26 February 2009

February 2009 Pay Authorization

February 2009 Pay Authorization

22 February 2009

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் அனைவரும் குறிப்பாக அமைச்சுப்பணியாளர்கள், மற்றும் பொறுப்பு மருத்துவ அலுவலர்கள் இச் சட்டம் தொடர்பாக அனைத்தும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.யாருக்கு தகவல் தரவேண்டும்,யாருக்கு தரக்கூடாது,எத்தனை நாட்களுக்குள் தரவேண்டும்,அதற்கான செலவினங்கள் என்ன? வறுமைக் கோட்ட்டிற்கு கீழ் உள்ளவர்களிடம் செலவினத் தொகை வசூலிக்கலாமா?குறிப்பிட்ட நாட்களுக்குள் தகவல் தரவில்லை என்றால் தண்டனை என்ன? போன்ற பல சட்ட நுனுக்கங்களையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம். அல்லது ரெடி ரெஃப்பரன்ஸ் ஆக இச் சட்டநகல் கைவசம் வைத்திருப்பது நல்லது.
Thgaval Ariyum Urimai Guidebook_rtiact

19 February 2009

குடும்பநல மண்டல இயக்குனர் ஆய்வு



மத்திய அரசின் குடும்பநல மண்டல இயக்குனர்( Regional Director Regional office of the Health and Familywelfare,Tamilnadu & pondicheri) திரு.மரு.எஸ்.பழனிவேலு அவர்கள் 19.01.2009 அன்று தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகை தந்து ஆய்வு செய்தார்.சில புகைப்படங்கள் இங்கே.

16 February 2009

தேசிய ஊரக நல குழுமத்தின் செய்திமடல்



தேசிய ஊரக நல குழுமத்தின் செய்திமடல் வெளிவந்து விட்டது.தொகுதி 4, எண்3 ஜூலை‍ ‍ செப்டம்பர் 2008 பருவத்திற்கானது.

முக்கிய கட்டுரைகள்
1. உலக மக்கள் தொகை தினம்

2. ஜனனி சுரக்ஷா யோஜனா

3. கர்ப்ப உபகரண பெட்டி

4.பொதுத்துறை தனியார் சேவை பங்காளர் முறை

5.குடும்பக்கட்டுப்பாட்டில் ஆண்களின் பங்கேற்பு

6.பற்கள்,ஈறுகள், மற்றும் வாய்.
பொது சுகாதாரத்துறையில் பணிபுரியும் அனைவரும் படித்து பரப்ப வேண்டிய இதழ். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது

டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் படிவம்

டாக்டர்.முத்துலச்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள கர்பிணிப் பெண்களுக்கு பிரசவத்திற்கு முன் ரூ.3000 மற்றும் பிரசவத்திற்கு பின் ரூ.3000 ம் வழங்கப்படுகிறது.உழவர்பாதுகாப்பு அட்டை பெற்றுள்ள குடும்பத்து உறுப்பினர்களுக்கு தனி படிவமும்,ஏனையோருக்கு தனி படிவமும் கிராம சுகாதார செவிலியரால் வழன்க்கப்படுகிறாது.உழவர்பாதுகாப்பு அட்டை பெற்றுள்ள குடும்பத்து கர்பிணிப்பெண் கருக்கலைப்பு செய்து கொண்டால் ரூ.3000 மட்டும் வழங்கப்படும்.அதற்கான படிவம் தனியே ஊள்ளது.ஆக மொத்தம் இத் திட்டத்தின் கீழ் 3 வகையான படிவங்களில் மனுக்கள் உள்ளன.
மாதிரிகள் இங்கே.
1.வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள கர்பிணி பெண்களுக்கான படிவம்.
2.உழவர்பாதுகாப்பு அட்டை பெற்றுள்ள குடும்பத்து உறுப்பினர்களுக்கு உரிய படிவம்.
3.உழவர்பாதுகாப்பு அட்டை பெற்றுள்ள குடும்பத்து கர்பிணிப்பெண் கருக்கலைப்பு செய்து கொண்டால் அதற்கன படிவம்


வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள கர்பிணி பெண்களுக்கான படிவம்

Muthulakshmi Application Form-Revised


உழவர்பாதுகாப்பு அட்டை பெற்றுள்ள குடும்பத்து உறுப்பினர்களுக்கு உரிய படிவம்

FSSS Application Form-Revised


உழவர்பாதுகாப்பு அட்டை பெற்றுள்ள குடும்பத்து கர்பிணிப்பெண் கருக்கலைப்பு செய்து கொண்டால் அதற்கன படிவம்

FSSS Abortion Application Form-Revised

15 February 2009

கேட்ராக்ட் என்றால் என்ன?








செய்திகள் உதவி:http://vanjoor-vanjoor.blogspot.com/வாஞ்ஜுர் குணப்படுத்தக் கூடிய பார்வைக் கோளாறுகளில் முதலிடம் வகிப்பது கேட்ராக்ட் ஆகும். ஆக கண் புரை எனப்படும் கேட்ராக்ட் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுவது அவசியம்.

பார்வையிழப்பிற்கான மூல காரணங்களில் 66% குணப்படுத்தக்கூடிய அல்லது தடுக்கக்கூடிய காரணங்களால் பார்வையிழந்தவர்கள். பார்வை இழப்பிற்கான முழு முதற் காரணமாக இருப்பது கண் புரை என வழங்கப்படும் முழுமயான குணப்படுத்தக்கூடிய கேட்ராக்ட் நோய் ஆகும்.

கேட்ராக்ட் என்றால் என்ன?

கேட்ராக்ட் என்பது லத்தீன் வார்த்தை. கேட்ராக்ட் என்றால் நீர்வீழ்ச்சி என்று அர்த்தம். இங்கு நீர்வீழ்ச்சியினூடே ஒரு பொருளைப் பார்க்கும்போது கண்ணுக்குப் புலப்படும் தோற்றத்தைப் போன்ற பார்வைக் கோளாறைக் குறிப்பிடுகிறது.

கேட்ராக்ட் என்பது வயோதிகம் காரணமாகவோ, பரம்பரை, விபத்துகள், நீரிழிவு நோய் போன்ற பல காரணங்களால் கண்களில் உள்ள லென்ஸ் தனது ஒளி ஊடுருவும் சக்தியை இழப்பதினால் வரக்கூடிய தன்மை. இதன் காரணமாக லென்ஸில் ஒரு படலம் படர்ந்தது போன்ற சூழ்நிலையில் பார்வை தெளிவாகத் தெரியாமல் மங்கலாகத் தெரிகிறது. நாளடைவில் இந்நிலை அதிகரித்து முழு பார்வை இழப்பிற்கும் காரணமாகிறது. இந்த நிலையே கேட்ராக்ட் எனப்படும்.

கேட்ராக்ட் என்பது பொதுவாக வயோதிகர்களுக்கு மட்டுமே வரக்கூடிய பிரச்னையா? அதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன?

கேட்ராக்ட் பொதுவாக வயோதிகர்களுக்கு அதிகமாக வரக்கூடிய பிரச்னை என்றாலும் எல்லா வயதினர்களையும் பாதிக்கக்கூடிய கண் சார்ந்த ஒரு பிரச்னை ஆகும். குறிப்பாக,

சூரிய ஒளியிலிருந்து அதிகமாக வெளிப்படக்கூடிய புற ஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகமாக ஏற்றுக் கொள்ளும் வகையில் பணியாற்றுபவர்களுக்கும்,

 நீரிழிவு நோய் போன்ற காரணத்தினாலும்,

 கண்களில் ஏதேனும் நோய் தொற்றின் காரணமாக வீக்கம் ஏற்பட்டிருந்தாலும்,

 பரம்பரை மூலக்கூறியல் காரணங்களாலும்

 நாம் பிறப்பதற்கு முன்பே நமது தாய்க்குப் பிரசவ காலத்தில் ஜெர்மன் மீசில்ஸ் எனப்படும் அம்மை நோய் ஏற்பட்டிருந்தாலும்,

 நீண்ட காலம் ஸ்டீராய்டு மருந்துகளை உபயோகித்திருந்தாலும்

 கிட்டப்பார்வை கோளாறு நீண்ட காலம் இருந்திருந்தாலும்

 கண்களில் காயம் ஏற்பட்டிருந்தாலும்

 கண் சார்ந்த மற்ற நோய்கள் ஏதாவது இருந்தாலும்

 புகைப்பிடிப்பதாலும் இளம் வயதினர் உட்பட யாருக்கும் கண்புரை நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

 மேலும் பல்வேறு உயிர் வேதியியல் மாற்றங்கள் காரணமாகவும் கேட்ராக்ட் உருவாகலாம்.

