17 October 2008

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் இளம் சிறார் இருதய பாதுகாப்பு திட்டம்


படத்தில் உள்ள இச் சிறுமி கரூர் மாவட்டம் தோகமலை வட்டாரத்திற்கு உட்பட்ட அ.உடயாபட்டி கிராமம் காலனியை சேர்ந்த திரு.ராஜா /மஞ்சுளா தம்பதியரின் புதல்வி.இவர்கள் வருட வருமானம் ரூ.12000/ க்கு உட்பட்ட வறுமை கோட்டிற்கு உட்பட்ட விவசயக்கூலிகள்.அ.உடயாப்பட்டியில் உள்ள பள்ளியில் இச்சிறுமி படித்து வரும் போது தோகமலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவால் பள்ளி சிறார் நலவாழ்வு திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வின்போது இவருக்கு இருதய கோளாறு இருந்தது கண்டறியப்பட்டது.03.06.2008 ல் கரூரில் நடைபெற்ற மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் இளம் சிறார் இருதய பாதுகாப்பு திட்ட மருத்துவ முகாமில் இச்சிறுமிக்கு (வி.எஸ்.டி பி கிரேடு) அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு சென்னை மரு.கே.எம்.செரியன் ஹார்ட் பவுன்டேஷன் ல் 27.08.2008 அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.தற்போது இச்சிறுமி நல்ல நிலையில் உள்ளார்.இதற்காக இச்சிறுமியின் குடும்பத்தார்க்கு எந்த செலவும் இல்லைமுழுக்க முழுக்க அரசே போக்குவரத்து செலவு உட்பட அனைத்தயும் செய்துள்ளது. இதே போல் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள மற்ற நான்கு மாணவர்களின் புகப்படம்சிலைடுஷோவக இங்கே.

No comments: