PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
26 November 2012
05 June 2012
அரசு ஊழியர் இயக்க வரலாற்றில் தோழர் எம்.ஆர். அப்பன்
16 December 2011
தெரிந்து கொள்வோம் நம் துறைச்செயலரை.
Everyday Leadership
வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இவரது பேட்டியின் கானொளியும் அவர்பற்றிய சுருக்கமும் கீழே.
Girija Vaidyanathan, IAS, is currently the principal secretary of the Health and Family Welfare Department in the Government of Tamil Nadu. Since joining the prestigious Indian Administration Service thirty years ago, she has held numerous positions overseeing departments in health, education, agriculture, transportation and state planning. Ms. Vaidyanathan completed graduate studies in physics, chemistry and mathematics.
09 December 2011
கவிஞர் ஜீவி
சமீபகாலமாக ”டைம்ஸ் ஆப் இந்தியா ” தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும்
எங்கண்ணே ஆராரோ ஆரிரரோ......
குறிஞ்சி மலைத்தேனே கொண்டாடும் சந்தனமே.....
சரிஞ்சி படுத்திருக்கும் சென்பகமே கண் உறங்கு. (ஆஆ....)
நிலவே தூங்கும் வேள...நீயேன் தூங்கவில்லை
நிலவே தூங்கும் வேள...நீயேன் தூங்கவில்லை
ஆற்றங்கரை காற்றினிலே அன்பே கண் உறங்கு..... (ஆஆ.....)
ஆற்றங்கரை காற்றினிலே அன்பே கண் உறங்கு
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மர்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளராக இருக்கிறார்.
அழுத்தி அழுத்தி சீவினாலும் படியாமல்
நெற்றியில் விழுகிறது கற்றை முடி.
பார்த்துப் பார்த்து போட்டாலும்
டீச்சரின் கோட்டை விட்டு
விலகிப் போகிறது பையனின் 'ஆனா'.
தேடித் தேடி நடந்தாலும் பாதச்சுவட்டை விட்டு
தவறிப் போகிறது நடை.
எப்படித்தான் அலசினாலும் எங்காவது ஓரிடத்தில்
அதிகமாய் போய்விடுகிறது சட்டையில் நீலம்
அறைக்குள் வைத்தே வளர்த்தாலும்
ஜன்னலுக்கு வெளியே தலை சீட்டிச்
சிரிக்கிறது பூ !
ஒரே மாதிரி டிக் டிக் கேட்டு
வாழ்க்கை நகரவேண்டுமென
ஏன் நினைக்கிறாய் ?
(நைலான் ஊஞ்சல்)
இன்னொரு கவிதையில் ...
பித்தளை சட்டிகளுக்கு
புளிச்சக்கை.
சில்வர் தட்டுகளுக்கு
விம் பவுடர் .
வெள்ளி பாத்திரங்களுக்கு
விபுதி மட்டும்.
பளபளவென
விளக்கி வைக்கும் அம்மாவால்
கடைசிவரை விளக்கவேமுடியவில்லை
அப்பாவிடம் தன் மனசை...............
ஓட்டு வீடுகள் காங்கிரீட் வீடுகளாகவும்,கைவிசிறிகள்,ஃபேன்,ஏர்கூலர்,ஏசி என மாற்றம் பெறுகிறது.கரி படிந்த சமையலறையில் முன்பு அம்மாக்கள் சமைத்தார்கள்.இப்போதோ டைல்ஸ்பதித்த அழகிய சமையலறையில் பெண்கள் சமைக்கிறார்கள்.வீடுகள் தோறும் புறத்தோற்றம் மாறியிருக்கிறதேயொழிய அதில் வசிக்கும் பெண்களின் மன வெட்கை குறையவில்லை.’ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்’எனும் பாரதி வரிகளை வழிமொழிகிற கவிதைகளை கவிஞர்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும்.” என தானும் எழுதுவதோடு சக கவிஞர்களை கைபிடித்து தடம் பார்த்து அழைத்துச் செல்லும் பணியினையும் மேற்கொண்டு வருகிறார்.
- வானம் தொலைந்து விடவில்லை ( 1993)
- இருவேறு முகங்கள் (1996)
- நைலான் ஊஞ்சல் ( 2001)
- சின்னஞ்சிறகுகள் (2003)
- அஞ்சறைப்பெட்டி (2007)
- கவிதைஉறவுபரிசு,
- தாரக அரக்கட்டளை பரிசு,
- ரோட்டரி,லயன்ஸ் சங்கங்கள் பாராட்டுக்களை பெற்றவர்.