 புரோட்டின், வைட்டமின்கள் மேலும் செலினியம் போன்ற நுண்ணிய சத்துக் குறைபாடு இருந்தாலும் கேட்ராக்ட் உருவாகலாம்.

கேட்ராக்ட்டின் அறிகுறிகள்:

ஒவ்வொருவரும் தமக்கு கேட்ராக்ட் இருக்கும்போது வெவ்வேறு அனுபவங்களைப் பெறுகிறார்கள். ஆனாலும் கேட்ராக்ட் பிரச்னை உள்ள அனைவருமே பொதுவாக கீழ்க்காணும் அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவகளை உணர்வது வழக்கம்.

 பார்க்கும் பொருட்கள் யாவும் தெளிவற்றதாகவும் அல்லது மிகவும் புகை படர்ந்த பின்னணியுடன் மங்கலாகவும் தெரிவது.

 வர்ணங்களைப் பிரித்தறிவதில் சிரமம் மற்றும் பார்க்கும் பொருட்கள் யாவும் மஞ்சள் நிறமாகத் தெரிவது.

 சாதாரண வெளிச்சத்தில் பார்வை தெளிவற்று இருப்பதும் மிக அதிகமான வெளிச்சம் தேவைப்படுவதும்.

 தொலைவில் உள்ள பொருட்களைப் பார்ப்பதில் சிரமம் ஏற்படுவது.

 பொருட்கள் இரண்டு பிம்பங்களாகத் தெரிவது.

 அடிக்கடி கண்ணாடிகளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுவது.

 படிப்பதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் சிரமப்படுவது. இந்நிலை பொதுவாக இரவில் சற்று அதிகமாக இருக்கலாம்.

 வெளிச்சத்தைச் சுற்றி வானவில் தெரிவது போல குறிப்பாக வாகனங்களின் விளக்கு வெளிச்சத்தைச் சுற்றி அவ்வாறு தெரியலாம். வர்ணங்கள் தெளிவாகத் தெரியாமல் இருக்கலாம்.

கேட்ராக்ட் ஆபரேஷன் எவ்வாறு செய்யப்படுகிறது?


தற்போது பேக்கோ எமல்ஸிபிகேஷன் என்ற புதிய முறையில் கேட்ராகக்ட் ஆபரேஷன் நடபெறுகிறது.

இந்த புதிய முறை நோயாளியின் கண்ணில் உள்ள இயற்கயான லென்ஸை அகற்றுவதற்கு, முன்பு போல 10 முதல் 12 மில்லி மீட்டர் வரை காயம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டது. இந்தப் புதிய முறையில் நோயாளியின் கண்ணுக்குள் 2 மில்லி மீட்டர் விட்டமே உள்ள ஒரு ஊசி செலுத்தப்பட்டு ஊசியுடன் இணைந்த ஒரு புதிய உபகரணத்தின் (பேக்கோ எமல்சிஃபயர்) மூலமாக கண்ணுக்குள் இருக்கும் லென்ஸ் சிறுசிறு துகள்களாக சிதைக்கப்பட்டு உறிஞ்சி வெளியேற்றப்பட்ட. பின்னர் 2 மில்லி மீட்டர் விட்டமே உள்ள துளை வழியாக செலுத்தக்கூடிய, மடித்து உள்ளே வைக்கக்கூடிய செயற்கை லென்ஸ் பொருத்தப்பட்டது.

இந்த முறையில் நோயாளி மருத்துவமணையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை தவிர்க்கப்பட்ட. மேலும் ஆபரேஷனின்போது தையல் போடுவதும் தவிர்க்கப்பட்டது. காயம் ஆறுவதற்கு அதிகபட்சம் ஒரு வார காலமே போதுமான. ஒரு வார காலத்திற்குள்ளாகவே நடைமுறை வாழ்ககைக்கு ஆபரேஷன் செய்து கொண்டவர் திரும்ப முடிகிறது.

கேட்ராக்ட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பார்வை பெற முடியுமா?

புரை உரித்தல் எனப்படும் கேட்ராக்ட் ஆபரேஷன் மூலமாக மீண்டும் பார்வை பெற முடியும்.

கேட்ராக்ட் ஆபரேஷன் செய்த பிறகு எப்போது மீண்டும் பார்வை கிடைக்கும்?

கேட்ராக்ட் ஆபரேஷனப் பொறுத்தமட்டில் ஆபரேஷன் செய்தவுடனேயே மீண்டும் தெளிவான பார்வை கிடைக்கும்.

