21 February 2012

போலியோ சொட்டு மருந்து


 தமிழகத்தில் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் 19.02.2012 அன்று நடை பெற்றது. இதற்காக சொட்டு மருந்து மய்யங்கள், ஆரம்ப சுகாதார மய்யங்கள், அரசு மருத்துவமனை கள், சத்துணவு மய்யங்கள், பள்ளி கள் என 40,400 சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவை தவிர, பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 903 நகரும் மய்யங் களும் மற்றும் எளிதில் செல்ல முடியாத கிராமங்களுக்காக 838 நடமாடும் குழுக்களும் அமைக்கப் பட்டிருந்தது.

இந்த பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள், அரசு செவிலியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என சுமார் 2 லட்சம் பேர் ஈடுபட்டிருந் தனர். தனியார் மருத்துவமனை களிலும் குழந்தைகளுக்கு போலி யோ சொட்டு மருந்தை போடும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் காலை 7 முதல் மாலை 4 மணி வரை நடந்தது
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் வெற்றி கரமாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இதனால், தமிழகம் கடந்த 8 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக உருவாகி உள்ளது. தமிழகத்தில் நடந்த சிறப்பு முகா மில், 65.80 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டுள்ளது. 2ஆம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி நடக்க உள்ளது

வெளிமாநிலங்களில் இருந்து வேலை தேடி, தமிழகத்திற்கு வரு பவர்களின் குழந்தைகளால் போலியோ நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது. அதனால், அந்த குழந்தைகளுக்கு கடந்த டிசம்பர் 11 மற்றும் ஜனவரி 8ஆம் என இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. நேற்று நடந்த சிறப்பு முகாமில் இடம் பெயர்ந்து வாழ்வோர் மற்றும் இலங் கை வாழ் அகதிகளின் 32 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது.
போலியோ ஒழிப்பில் இந்தியா சாதனை
இந்தியாவில் 1985 ல் தான் போலியோ முகாம்கள் தொடங்கபட்டது.அப்போது  3.5 லட்சம் பேர் போலியோ பாதிப்புக்கு உள்ளானது  கண்டறியப்பட்டது. ஆனால் இது படிப்படியாகக் குறைந்து கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் ஒரு வயதுக் குழந்தை போலியோவால் தாக்கப்பட்டது பதிவானது. கடந்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதியிலிருந்து இதுவரை ஒருவர் கூட போலியோ நோய் பாதிப்புக்குள்ளாகவில்லை.

ஓராண்டாக போலியோ நோய் தாக்குதலுக்கு எவரும் உள்ளாகாதது வரவேற்கத்தக்க அம்சம் என்றாலும், இத்துடன் இந்த பணி நிறைவடைந்து விடவில்லை. இதே நிலை வரும் ஆண்டுகளில் தொடர தொடர் நடவடிக்கை அவசியம் 

3 comments:

Staff Nurse PHC said...

Yes, really true. We must work hard for that many years. I wish all the workers of Pulse Polio Immunization Programme through this comment.

Staff Nurse PHC said...

Yes. We must work hard more years for that. I wish all the workers who involved in the Pulse Polio Immunization Programme through this comment.

Staff Nurse PHC said...

Yes. We must work hard more years for that. I wish all the workers who involved in the Pulse Polio Immunization Programme through this comment.