25 December 2011

பெண்டாவேலண்ட் கரூர் மாவட்டத்தில் துவக்கம்


2011 டிசம்பர் 22 ல் பெண்டாவேலண்ட் தடுப்பூசி கரூர் மாவட்டத்தில் முதன்முதலாக  சேங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சோபனா துவக்கி வைத்தார் .இந்த நிகழ்ச்சியில் கரூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் திரு.சம்பத்குமார்,ஒன்றியக் குழுத்தலைவர் முத்துசாமி,டாக்டர்.பிச்சைமுத்து,மாவட்ட பூச்சியல் வல்லுனர் திரு,சிவக்குமார் சித்த மருத்துவர் சித்ரா,தாசில்தார் மூக்கன்,சட்டமன்ற உறுப்பினர் காம்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்..


17 December 2011

"பெண்டாவேலண்ட்"வேலூரில் அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்




குழந்தைகளுக்கு 6 தடுப்பூசிகளுக்கு பதிலாக ஒரே தடுப்பூசி போடும் திட்டம் தமிழ்நாட்டில் முதல் முறையாக வேலூரில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. சுகாதாரம் சம்பந்தமான சிறந்த உள்கட்டமைப்பை தமிழ்நாடு பெற்றிருப்ப தாலும், தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் சிறந்த மாநிலமாக திகழ்வதாலும், மத்திய அரசு பெண்டாவேலண்ட் தடுப்பூசியை அறிமுகப்படுத்த தமிழகத்தை தேர்வு செய்தது.
 வேலூர் அடுத்த அலமேலு மங்காபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய தடுப்பூசி தொடக்கவிழா இன்று நடந்தது. சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜய் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் முகமது ஜான், எம்.எல்..க்கள் கலையரசு, சீனிவாசன், மேயர் கார்த்தயாயினி, கலெக்டர் நாகராஜன், பொதுசுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர்.பொற்கைப் பாண்டியன் மற்றும் வேலூர் மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். . பெண்டாவேலண்ட் தடுப்பூசி அறிமுகப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்.
  •   குழந்தைகளுக்கு போடப்படும் ஊசிகளின் எண்ணிக்கை குறைகிறது.
  •   புதிதாக சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா மற்றும் மூளை பாதிப்பை குறைக்கிறது

நடப்பு ஆண்டில் 2011-12-ல் 3.60 லட்சம் குழந்தைகள் பெண்டா வேலண்ட் தடுப்பூசியின் மூலம் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகரெட் ஸ்டைல் வேண்டாம்!
இந்த விழாவில் வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கான புகையில்லா திட்டத்தையும் அமைச்சர் தொடங்கிவைத்தார். இத்திட்டம் குறித்து அமைச்சர் பேசியது:
புகையிலையால் ஏற்படும் தீமை எல்லோரும் அறிந்த ஒன்று. பொது இடங்களில் புகைப்பிடிப்போரை சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும்வீடுகளில் புகைப் பிடிப்பதை தாய்மார்கள் தடுக்க வேண்டும். நாங்கள் எம்ஜிஆரை பார்த்து கழகத்தில் இணைந்தவர்கள். அவர் புகைப்பிடித்ததும், மது அருந்தியதும் இல்லை. அவர் வழியில் வந்த தொண்டர்கள் இந்தப் பழக்கங்களுக்கு ஆளாவதில்லை. இன்றைய நடிகர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பெற்றோரும் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

பெண்டாவேலண்ட்' தடுப்பூசி: பத்திரிகை செய்தி வெளியீடு

பெண்டாவேலண்ட் தடுப்பூசி தொடர்பாக அரசு 15.12.2011 அன்று வெளியிட்டுள்ள செய்தி  [Press release  Introduction  of  Pentavalent vaccine in Tamil Nadu ]  கீழே.இத் தடுப்பூசி தொடர்பான முந்தைய  பதிவை படிக்க இங்கு செல்லவும்

