03 June 2011

பதவி உயர்வில் செல்லும் கிராம சுகாதார செவிலியர்


தோகைமலை ஆரம்ப சுகாதார நிலைய்த்தில் பணியாற்றி பகுதி சுகாதார செவிலியர் பதவி உயர்வின் காரணமாக இரண்டு கிராம சுகாதார செவிலியர்கள் மறுதலில் சென்றுள்ளனர்.

  1. எஸ்.என்.மல்லிகா

சிறந்த களப்பணியாளர்.தோகைமலை துணை சுகாதார நிலையத்தின் கிராம சுகாதார செவிலியராகப் பணியாற்றி வந்தார்.பொதுமக்களிடம் நல்ல பெயர் பெற்று பணியாற்றிவந்தார்.அன்பும் அடக்கமும் நிறைந்தவர்.பதவி உயர்வில் கரூர் மாவாட்டம் மைலம்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையம் செல்லும் பொருட்டு 04.03.2011 அன்று விடுவிக்கப்படடார்.புதிய பணியிடத்தில் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகிறேன்.

  1. எஸ்.கல்யாணி
நாகனூர் துணை சுகாதாரநிலைய கிராம சுகாதார செவிலியராக பணியாற்றிவந்த இவர் பகுதி சுகாதார செவிலியராக பதவி உயர்வு பெற்று தஞ்சை மாவட்டம் வேப்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலய்ம் செல்லும் பொருட்டு 04.03.2011 அன்று பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
தனது பகுதியைப் பற்றிய அனைத்து விவரங்ககளையும் விரல் நுனியில் வத்திருப்பார்.ஊர் மக்களுடன் இரண்டரக் கலந்தவர்.இரவு பகல் பாராமல் களப்பணியாற்றுபவர். தோகைமலையிலிருந்து கரூர் செல்லும் வழியில்தான் இவரது துணை சுகாதார நிலையம் உள்ளது.பணிநிமித்தம் நான் அவ்வழியாக கரூர் செல்லும் போதெல்லாம் ஏதோ ஒரு சாலை ஓரத்தில் ஒரு தோளில் கைப்பை மற்றொரு தோளில் தடுப்பூசி பெட்டியுடன் புடவைத்தலைப்பை வெயிலுக்கு பாதுகாப்பாக தலையில் போட்டவாறு இவர் சென்றுக்கொண்டிருப்பார்.பதவி உயர்வில் செல்லும் இவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

No comments: