PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
14 January 2010
பொங்கல் 2010
11 January 2010
போலியோ 2010
- கரூர்: கரூர் பஸ்நிலையத்தில் போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாமை கலெக்டர் உமாமகேஸ்வரி துவக்கி வைத்தார்.
- பின்னர் அவர் பேசும் போது, கரூர் மாவட்டத்தில் 90 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப் படவுள்ளது. விடுபட்டவர் களுக்கு வீடுதேடி சென்று சொட்டு மருந்து வழங்கும் பணி இன்று (11ம் தேதி) முதல் 3 நாட்கள் நடை பெறும். கரூர் மாவட்டத்தை போலியோ இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
- சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சதாசிவம், நகராட்சித் தலை வர் சிவகாமசுந்தரி, ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜேந் திரன், துணை ஆளுநர் ஜெயபாலன், கரூர் ரோட்டரி கிளப் தலைவர் காளி யப்பன், ஒருங் கிணைப் பாளர் குணசேகர், செயலாளர் முத்துசாமி, பொருளாளர் ஆனந்தா சேகர், கரூர் தாசில்தார் தர்மராஜ் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
09 January 2010
அஞ்சலி
எங்களுடன் பணியாற்றும் காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சார்ந்த கீழவெளியூர் துணை சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலி திருமதி.ஏ.பாப்பாத்தி அவரகளின் புதல்வி செல்வி விஷ்ணுப்பிரியா 06.01.2010 அன்று ஊத்தங்கரையில் சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 04.01.2010 அன்று புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிமாறும் நிகழ்வு நடந்தேறியது.வட்டார அளவிலான அனைத்து மருத்துவர்கள், மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.விழாவின் போது வட்டார மருத்துவ அலுவலர் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.ஊழியர்கள் சார்பாக அனைத்து மருத்துவர்களுக்கும் ஒரு சிறு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.விழாவிலிருந்து சில காட்சிகள்.