07 December 2015

சென்னை வெள்ளம் மருத்துவ நிவாரணக்குழு









மருத்துவ நிவாரணக்குழு இரண்டாவது அணி இதோ இப்போது புறப்படப் போகிறது.கொட்டும் மழையில் வழியனுப்பி வைக்க போய்க்கொண்டிருக்கிறேன். ஒரு போர் வீரனைப்போல மழைக்கோட்டையும் துணிமணிகளையும் கையில் எடுதுக்கொண்டு கிராமங்களில் இருந்து வந்து நிற்கும் இவர்கள் தெய்வங்கள். துறையில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கான அழைப்பை இயக்குனர் டாக்டர்.குழந்தைசாமி அவர்கள் கொடுத்தபோது கொஞ்சம் மலைத்தேன். யாரும் முன்வருவார்களா? என்று. எல்லோரைப் போல அரசு அலுவலர்கள் பற்றிய பொது புத்தியுடன். இரண்டு மணி நேரத்தில் நான்,நீ என் போட்டி போட்டுக்கொண்டு பெயர் கொடுத்தார்கள்.குறிப்பாக பெண்கள் கிராம சுகாதார செவிலியர் களின் எண்ணிக்கை அதிகம். அமைச்சுப் பணியாளர்களுக்கான அழைப்பு இல்லாதது இவர்களுடன் பங்கேற்க முடியவில்லியே என்ற ஏக்கத்தை தருகிறது.என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்துங்கள். பொது சுகாதாரத் துறையில் பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன்.

No comments: