnan Manager Volunteer Cooperation, Programmes Division.i









08 April 2015

                                              இந்திரதனுஷ்- தடுப்பூசி முகாம்
( ஏப்.7 முதல் ஏப்.13 வரை நடைபெறுகிறது.)
தமிழகத்தில் முதல் கட்டமாக 8 மாவட்டங்களில் காசநோய், போலியோ, மஞ்சள் காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரனஜன்னி, தட்டம்மை, நிம்மோனியா மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு இந்திரதனுஷ் தடுப்பூசி மருந்து முகாம் ஏப்ரல் 07 முதல் 13 வரை ஒரு வாரம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு தடுப்பூசி போடாமல் விடுபட்ட குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் இம்முகாமுக்கு தவறாமல் வந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இந்திரதனுஷ் தடுப்பூசி மருந்து முகாம் 07-4-2015 அன்று முதல் 13.04.2015 வரை முதல் கட்டமாக கோயம்புத்தூர், திருச்சி, காஞ்சிபுரம், திருநெல்வேலி, மதுரை, வேலூர், திருவள்ளூர் மற்றும் விருதுநகர் ஆகிய எட்டு மாவட்டங்களில் நடைபெற உள்ளது. மாவட்டங்களில் தடுப்பு மருந்து மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பிரத்யேகமாக நிறுவப்பட்டு தடுப்பூசி வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய அம்சங்கள்
1. இந்திரதனுஷ் தடுப்பூசி மருந்து வழங்கும் மையம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும்.
2. அனைத்து 0-2 வயதிற்குட்பட்ட விடுபட்ட குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் 07.04.2015 முதல் 13.04.215 வரை தடுப்பூசி வழங்கப்படும்.
3. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி முகாம் நாட்களில் தடுப்பூசி மருந்து கொடுக்கப்படும்.
4. 0-2 வயதுள்ள தடுப்பூசி விடுபட்ட குழந்தைகளுக்கு முகாம் நாட்களில் தடுப்பு மருந்து கொடுப்பது அவசியம்.
5. இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் வசிக்கும் இடத்திலேயே தடுப்பூசி மருந்து வழங்கப்படும்.
தொலைதூர பகுதி வாழ் குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்பாடு:
நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்கப்பட உள்ளது.






தடுப்பூசி மருந்து முகாமில் ஈடுபடும் பணியாளர்கள் 07.04.2015 – 13.04.2015 அன்று இந்திரதனுஷ் தடுப்பூசி மருந்து முகாமில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள்(கிராம சுகாதார தன்னார்வலர்கள்) மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள்.
தமிழ் நாட்டில் போலியோ, தொண்டை அடைப்பான், இரணஜன்னி போன்ற நோய்கள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை நோய் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். அனைத்து தாய்மார்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
“இந்த பூமியிலிருந்து காசநோய், போலியோ, மஞ்சள் காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், இரணஜன்னி, நிமோனியா காய்ச்சல், தட்டம்மை மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம்”




14 November 2014

கருத்தடை முகாம் சட்டீஸ்கர்

சட்டீஸ்கர் அரசு நடத்திய கருத்தடை முகாமில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்களில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுமார் 10 பெண்கள் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக கருத்தடை சிகிச்சை செய்த 4 மருத்துவர்களை சட்டீஸ்கர் அரசு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.இம்முகாம் தனியாராலோ அல்லது லாப நோக்கிலோ நடத்தப்படவில்லை.நெமிசந்த் ஜெயின் புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கடந்த 8-ஆம் தேதி மாநில சுகாதாரத்துறை சார்பில் பெண்களுக்கான கருத்தடை முகாம் நடத்தப்பட்டது.முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொற்றுக் கோளாறு ஏற்பட்டதே இந்த அசம்பாவிதத்துக்கு காரணம் என்று மாநில சுகாதாரத் துறை துணைத் தலைவர் அமர் சிங் தெரிவித்துள்ளார்.பல பெண்கள் மரணமடைந்துள்ளனர்.இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத்தொகையாக தலா 2 இலட்சம் அரசு வழங்கியுள்ளது. இறந்த பிறகு வழங்கும் இத்தகைய தொகையினை முகாம் நடத்தவும் தொற்று ஏற்படாவண்ணம் முன்னேச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் பயன் படுத்தியிருந்தால் இத்தகைய அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம். போதிய ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களை பணியமர்த்தாததும் முகாம் நடத்துவதற்கு போதுமான அளவிற்கு நிதி வழங்காததும், இத்தகைய முகாம்களுக்கு இலக்கு நிர்ணயித்து அதனை அடைய அலுவலர்களை நிர்பந்திப்பதும், இத்தகைய மரணங்களுக்கு காரணமாக இருக்கின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.இங்கு யானை வாங்குபவர்களுக்கு அங்குசம் வாங்கத் தெரிவதில்லை. போதுமான மருந்துகள், கையுறைகள்,கிருமி நாசினிகள் வழங்கப்படுவதில்லை.இது போன்ற முகாம்களுக்கு செலவிடப்படும் தொகையினை விட கூடுதலனாதொகை அரசியல் வாதிகள் கலந்துகொள்ளும் முகாம் துவக்க விழாவிற்குப் பயன்படுத்தப் படுகிறது. சிக்கனம் எதில் வேண்டும் என்பதை அரசுகள் உணரவேண்டும். தமிழகத்தில் சென்றவருடம் வட்டார அளவில் ஒரு ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்பட்ட ” சிறப்பு மருத்துவ முகாம்” இந்த ஆண்டு ஒரு வட்டாரத்திற்கு ”மூன்று” முறை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்ற வருடம் ஒரு வட்டாரத்திற்கு வழங்கப்பட்ட நிதியிலேயே என்பது தான் விந்தை. ”யானை வாங்கனும் பூனை விலையில் “இந்த நிதிக் குறைப்பு எங்கு போய் முடியும்? பந்தல் போடவும், சாப்பாடு போடவும் உள்ளூர் பிரபலங்களில் ஸ்பான்சர்களுக்காக அலைய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். பிறகு சிறப்பு மருத்துவமுகாம்களின் தரம் எப்படி இருக்கும்? இதன் அனைத்து பிரதிபலிப்புகளும் முகாம்களை நம்பி வரும் அப்பாவி மக்களுக்கு அளிக்கப்படும் சேவையில் தானே பிரதிபலிக்கும். நடை முறை கொள்கைகளையும் சிக்கன நடவடிக்கைகளையும் திருத்தி அமைக்காத வரையில் இது போன்ற அவலங்கள் தொடரத்தான் செய்யும்.

13 November 2014

"எபோலா" ஆய்வுக்குழு வருகை.

விமான நிலையத்தில் வந்திறங்கும் எபோலா நோய்கண்டவர்களை தனிமை படுத்திவைக்கும் அறைதொடர்பான ஆய்வுமேற்கொள்ள திருச்சி கி.ஆ.பெ.மருத்துவக்கல்லூரிக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமணையிலிருந்து குழுவினர் 10.11.2014 வந்தனர்.உடன் இணை இயக்குனர் எபிடெமிக் திரு.பாலசுப்ரணனியன் மற்றும் துணை இயக்குனர் (லேப்) ஆகியோரும் வந்திருந்தனர்.


                                மருத்துவக்கல்லூரியில் டீன் அறையில் கூட்டம்


10 October 2014

DA July 2014

DA G.O 245 dt.10.10.2014 from July 2014
அகவிலைப்படி ஜீலை 2014 முதல் அரசு ஆணை (நிதி) எண் 245 நாள் 10.10.2014
http://cms.tn.gov.in/sites/default/files/gos/fin_e_245_2014.pdf

09 October 2014

மண்டல அளவிலான தொற்றுநோய்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டம்

29.09.2014 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில்  மண்டல அளவிலான தொற்றுநோய்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. . (திருச்சி, புதுக்கோட்டை,அறந்தாங்கி, திருவாரூர், நாகப்பட்டினம்,தஞ்சாவூர் உள்ளடக்கியது)

















07 September 2014

பல்லாண்டு வாழ்க வளமுடன்.

திருச்சி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் எங்களுடன் பணிபுரியும் சகோதரன் இளநிலை உதவியாளர் திரு.மா.மகேஸ்வரன் B.Tech.MBA, அவர்களுக்கு N.சுசீலா அவர்களுடன் இன்று 07.09.2014 திருச்சியை  அடுத்த  மணச்சநல்லூர் கோபால் திருமண மண்டபத்தில் திருமணம் இனிதே நடைபெற்றது.மணமக்கள் எல்லா வளங்களும் பெற்று இனிதே வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.