14 November 2014

கருத்தடை முகாம் சட்டீஸ்கர்

சட்டீஸ்கர் அரசு நடத்திய கருத்தடை முகாமில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்களில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுமார் 10 பெண்கள் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக கருத்தடை சிகிச்சை செய்த 4 மருத்துவர்களை சட்டீஸ்கர் அரசு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.இம்முகாம் தனியாராலோ அல்லது லாப நோக்கிலோ நடத்தப்படவில்லை.நெமிசந்த் ஜெயின் புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கடந்த 8-ஆம் தேதி மாநில சுகாதாரத்துறை சார்பில் பெண்களுக்கான கருத்தடை முகாம் நடத்தப்பட்டது.முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொற்றுக் கோளாறு ஏற்பட்டதே இந்த அசம்பாவிதத்துக்கு காரணம் என்று மாநில சுகாதாரத் துறை துணைத் தலைவர் அமர் சிங் தெரிவித்துள்ளார்.பல பெண்கள் மரணமடைந்துள்ளனர்.இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத்தொகையாக தலா 2 இலட்சம் அரசு வழங்கியுள்ளது. இறந்த பிறகு வழங்கும் இத்தகைய தொகையினை முகாம் நடத்தவும் தொற்று ஏற்படாவண்ணம் முன்னேச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் பயன் படுத்தியிருந்தால் இத்தகைய அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம். போதிய ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களை பணியமர்த்தாததும் முகாம் நடத்துவதற்கு போதுமான அளவிற்கு நிதி வழங்காததும், இத்தகைய முகாம்களுக்கு இலக்கு நிர்ணயித்து அதனை அடைய அலுவலர்களை நிர்பந்திப்பதும், இத்தகைய மரணங்களுக்கு காரணமாக இருக்கின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.இங்கு யானை வாங்குபவர்களுக்கு அங்குசம் வாங்கத் தெரிவதில்லை. போதுமான மருந்துகள், கையுறைகள்,கிருமி நாசினிகள் வழங்கப்படுவதில்லை.இது போன்ற முகாம்களுக்கு செலவிடப்படும் தொகையினை விட கூடுதலனாதொகை அரசியல் வாதிகள் கலந்துகொள்ளும் முகாம் துவக்க விழாவிற்குப் பயன்படுத்தப் படுகிறது. சிக்கனம் எதில் வேண்டும் என்பதை அரசுகள் உணரவேண்டும். தமிழகத்தில் சென்றவருடம் வட்டார அளவில் ஒரு ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்பட்ட ” சிறப்பு மருத்துவ முகாம்” இந்த ஆண்டு ஒரு வட்டாரத்திற்கு ”மூன்று” முறை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்ற வருடம் ஒரு வட்டாரத்திற்கு வழங்கப்பட்ட நிதியிலேயே என்பது தான் விந்தை. ”யானை வாங்கனும் பூனை விலையில் “இந்த நிதிக் குறைப்பு எங்கு போய் முடியும்? பந்தல் போடவும், சாப்பாடு போடவும் உள்ளூர் பிரபலங்களில் ஸ்பான்சர்களுக்காக அலைய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். பிறகு சிறப்பு மருத்துவமுகாம்களின் தரம் எப்படி இருக்கும்? இதன் அனைத்து பிரதிபலிப்புகளும் முகாம்களை நம்பி வரும் அப்பாவி மக்களுக்கு அளிக்கப்படும் சேவையில் தானே பிரதிபலிக்கும். நடை முறை கொள்கைகளையும் சிக்கன நடவடிக்கைகளையும் திருத்தி அமைக்காத வரையில் இது போன்ற அவலங்கள் தொடரத்தான் செய்யும்.

13 November 2014

"எபோலா" ஆய்வுக்குழு வருகை.

விமான நிலையத்தில் வந்திறங்கும் எபோலா நோய்கண்டவர்களை தனிமை படுத்திவைக்கும் அறைதொடர்பான ஆய்வுமேற்கொள்ள திருச்சி கி.ஆ.பெ.மருத்துவக்கல்லூரிக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமணையிலிருந்து குழுவினர் 10.11.2014 வந்தனர்.உடன் இணை இயக்குனர் எபிடெமிக் திரு.பாலசுப்ரணனியன் மற்றும் துணை இயக்குனர் (லேப்) ஆகியோரும் வந்திருந்தனர்.


                                மருத்துவக்கல்லூரியில் டீன் அறையில் கூட்டம்


10 October 2014

DA July 2014

DA G.O 245 dt.10.10.2014 from July 2014
அகவிலைப்படி ஜீலை 2014 முதல் அரசு ஆணை (நிதி) எண் 245 நாள் 10.10.2014
http://cms.tn.gov.in/sites/default/files/gos/fin_e_245_2014.pdf

09 October 2014

மண்டல அளவிலான தொற்றுநோய்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டம்

29.09.2014 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில்  மண்டல அளவிலான தொற்றுநோய்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. . (திருச்சி, புதுக்கோட்டை,அறந்தாங்கி, திருவாரூர், நாகப்பட்டினம்,தஞ்சாவூர் உள்ளடக்கியது)

















07 September 2014

பல்லாண்டு வாழ்க வளமுடன்.

