25 January 2013

அஞ்சலி


டாக்டர்.பாக்கியலட்சுமி (வயது30).  மலைக்கோவிலூர் அரசு 

ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். 

சேலம்-மதுரை பைபாஸ் ரோட்டில் கரூர் அருகே உள்ள சுக்காலியூர் 

ரவுண்டானா பகுதியில் அரசு வேனில் சென்ற போது அந்த வழியாக வந்த 

லாரியும், வேனும் மோதிக் கொண்டவிபத்தில் வேன் தலைகீழாக கவிழ்ந்து 
  
இதில் வேனின் அடியில் டாக்டர் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 

தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 

டாக்டர்.பாக்கிய லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு 

தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 

கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி 

அவர் பரிதாபமாக இறந்தார்.இவரைப் பிர்ந்து வாடும் குடும்பத்தினருக்கு 

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இம் மரணம் எதிர்காலத்தில்  கவனிக்க வேண்டிய சில கேள்விகளையும் 

விட்டுச் சென்றுள்ளன.






1.விலைமதிப்பிலா உயிர்களான  மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பயணம் 

செய்யும் வாகனங்களுக்கு MMU,JSSK. போன்ற திட்டங்களுக்கு தற்காலிக 

தினக்கூலி ஓட்டுனர்களை நியமிப்பது நியாயமா?

2.வாகனங்களில் பயணம் செய்யக்கூடிய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 

விபத்துக்கான அதிக தொகைக்கான காப்பீட்டினை ஏன் அரசு 

செலுத்தக்கூடாது?






No comments: