27 November 2011

20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்

முதல்வர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைவிதி எண்.110​ன் கீழ் 10.09.2011 அன்று ஒரு அறிக்கை வாசித்தார்.அதன் படி  தமிழகத்தில் 20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்க முதல்வர்  உத்தரவிட்டுள்ளார்.
கிராமப்புற மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 24 ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
 இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை 26.11.2011 அன்றுவெளியிட்ட அறிவிப்பு:


துவக்கப்பட உள்ள 20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்


திருச்சி மாவட்டத்தில் சமயபுரம்,


 வேலூர் மாவட்டத்தில் கொணவட்டம், சுமைதாங்கி, 


கிருஷ்ணகிரி அருகே உள்ள பேஜிபள்ளி, 


கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டம் திருநாவலூர் வட்டாரத்தில் சேந்தநாடு, சின்னசேலம் வட்டாரத்தில் அம்மாகளத்தூர், 


நாகப்பட்டினம் சுகாதார மாவட்டம் கொள்ளிடம் வட்டாரத்தில் மதிரவேலூர்,


 திருப்பூர் சுகாதார மாவட்டம் பல்லடம் வட்டாரத்தில் புளியம்பட்டி, 


பெரம்பலூர் சுகாதார மாவட்டம் பெரம்பலூர் வட்டாரத்தில் எளம்பலூர், 


ஈரோடு சுகாதார மாவட்டம் பெருந்துறை வட்டாரத்தில் காஞ்சிக்கோயில், நம்பியூர் வட்டாரத்தில் மலையம்பாளையம்,


 திருப்பத்தூர் சுகாதார மாவட்டம் கந்திலி வட்டாரத்தில் கோரட்டி,


 சங்கரன்கோவில் சுகாதார மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் தென்மலை, 


திருவள்ளுர் சுகாதார மாவட்டம் திருவள்ளூர் வட்டாரத்தில் கல்யாணகுப்பம்,


 பழனி சுகாதார மாவட்டம் வேடசந்தூர் வட்டாரத்தில் கனப்பாடி,


 புதுக்கோட்டை சுகாதார மாவட்டம் அன்னவாசல் வட்டாரத்தில் ராப்பூசல்

கரூர் சுகாதார மாவட்டம் தாந்தோணி வட்டாரத்திலுள்ள வடக்குபாளையம் கே.பரமத்தி வட்டாரத்தில் தம்பிவாடி, 


தஞ்சாவூர் சுகாதார மாவட்டம் ஒரத்தநாடு வட்டாரத்தில் ஒக்கநாடு கீழையூர்,


 தூத்துக்குடி சுகாதார மாவட்டம் தூத்துக்குடி வட்டாரத்தில் லூர்தம்மாள்புரம்


 ஆகிய 20 இடங்களில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். இதற்கு ரூ.7.71 கோடி செலவாகும்.


 தரம் உயர்த்தப்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்:
 அறந்தாங்கி சுகாதார மாவட்டம் கரம்பகுடி வட்டாரம் மலையூர், 


செய்யார் சுகாதார மாவட்டம் அனுக்காவூர் வட்டாரம் அக்கூர், 


கோயம்புத்தூர் சுகாதார மாவட்டம் கிணத்துக்கடவு வட்டாரம் 
நல்லாட்டிபாளையம்,


 ஈரோடு சுகாதார மாவட்டம் டி.என்.பாளையம், 


கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டம் ரிஷிவந்தியம், 


பழனி சுகாதார மாவட்டம் குஜிலியாம்பாறை, 


பூந்தமல்லி, சைதாப்பேட்டை சுகாதார மாவட்டம் லத்தூர் வட்டாரம் பழஞ்சூர்,


 சேலம் சுகாதார மாவட்டம் கொங்கணாபுரம், பனமரத்துப்பட்டி, தாரமங்கலம், பி.என்.பாளையம் வட்டாரம், ஆரியபாளையம், 


சிவகங்கை சுகாதார மாவட்டம் திருப்புவனம் வட்டாரம் பூவந்தி, 


சிவகாசி சுகாதார மாவட்டம் வெம்பக்கோட்டை, கல்லமனைக்கான்பட்டி, 


தஞ்சாவூர் சுகாதார மாவட்டம் பேராவூரணி வட்டாரம் செருவாவிடுதி, சேதுபாவாசத்திரம் வட்டாரம் அழகியநாயகிபுரம்,


 திருவள்ளூர் சுகாதார மாவட்டம், புழல் வட்டாரம், நர்வாரிகுப்பம், 


வில்லிவாக்கம் வட்டாரம், போரூர், திருப்பத்தூர் சுகாதார மாவட்டம் கந்திலி வட்டாரம், குனிச்சி, காட்பாடி வட்டாரம், திருவலம், 


திருப்பூர் சுகாதார மாவட்டம் குடிமங்கலம், 


திருவண்ணாமலை சுகாதார மாவட்டம் புதுபாளையம் வட்டாரம், காரப்பட்டி,


 உதகமண்டலம் சுகாதார மாவட்டம் கூடலூர் வட்டாரம், நெல்லக்கோட்டை,


 விழுப்புரம் சுகாதார மாவட்டம் வல்லம் வட்டாரம், மேல்சிதாமூர்


       என மொத்தம் 24 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். இதற்கு ரூ.22.55 கோடி செலவாகும்.


No comments: