Showing posts with label அண்ணா பிறந்தநாள் விழா. Show all posts
Showing posts with label அண்ணா பிறந்தநாள் விழா. Show all posts

26 October 2008

பேரரிஞர் அண்ணா பிறந்தநாள் விழா



15.09.2008 பேரரிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா அன்று உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து அவைகளது முன்னிலையில் நடைபெற்ற விழாவில் கர்பிணிபெண்களுக்கு வாராந்திர பரிசோதணையின் போது இலவச மதிய உணவு ,மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு மூன்றுவேளை சத்துணவு ( மூன்று நாளைக்கு),குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்களுக்கு மூன்றுவேளை சத்துணவு ( மூன்று நாளைக்கு),திட்டம் செயல்படுத்தப்பட்டது.


தற்போது பிரசவமாகி மருத்துவமணை யிலிருந்து வீட்டிற்கு செல்லும் போதே குழந்தைக்கான பிறப்புச் சான்று ஆரம்பசுகாதார நிலையத்திலேயே வழங்கப்பட்டு வருகிற நிகழ்வை கொண்டாடும் வகையில் அன்றைய தினம் டிஸ்சார்ஜ் ஆன தாய்மார்களுக்கு குழந்தக்கான பிறப்புச்சான்று வழங்கப்பட்டது.

பிரசவமான ஒரு வாரத்திற்குள் ஜனனி சுரக்க்ஷா யோஜனா திட்டத்தின் மூலம் ரூ.700 க்கான காசோலை பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்பட்டது.
உடன் கர்பிணிப்பெண்களுக்கு வளையல் காப்பும் கொண்டாடப்பட்டது.


மருத்துவ அலுவலர் திரு.பி.பாரதிராஜா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவை வட்டார சுகாதார அய்வாளர் திரு.இ.இராஜலிங்கம் ஏற்பாடு செய்திருந்தார்.
உடன் கர்பிணிப்பெண்களுக்கு வளையல் காப்பும் கொண்டாடப்பட்டது.


மருத்துவ அலுவலர் திரு.பி.பாரதிராஜா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவை வட்டார சுகாதார அய்வாளர் திரு.இ.இராஜலிங்கம் ஏற்பாடு செய்திருந்தார்.


இதே விழா காவல்காரன்பட்டி ஆரம்ப்ப சுகாதார நிலையத்திலும் நடைபெற்றது.மரு.தேன்மொழி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ் விழாவில் கர்பிணிபெண்களுக்கு வளைகாப்பு சிறப்பாக செய்யப்பட்டது. சில புகைப்படங்கள் சிலைடு ஷோவாக.