26 October 2010

அல்மா-அட்டா பிரகடணம் (Alma-ata Declaration)

1978ல் அல்மா அட்டா என்ற ரஷ்ய நகரில் உலக சுகாதார நிறுவனம் (W.H.O) கூட்டிய மாநாட்டின் இறுதியில் வெளியிடப் பட்ட அறிக்கை கி.பி. 2000க்குள் அனைவருக்கும் மருத்துவ நலம் வழங்க உறுதியளித்தது. இந்த உறுதிமொழி பிரகடனத்தில் இந்திய அரசும் கையொப்ப மிட்டிருந்தது

170க்கும் மேற்பட்ட உலக நாட்டு அரசாங்கங்களுக்கு மருத்துவ ஆலோசனைûயும், வழிகாட்டுதலையும் வழங்கி வருவது உலக சுகாதார நிறுவனம். இதில் அங்கம்வகிக்கும் நாடுகளின் சுகாதாரத்துறை தலைமைப் பொறுப்பிலுள்ளோர் ஆண்டுதோறும் கூடி முக்கிய முடிவுகளை மேற்கொள்ளுமிடம் உலக சுகாதாரப் பேரவை. இப்பேரவையின் முடிவாக அந்தந்த காலத்திற்கேற்ப உலக சுகாதார அறிக்கைகள் வெளிவருகின்றன

கி.பி. 2000க்குள் எல்லோருக்கும் மருத்துவ நலம் என்ற இலக்கை முன்வைத்த அல்மா அட்டா அடிப்படை மருத்துவ மாநாட்டின் பிரகடனம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த்து.

தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு 2010-11 ல் பக்கம் 56 அத்யாயம் 5ல் கீழ்கண்டவாறு இப்பிரகடணத்தைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

1978 அல்மா அட்டா வில் தான் ஆரம்ப சுகாதார சேவை என்பதற்கான இலக்கணம் வகுக்கப்பட்ட்து.ஆரம்ப சுகாதார சேவை என்பது ஒரு அடிப்படையான அத்டியாவசிய சுகாதார சேவையாகும்.இதில் முழுமையாக சமூக பங்கேற்போடு மக்கள் வாழும் கிராமங்களுக்கு அருகிலேயே அவர்களது விருப்பத்திற்கு ஏற்றதாகவும்,பொருளாதார சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும்.

பொது சுகாதாரம் மர்றும் மருத்துவத்துறையில் பணியாற்றும் அனைவரும் படிக்க வேண்டிய பிரகடணம் இது.



Declaration Almaata

No comments: