09 September 2011

புதிய மருத்துவர்கள்

செப்டம்பர் 6,7,8 ஆகிய தேதிகளில் உதவி மருத்துவர்களுக்கான  10 a(1) நேர்காணல் சென்னையில் நடந்துள்ளது.காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.மேற்படிப்பிற்கு செனறாதனால் ஏற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட்டுவிடும்.புதியவர்களை வரவேற்போம்.ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய இருக்கும் மருத்துவர்களுக்கான சில டிப்ஸ்.


அவ்வையாரின் ஆத்திச்சூடியிலிருந்து.

1.உடையது விளம்பேல்
2.ஓதுவது ஒழியேல்
3.ஙப்போல் வளை
4.இணக்கம் அறிந்து இணங்கு
 உரை: ஒருவரோடு நட்புக் கொள்ளுமுன் அவரைப் பற்றிய செய்திகளை ஆராய்ந்துஅறிந்து ( அவர் நற்குணத்தவர் என்றால் மாத்திரமே) அவரோடு நட்பும் தொடர்பும் கொள்க.
5.இயல்பலாதன செய்யேல்
உரை:இயற்கையோடு ஒத்திராத (வழக்கத்திற்கு விரோதமான) செயல்களை ஒரு போதும் செய்யற்க
6.அழகலாதன செயேல்
7.கேள்வி முயல்
8.சுளிக்கச் சொல்லேல்
9.சேரிடம் அறிந்து சேர்
10.தூக்கி வினை செய்
11.தோற்பன தொடரேல்.
12.நொய்ய உரையேல்
13.பெரியாரைத் துணைக்கொள்
உரை: நாம் தவறு செய்யுங்கால் இடித்துக் கூறித் திருத்தும் பண்புடைய பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
14.மாற்றானுக்கு இடங்கொடேல்.
15.முனைமுகத்து நில்லேல்
16.மைவிழியார் மனையகல் ( ஆண்களுக்கு மட்டும்)
17வல்லமை பேசேல்
18ஒன்னாரைத் தேறேல்

மேலும் சில டிப்ஸ் க்கு இங்கே சொடுக்கவும்.

4 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பெரியாரைத் துணைக்கொள்//

:)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இணக்கம் அறிந்து இணங்கு//

//இயல்பலாதன செய்யேல்//

:)

சே.வேங்கடசுப்ரமணியன் said...

மூன்ற்க்கும் உரை குறிப்பிட்டுள்ளேன் சார்.சரிதானே.

சீனுவாசன்.கு said...

நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்த சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!!!