pentavalent vaccine

16 December 2011

Tamil Nadu Vector Science Forum


An exclusive independent forum called Tamil Nadu Vector Science Forum is being started in the State soon by a group of individuals from entomology background to undertake intensive research studies on the changing dynamics of vector-borne diseases.
The forum will have entomology experts, retired public health officials and interested natural sciences faculty of universities and colleges as its members.
TOP PRIORITY
It will be a forum where research on vector borne diseases would get top priority and scientists will collectively undertake studies for better understanding of vector bionomics.
S. Elango, former Director of Public Health and Preventive Medicine, who will be the convenor of Tamil Nadu Vector Science Forum, told The Hindu here on Sunday that the initial formalities for starting the forum were completed and it will be registered next month.
TO BE REGISTERED
“We want to get going at the earliest. The forum will have to be registered under the Societies Act and it should be over before end of December. In the mean time, steps are being taken to rope in some vector science experts to join us,” he said.
Dr. Elango had stressed that it is important to have analytical study of aedes aegypti mosquito which spreads dengue fever.
Its flight pattern had changed in recent times according to studies and hence, the Tamil Nadu Government's Department of Public Health will have to look into those aspects also for prevention of diseases, he added.
“Bionomics, transmission and behaviour of vectors have changed. Disease transmission will continue to happen if the changes were not studied and we act accordingly. The Tamil Nadu Vector Science Forum will focus on issues like these,” the retired public health director said.
According to him, the mosquito breeding pattern too seemed to have changed and entomologists have recently come out with some findings and those studies must be taken in to account.
“We will request the Indian Council of Medical Research and the Centre for Research in Medical Entomology at Madurai to support our initiatives in the larger public interest,” he said.
Dr. Elango has appealed to entomologists, scientists, zoologists and vector science specialists at various universities and colleges in Tamil Nadu to become members of the forum and get engaged in collective work for scientific research, studies and prevention of vector borne diseases.
Those who are interested to know more about the Tamil Nadu Vector Science Forum can contact Dr.Elango on mobile number 94434-49115.

தெரிந்து கொள்வோம் நம் துறைச்செயலரை.



Everyday Leadership


வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள  இவரது பேட்டியின் கானொளியும் அவர்பற்றிய சுருக்கமும் கீழே.


Girija Vaidyanathan, IAS, is currently the principal secretary of the Health and Family Welfare Department in the Government of Tamil Nadu. Since joining the prestigious Indian Administration Service thirty years ago, she has held numerous positions overseeing departments in health, education, agriculture, transportation and state planning. Ms. Vaidyanathan completed graduate studies in physics, chemistry and mathematics.



The biographical information on this page is current as of the time this 

person was interviewed for the Everyday Leadership video project but 

may not reflect current developments in their life or career.

வீடியோவை கிளிக் செய்து பார்க்கலாம்.

14 December 2011

பணிஓய்வு




திருமதி.எஸ்.பங்கஜவள்ளி அவர்கள் பகுதி சுகாதார செவிலியராக தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிவந்தார்.இவர் 26.10.2011 அன்று சுய விருப்பத்தின் பேரில் பணிஓய்வு பெற்றார் அவருக்கான பிரிவு உபசார விழா தோகைமலையில் நடைபெற்றது.

தனது பணிக்காலத்தில் மிகுந்த அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றியவர் இவர்.சிறந்த மனிதநேயம் மிக்கவர்.. தனது வேலையை பார்ப்பதற்கே சிரமப்படும் ஊழியர்களைப் போலல்லாமல் அடுத்தவர்களின் பணிகளையும் சேர்த்து செய்யக்கூடியவர்.இதுவரை அவர் பணியாற்றிய அலுவலர்களிடம் நற்பெயர் எடுத்தவர்.இன்னும் நிறைய பணிக்காலம் அவருக்கு இருக்கிறது இருப்பினும் குடும்ப சூழல் காரணமாக இவர் சுய விருப்பத்தின் பேரில் ஓய்வு பெற்றுள்ளார்.


சாதாரணமாக துறையில் “சிஸ்டர்” என்ற பதம் பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்படும்.உண்மையில் அதன் பொருள் பூரணமாக இவருக்குப் பொருந்தும்.ஒரு சின்ன உதாரணமாக உடன் பணியாற்றும் ஒரு சக ஊழியரின் பெண் திருமணம்.அவருக்கு நிதி தட்டுப்பாடு.வட்டிக்காவது ஒரு லட்சரூபாய் பணம் கிடைத்தால் பரவாயில்லை என்கிற நிலையில்  அதைப்பற்றி பங்கஜவள்ளி சிஸ்டருடன் பகிர்ந்து கொள்கிறார். உடனடியாக தனது கழுத்தில் இருந்த 10 பவுன் செயினை கழற்றிக் கொடுத்து என்னிடம் இப்போது பணமில்லை இதை வைத்து திருமணத்தை நடத்துங்கள் உங்களுக்\கு எப்போது பணம் கிடைக்கிறதோ அப்போது மீட்டுத்தாருங்கள் என்று கூறியுள்ளார்.


இதில் என்ன சிறப்பு எனில் இந்த விவரம் ஆரம்ப சுகாதார நிலைத்தில் யாருக்கும் தெரியாது.இவரது பிரிவு உபசார விழாவில் பயனடைந்த சகோதரி தனது கண்ணீருக்கு இடையே இந்த சம்பவத்தை கூறியபோது தான் மற்றவர்களுக்கே தெரியும்.

 உதவி செய்வது மட்டுமில்லாமல் அதை பிரபலப்படுதிக்கொள்ளாத மனோபாவம் போற்றுதலுக்குரியது.இவரது பிரிவு உபசார விழாவிற்கு உதவி இயக்குனர் திரு.ஈஸ்வரன் அவர்கள் வருகை தந்து இவரை கவுரவித்தார்.

இவருடன் இவர் காலத்தில் பணியாற்றிய நினைவுகள் என்றும் மனதில் இருக்கும்.

வாழ்த்துக்கள் சகோதரி.

11 December 2011

2004க்கு பின் போலியோ பாதிப்பு இல்லை


தமிழகத்தில் இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கு, 11.12.2011 இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், "பல்ஸ் போலி யோ சிறப்பு முகாம்'கள் நடத்தப்பட்டு, ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முறையான தவணைகளில் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வந்தது. இதனால், 2004க்கு பின் போலியோ நோயால் எந்த குழந்தையும் பாதிக்கப் படவில்லை.

இருந்த போதிலும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வேலை தேடி வருவோரின் குழந்தைகள் மூலம் இந்த நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது.இவ்வாறு, அடிக்கடி இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தை களுக்கு சரியான தவணைகளில் தடுப்பு மருந்துகள் கிடைப்பதில்லை.இதை கருத்தில் கொண்டு,இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கு போலியோ நோய்க்கு எதிரான தடுப்பு சக்தியை உருவாக்குவதற்காக, 11.12.2011 அன்று போலியோ சொட்டு மருந்து கொடுக்க, தமிழகம் முழுவதும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி,
கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடம்,
மேம்பாலம்,
தொழிற்சாலை,
நெடுஞ்சாலை,
ரயில்வே பணி கள்,
செங்கல்சூளை,
நரிக்குறவர் தங்குமிடம்,
வேளாண் தொழிலாளர்கள் வசிப்பிடம்,
மீனவ பகுதி,
சாலையோர குடியிருப் புகள்,
 இலங்கை அகதிகள்
ஆகியோருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

பெண்டாவேலண்ட்' தடுப்பூசி:

pentavalent vaccine

குழந்தைகளை வெகுவாக அச்சுறுத்தி வந்த,

·                   தொண்டை அடைப்பான்
·                  கக்குவான் இருமல்,
·                   ரண ஜன்னி ஆகிய நோய்கள்

தமிழகத்தில் அகற்றப்பட்டு விட்டனஇந்த நோய்களுக்குடி.பி.டி., தடுப்பூசி போடப்பட்டு வந்தது. தற்போதுஇந்நோய்களையும் சேர்த்து,
·                   ஹெப்படைட்டீஸ் பி தடுப்பு மருந்து,
·                  நிமோனியா காய்ச்சல்
·                  மூளைக் காய்ச்சலை தடுக்கும், "ஹிப்தடுப்பு மருந்து

diphtheria, pertussis, tetanus, hepatitis B and haemophilus influenza type B (HiB)
ஆகிய நோய்களுக்கும்,"பெண்டாவேலண்ட்என்ற ஒரே தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுஇம்மருந்துஇந்தியாவில் முதல்கட்டமாகதமிழகம் மற்றும் கேரளத்தில் அறிமுகப் படுத்தப்படுகிறதுஇது மிகவும் பாதுகாப்பானது என்பதுபரிசோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

"
பெண்டாவேலண்ட் தடுப்பூசியால்பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது எனநிரூபிக்கப்பட்டுள்ளது.இருப்பினும்,முன்னெச்சரிக்கையாகராமப்புறங்களில் தடுப்பூசி போடும் இடங்களுக்கேடாக்டர்கள் அனுப்படுவர்.இந்த தடுப்பு மருந்துவெளிச்சந்தையில், 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறதுஆனால்எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்அரசு மருத்துவமனைகளிலும்இலவசமாக வழங்கப்படும்,''


முதல்தமிழகத்தில்வரும் டிச., 17ம் தேதிவேலூரில் நடக்கும் விழாவில்
சுகாதாரத் துறை அமைச்சர் விஜய்இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார்
வரும் டிச.21ம் தேதி முதல்தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவு படுத்தப்படும்.