ஒருவர் கேட்ராக்ட் ஆபரேஷன் எப்போது செய்து கொள்ளலாம்?

கேட்ராக்ட் ஆபரேஷன் என்பது பொதுவாக நோயாளியின் விருப்பத்திற்கிணங்கவே செய்யப்படுகிறது. மருத்துவர்களும் நோயாளியின் கண் புரை முற்றிய பிறகு செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்கிறார்கள். இங்கே நோயாளியின் விருப்பம் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

உதாரணமாக நடைமுறை வாழ்க்கையில் அன்றாட வேலைகைளச் செய்வதற்கு கூட சிரமப்படுகின்ற வகையில் பார்வை பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் உடனடியாக இந்த ஆபரேஷனைச் செய்து கொள்ளலாம். இது குறித்து உங்கள் கண் மருத்துவரின் நிறைவான ஆலோசனையப் பெற்றுக்கொள்வதே மிகவும் சிறந்ததாகும்.

பஞ்சப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய‌ கண்மருத்துவ உதவியாளர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் அனுப்பிய சிலவகை கேட்ராக்ட் கண்களின் புகைப்படங்கள் இங்கே.
செய்திகள் உதவி:
தமிழில் ஒரு மருத்துவ வலைப்பூ!
( A medical blog in Tamil)

14 February 2009

Blindness control society

Guidlines for District Blindness control societyஇங்கே பிடிஃப் வடிவில்


DBCSGUIDE-Sept05

டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்

ஜனவரிமாதம் தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்.முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்தின் கீழ் கர்பிணிப்பெண்களுக்கு பிரசவத்திற்கு முன் ரூ.3000/ மற்றும் பிரசவத்திற்கு பின் ரூ.3000/ வழங்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் இங்கே பிடிஃப் வடிவில்.

Jan 09

பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம்

பொது சுகாதாரத்துறை ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து புதிய வலைப்பூ பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் திருவண்ணாமலை மாவட்டம் .http://phcperungattur.blogspot.com/தளத்தை நிர்வகிப்பவர் யார் என தெரிவிக்கவில்லை.ஆரம்ப சுகாதார நிலையம் தொடர்பான பதிவுகள் வரவேற்கத்தகுந்தது.http://ruraldoctors.blogspot.com” >SUறேஷ் சார் மற்றும் www.payanangal.in” >மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ் சார் ஆகியோர் ஆக்கப்பூர்வமான விமரிசனங்கள் தந்து ஊக்குவிக்கலாம்.

04 February 2009

ஆண் பெண் விகிதம்



மக்கள்தொகையில் ஆண் பெண் விகிதம் என்பது 103:100 இருக்க வேண்டும். அதாவது 1000 ஆண் குழந்தைகளுக்கு 971 பெண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஏனென்றால், ஆண் கரு, பெண் கருவை விட பலவீனமானது. உருவான ஓர் ஆண்டுக்குள் வியாதிகளால் இறந்துவிடக் கூடியது. அவ்வாறு இறந்துவிட்டால் ஆண் - பெண் விகிதம் சமநிலையை அடையும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் நமது நாட்டில் மக்கள்தொகையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது.

பெண்களுக்கெதிராக இந்நாட்டில் நிலவும் பாரபட்சத்தால் அவர்கள் இறந்து போகிறார்கள் என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கான சர்வதேச நிறுவனமாகிய யூனிசெஃப்பும் இதை உறுதி செய்கிறது. இந்தியாவில் இவ்வாறு மாயமான பெண்களின் எண்ணிக்கை 5 கோடியாம்.

“லான்செட்’ என்ற இதழுக்காக இந்திய மற்றும் கனடா ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவிலுள்ள 11 லட்சம் குடும்பங்களில் ஆய்வு மேற்கொண்டதில், ஆண்டுக்கு 5 லட்சம் பெண் குழந்தைகள் கருக்கொலை காரணமாகவும், கருவுறுவதற்கு முன்பே பாலினத்தைத் தேர்வு செய்யும் முறையாலும் அழிந்து போகின்றனர் என்று கண்டறிந்திருக்கிறார்கள்

முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்து, இரண்டாவது கருவும் பெண்ணாக உருவாகிவிட்டால் ஆண் குழந்தை வேண்டி கருக்கொலை செய்வதில் என்ன தவறு என்று சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் முதல் குழந்தை ஆணாக உருவானால் யாரும் பெண் குழந்தை வேண்டி ஆண் கருவை அழிப்பதில்லையே? “லான்செட்’ ஆய்வின்படி, முதல் குழந்தை பெண்ணாக இருக்கும்பட்சத்தில் இரண்டாவது பெண் குழந்தைகளின் விகிதம் 759 ஆகவும் மூன்றாவது பெண் குழந்தைகள் விகிதம் 719 ஆகவும் குறைந்து விடுகின்றன. ஆனால் இதுவே முதல் குழந்தை ஆணாக இருந்துவிட்டால் அதன்பிறகு ஆண் பெண் விகிதம் சமமாகவே இருக்கிறது என்று அந்த ஆய்வு பாரபட்சத்தைச் சுட்டிக்காட்டுகிறது

திட்டமிட்ட கருச்சிதைவு நகர்ப்புறங்களிலும் படித்த குடும்பங்களிலும் அதிகமாக உள்ளது. படித்த பெண்கள் உள்ள குடும்பங்களில் திட்டமிட்ட கருக்கலைப்பு அதிகமாக இருப்பதற்கான காரணம் அவர்களுக்கு இருக்கக்கூடிய பணவசதி மற்றும் எட்டும்தொலைவில் டாக்டர்கள் இருப்பது காரணமாக இருக்கலாம்.

1994 ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி திட்டமிட்ட கருக்கலைப்பு குற்றமாகும்.

டாக்டர்கள் கட்டைவிரலை நிமிர்த்தியோ கவிழ்த்தோ காட்டுவது, மவுனத்தின் மூலம் பெண்சிசுவைக் குறிப்பிடுவது, மிட்டாய் கொடுப்பது போன்ற செயல்களினால் அல்ட்ராசவுண்ட் முடிவுகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.


பெண் கருக்கொலை, சிசுக்கொலை என்பது ஏதோ படிக்காத பாமர மக்கள் வசிக்கும் பகுதிகளில்தான் அதிகம் என்பதில்லை. நாட்டின் வளமான மாநிலங்கள் என்று போற்றப்படும் பஞ்சாப், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், குஜராத்தில்தான் மிகக் குறைந்த பாலின விகிதத்தில் பெண்கள் பிறக்கிறார்கள்

எங்கெல்லாம் ஸ்கேன் மையங்கள் அதிகமிருக்கின்றனவோ அங்கெல்லாம் பெண்களின் விகிதம் குறைந்தே காணப்படுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

சமூகவியலாளர், அமித்தாய் எட்ஸியோனி கூறுகிறார்: “”பாலினத் தேர்வு என்பது பாலின விகிதாசாரத்தில் ஒரு கடுமையான அசமத்துவ நிலையை ஏற்படுத்தும். கோடிக்கணக்கான ஆண்களைப் பாலியல் குற்றங்களில் குற்றவாளிகளாக்கும் அல்லது பிரம்மசாரிகளாக்கும்.” ஒரு பெண் பல ஆண்களை மணந்து கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுவாள்; கடத்தப்படுவாள்; மறுத்தால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவாள்

பெண் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை உடனடியாக செயல்படுத்த எல்லா வழிகளிளும் முன்னேற்றம் காட்ட ஒவ்வொரு இந்திய குடிமகனும் முன் வரவேண்டும்.இதற்கான முதல் படி வீட்டிலிருந்தே தொடங்கி நம் குடும்பத்திலும் அடுத்து நம் சமுதாயத்திலும் தொடர வேண்டும்.நான் இதை பாரதப் பிரதமராக இருந்து கொண்டு சொல்லவில்லை . மூன்று பெண் குழந்தைகளுக்கு தந்தையாக இருந்து கொண்டு சொல்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.என்னுடய பெண் குழந்தைகளுக்கு என்னென்ன கிடைக்க வேண்டும் என நான் விருப்பப்படுகிறேனோ அவைகள் அனைத்தும் நம் நாட்டில் உள்ள எல்லா பெண் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன் என பாரதப் பிரதமர் டாக்டர்.மன்மோகன்சிங் அவர்கள் ஏப்ரல் 28 2008 அன்று டில்லியில் நடைபெற்ற "பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்" கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவித்தார்.
செய்திகள் உதவி1:http://bsubra.wordpress.com/2007/07/27/female-infanticide-gender-selections-abortions-in-india-law/
2.தேசிய ஊரக நல குழுமத்தின் செய்திமடல்