திருச்சி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் எங்களுடன் பணிபுரியும் சகோதரன் இளநிலை உதவியாளர் திரு.மா.மகேஸ்வரன் B.Tech.MBA, அவர்களுக்கு N.சுசீலா அவர்களுடன் இன்று 07.09.2014 திருச்சியை  அடுத்த  மணச்சநல்லூர் கோபால் திருமண மண்டபத்தில் திருமணம் இனிதே நடைபெற்றது.மணமக்கள் எல்லா வளங்களும் பெற்று இனிதே வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

































23 August 2014

அஞ்சலி

                                                                        அஞ்சலி





பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் ( இம்யூனிசேஷன்) டாக்டர் திரு.என்.அய்யனார் அவர்கள் இன்று 23.08.2014 அதிகாலை சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் மாரடைப்பினால் காலமானார்.என்ற செய்தி ஏ.பி.எம். டாக்டர் தினேஷ் அவர்கள் மூலம் குறுஞ்செய்தியாகக் கிடைக்கப் பெற்றது.டாக்டர் அய்யனார் அவர்களின் இழப்பு துறைக்கு ஈடுசெய்ய முடியாத இடைவெளியை ஏற்படுத்தி விட்டது.
    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை பாலுமகேந்திரா கேப் என பார்த்தவுடனே கொஞ்சம் அசத்தும் தோற்றத்துக்குச் சொந்தக்காரர்.எளிமையான குடும்பத்திலிருந்து படித்து இந்த நிலைக்கு உயர்ந்தவர்.இவர் மதுரை மருத்துவக்கல்லூரியில் படித்தபோது இவருடன் பழகும் வாய்ப்பைப் பெற்ற நண்பர் செல்வமோகனக்குமார் கண்மருத்துவ உதவியாளர் அவர்கள் இவரது எளிமையினைப்பற்றி பிரஸ்தாபித்துக் கூறுவார்.(சைக்கிளில் இருவரும் சாப்பிட மெஸ்ஸுக்கு செல்லுவார்களாம்.)
 தருமபுரி துணை இயக்குனராக இருந்தபோது மாநிலத்திற்கே முன்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.ஏனைய மாவட்டங்களில் இருந்து ஒரு குழுவாக மருத்துவர்களை தர்மபுரி மாவட்டத்திற்கு அனுப்பி ஆரம்ப சுகாதார நிலையங்களை பார்வையிட்டு வர துறை கேட்டுக்கொண்டது.
                      தஞ்சை மருத்துவக்கல்லூரியில் 25.2.14 அன்று டாக்டார் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டம் தொடர்பான மண்டல ஆய்வுக்கூட்டம் நடந்தது.இதில் இணை இயக்குனர் திரு.அய்யனார் அவர்கள் உரை யினை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.சப்ஜக்ட் தவிர வேறு எங்கும் திசைதிரும்பாமலும் அதே நேரத்தில் பார்வையாளர்களைச் சோர்வடையச் செய்யாமலும் பேசுபவர்கள் அபூர்வம்.5000 மக்கள் தொகை கொண்ட ஒரு துணை சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலி ஒருநாளைக்கு எவ்வளவு பிக்மி எண்ட்ரி போடவேண்டியிருக்கும் என வரையறுத்துச் சொன்ன விதம் எளிதில் பிடிபட்டது.ஒரு பேராசிரியரின் நுனுக்கம் இவரது பேச்சில் இருந்தது.


நான் அவரிடம் பணிபுரிந்ததில்லை.11.4.13 நக்கீரன் பத்திரிக்கையில் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்தில் உள்ள குழப்பங்களை எழுதி துறையையும் பணியாற்றுபவர்களையும் சாடியிருந்தனர்.நான் அதற்கு ஒரு மறுப்புறையை (லிங்க்) எனது வலைப்பூவில் எழுதியிருந்தேன்.அதனைப்படித்த அவர் ஒரு நண்பர்மூலமாக வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.அப்போது அவர் இம்யூனிசேஷன் இணைஇயக்குனராக இருக்கவில்லை என நினைக்கிறேன்.
நல்ல நிர்வாகியை துறை இழந்து விட்டது.
இன்று காலை செல்வமோகனக்குமார் அவர்கள் தொலைபேசியில் இச்செய்தியை கூறிவிட்டு இவ்வளவு உயர் பதவியில் இருக்கும் மருத்துவர்களே தங்கள் உடல் நலத்தை முறையாக செக்கப் செய்துகொள்ளாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது என்றார். உண்மையில் யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

29 July 2014

மாணவ–மாணவிகளுக்கு இரும்பு சத்து மாத்திரை

ரத்தசோகை நோயை தடுக்கும் பொருட்டு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12 வரை பயிலும் மாணவ–மாணவிகளுக்கு இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்.19.06.2014











Nirmaladevi Superintndent Retirement 30.06.2014

Veeramachanpatty PHC, Trichy District, Smt,Nirmaladevi Superintndent Retirement 30.06.2014 Function Photos







MMU

Hospital on wheels vehicle streamed for utilisation by Thuraiyur constituency honourable MLA Tmt.P.INDIRA GANDHI MADAM after completion of infra structural modernisation works. Function was held at GPHC , VEERAMACHANPATTI,THURAIYUR BLOCK ,TRICHY DT on 12/07/2014