உதாரணமாக
ச்சே.. சின்னப்புள்ளையாவே இருந்துருக்கலாம்
மரமாய் முளைக்குமோ?
கிளைவிட்டு வளர்ந்து வயிறு கிழிக்குமோ ?
புத்தகத்தில் வைத்த மயிலிறகு
நான் ஊருக்குப் போன நாள் பார்த்து
குட்டி போட்டால்
யார் அதற்கு தீனி போடுவார் ?
பள்ளிநாட்களில்
பால்யவயதில்
இவ்வாறாக
தினமும் ஒரு கவலை
மனதில் எழும்
0
வேலைகிடைக்குமா ?
கிடைத்தது நிலைக்குமா ?
வருமானம் போதுமா ?
வாழ்க்கை சிறக்குமா ?
வளர்ந்த பிறகு
வளர்கின்ற கவலையில்
மாட்டிக்கொள்கிற மனசு
நினைத்துப் பார்க்கும்
மீண்டும் வராதா ?
அந்தப் பால்ய நாட்கள் !
அப்துல்கலாம்,சுஜாதா ஆகியோர் இவர்து படைப்புகளை குறிப்பிட்டு எழுதியுள்ளனர்.
இதுவரை பேராசிரியர் மோகனசுந்தரம், பழனித்துரை ஆகியோர் இவரது கவிதைகளை ஆய்வு செய்து எம்ஃபில் பட்டம் பெற்றுள்ளனர்.
ஒரு கவிதையில் இப்படி சொல்கிறார்.
இரயில்எஞ்ஜினாய்
எப்போதும்இயங்கு.
கூடவேபலரைச்
சேர்த்துக்கொண்டு
உற்சாகமாகக்
கூவிக் கொண்டு...'
http://www.facebook.com/profile.php?id=100001860607183
முகவரி
211/7ஏ பொற்குடையார் கோயில் தெரு
அறந்தாங்கி 614616
செல்:
9443120490
04371-270490
இமெயில்
GEEVEEKAVI@GMAIL.COM
06 December 2011
ஒரு டாக்டரின் டயரியிலிருந்து
22 August 2011
13 August 2011
என்ன உலகமடாசாமி.
மேலே கண்ட லிங்ல் எனது எல்லா பதிவுகளும் ஸ்டோர்செய்யப்பட்டுள்ளது.எனது அனுமதிவாங்கப்படவில்லை.மேலும் இப் பதிவுகளுக்கான லிங்க் ம் கொடுக்கப்படவில்லை.
என்ன உலகமடாசாமி.
26 October 2010
அல்மா-அட்டா பிரகடணம் (Alma-ata Declaration)
1978ல் அல்மா அட்டா என்ற ரஷ்ய நகரில் உலக சுகாதார நிறுவனம் (W.H.O) கூட்டிய மாநாட்டின் இறுதியில் வெளியிடப் பட்ட அறிக்கை கி.பி. 2000க்குள் அனைவருக்கும் மருத்துவ நலம் வழங்க உறுதியளித்தது. இந்த உறுதிமொழி பிரகடனத்தில் இந்திய அரசும் கையொப்ப மிட்டிருந்தது
தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு 2010-11 ல் பக்கம் 56 அத்யாயம் 5ல் கீழ்கண்டவாறு இப்பிரகடணத்தைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
1978 அல்மா அட்டா வில் தான் ஆரம்ப சுகாதார சேவை என்பதற்கான இலக்கணம் வகுக்கப்பட்ட்து.ஆரம்ப சுகாதார சேவை என்பது ஒரு அடிப்படையான அத்டியாவசிய சுகாதார சேவையாகும்.இதில் முழுமையாக சமூக பங்கேற்போடு மக்கள் வாழும் கிராமங்களுக்கு அருகிலேயே அவர்களது விருப்பத்திற்கு ஏற்றதாகவும்,பொருளாதார சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும்.
பொது சுகாதாரம் மர்றும் மருத்துவத்துறையில் பணியாற்றும் அனைவரும் படிக்க வேண்டிய பிரகடணம் இது.
23 October 2010
கருத்தரித்த பெண்களின் மரண விகிதம் பற்றிய சர்ச்சை
கருத்தரித்த பெண்களின் மரண விகிதத்தில் ஐ.நா. நிர்ணயித்துள்ள இலக்குகளைஎட்டுவதில் இந்தியா சரியான பாதையில்தான்சென்று கொண்டிருக்கிறது என்று இந்தியஅரசு தெரிவித்திருந்தது.
இது குறித்து அருணா காஷ்யப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியஅரசு அபாயகரமாக இந்திய மக்களை திசை திருப்புகிறது." என்றுகூறியுள்ளார்.
(“The Indian government should stop playing number games with women's lives,”)
கருத்தரித்த பெண்கள் மரண விகிதத்தை இந்தியா குறைத்து வந்தாலும் ஐ.நா. நிர்ணயித்துள்ள புத்தாயிரமாண்டு இலக்குகளுக்கு அருகில் அதுஇல்லை என்று உலகச் சுகாதார மையமும், ஐ.நா. அமைப்புகளும் செய்துள்ளமதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
ஐ.நா. புத்தாயிர வளர்ச்சி இலக்குகள் உச்சி மாநாட்டிற்கு முன்னதாகவேவெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி, இந்தியா, ஆப்கான், வங்கதேசம்,காங்கோ குடியரசு, எத்தியோப்பியா, இந்தோனேசியா, கென்யா, நைஜீரியா,பாகிஸ்தான், சூடான், தான்சானியா, ஆகிய நாடுகள் கருத்தரித்த பெண்களின்உலக அளவிலான மரண விகிதத்தில் 65% என்று பங்களிப்பு செய்துவருகிறதுஎன்று தெரிவித்துள்ளது. அதாவது உலக அளவில் கர்ப்பம்தரித்த பெண்கள்அதிக அளவில் இந்த நாடுகளில்தான் மரணம் அடைந்து வருகின்றனர்.
2008ஆம் ஆண்டு புள்ளிவிவரம் இது. ஆனால் இதனை இந்திய அரசுமறுத்தது. ஆனால் ஐ.நா. சுகாதாரப் பிரிவு உடனடியாக இந்திய அரசின்மறுப்பை எதிர்த்து ஐ.நா. இலக்குகளை இந்தியா சந்திக்காது போகும்நிலை உள்ளது என்று தெரிவித்திருந்தது.
அதாவது "இன்ஸ்டிட்யூஷனல் டெலிவரீஸ்" என்று அழைக்கப்படும் ஒருசுகாதார நிலையத்தில், அது மருத்துவமனைகள் மற்றும் பிற வசதிகள்நிரம்பிய இடங்களில் மகப்பேறு நடக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதைவைத்துக் கொண்டு இந்தியா இந்த விவகாரத்தில் தாங்கள் முன்னேற்றம்கண்டு வருவதாகத் தவறாக கூறிவருகிறது.
இதனாலெல்லாம் கருத்தரித்த பெண்களின் மரண விகிதம் இந்தியாவில்குறிப்பிடத்தகுந்த அளவில் குறைந்துள்ளது என்றாலும் அந்த வசதிகள்இன்மையால் நிகழும் மரணங்கள் பற்றி இந்திய அரசு எதையும்குறிப்பிடுவதில்லை.
2009, 2010 ஆம் ஆண்டுகளில் சுமார் 1 கோடிப் பெண்கள் மருத்துவமனைகளில்பாதுகாப்பான பிரசவம் பெற்றனர். என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் மருத்துவமனைகளில் அல்லதுசுகாதார மையங்களில் மகப்பேறு அடையும்தாய்மார்களில் எத்தனை பேர் அதன் பிறகுஅல்லது அங்கிருந்து வெளியேறி வீட்டுக்குச்சென்ற பிறகு உயிரிழந்துள்ளனர் என்பதைஇந்திய அரசு கண்டு கொள்வதில்லை,இதுதான் இந்தத் திட்டம்வெற்றிபெற்றதற்கான அளவு கோல் என்றுமனித உரிமை கண்காணிப்பு அமைப்புதெரிவித்துள்ளது.
சுகாதார வசதிகள் இன்மை, மோசமானபோக்குவரத்து வசதிகள், அவசரகாலமகப்பேறு வசதிகள், மகப்பேறுக்குப் பிந்தைய சிகிச்சை மற்றும் கவனிப்புகள்ஆகியவற்றில் போதாமை காரணமாக இந்தியாவில் இன்னும் மரண விகிதம்அதிகமாகவே உள்ளது.
மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தனது அறிக்கையில் தங்களது இந்தஅறிக்கைக்கு உதாரணமாக கடந்த ஜூலை மாதம் புதுடெல்லியில் எந்தவசதியுமின்றி நடைபாதையில் குழந்தை பெற்ற தாய் ஒருவர் படுமோசமான சூழ்நிலையில், அசுத்தமான மழைநீர் நிரம்பிய இடத்துக்கு அருகில்பிரசவம் முடிந்து 4 நாட்கள் அவதியுற்று கவனிப்பாரற்று பிறகு இறந்துபோனதைச் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவில் உள்ள ஒரு திட்டத்தின் படி பிரசவ விடுதிகளில் பிரசவம்செய்து கொண்ட தாய்மார்களுக்கு ரொக்க ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது.ஆனால் வீட்டில் பிரசவம் பார்த்தவர்களைக் கூட பிரசவ மருத்துவமனையில்பிரசவம் பார்த்துக் கொண்டதாக சுகாதார ஊழியர்கள் வலியுறுத்தி வரும்பணத்தில் சரிபாதி பங்கு பெறுவதும் இந்த நாட்டில் நடந்து வருகிறதுஎன்று மனித உரிமை அமைப்பிடம் பெண்கள் சிலர் புகார் கூறியதையும்இந்த அறிக்கை பதிவு செய்துள்ளது.
சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாமையால், பிரசவ ஆஸ்பத்திரிக்குச்செல்லும் முன்னரே பல கருத்தரித்த பெண்கள் இறந்து விடுவதும் தினசரிநிகழ்வாக இருந்து வருகிறது.
இவையெல்லாம் இந்திய அரசு வெளியிடும் உரிமை கோரல் அறிக்கைகளில்காணப்படுவதில்லை. மேலும் அவசரகால போக்குவரத்து வசதிகள் மேம்பாடுஅடைந்ததாகவும் தெரியவில்லை.
மனித உரிமை கண்காணிப்பினர் வருகை தந்த பெரும்பாலானமருத்துவமனைகளில் சாதாரண பிரசவம் மட்டுமே நடைபெறுகிறது.
தொடர்ந்து கருத்தரித்த பெண்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டால் தொடர்ந்துஅவர்களை வேறு வேறு மருத்துவமனைகளுக்குச் செல்லுமாறுகூறப்படுகிறது. கடைசியாக மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளுக்குஅவர்கள் செல்லும்போது காலதாமதமாகி விடுகிறது. மேலும் நல்லசிகிச்சையும், கவனிப்பும் பெற ஏழைத் தாய்மார்களும் ஒரு சிலரை 'கவனிக்க'வேண்டிய நிலையும் உள்ளது என்று அந்த மனித உரிமை அமைப்பின்அறிக்கை இந்திய அரசுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
31 July 2010
போய்வாருங்கள் நரேஷ் குப்தா.
14 July 2010
மாணவ மாணவியர் களுக்கு பாராட்டுச் சானறிதழ்


கரூர் மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறையில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களின் குழந்தைகளில் இநத ஆண்டு (2009-10) 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் 90 சதவிகிதத்திற்கு மேல் மதிபபெண் பெற்றவர்களுக்கு பாராட்டுச் சானறிதழ வழங்கப்பட்டது.மரு வீ.வீரபாண்டியன் துணை இயக்குனர் நலப்பணிகள் மற்றும் குடும்பநலம் அவர்களது முயற்சியில் 12.07.2010 அன்று விழாநடைபெற்றது.தோகமலை வட்டார ஆரம்ப சுகாதாரநிலையத்திற்குட்பட்ட காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ஓட்டுனராகப் பணியாற்றும் திரு.முருகபூபதி அவர்களின் மகன் திரு கபிலன் அவர்களும் 91சதவிதம் பெற்று சான்றிதழ் பெற்றார்.
23 May 2010
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய 57வது மாநில மாநாடு

அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மற்றும் சலுகைகள் செலவினமாக கருதவேண்டியதில்லை. அரசு ஊழியர்கள் அரசின் திட்டங்களை, பணிகளை செய்து முடிப்பவர்கள். அவர்கள் இல்லையென்றால் அரசு இயந்திரம் இயங்காது. அரசு ஊழியர்களுக்கு தரப்படும் ஊதியம் மூலதனமே என, நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். அரசு ஊழியர்கள் தான் அரசின் பணிகளை செய்து முடிக்கின்றனர். அரசு ஊழியர்களுக்கு ஓட்டுக்காக சலுகைகள் தரப்படுகின்றன என, கருதுவது தேவையற்றது.
அரசு ஊழியர்களும் தொழிலாளர்கள் தான். நாங்களும் தொழிலாளர்கள் தான். தொழிலாளர்களிடம் பாகுபாடு பார்க்க முடியாது. தொழிலாளர்களின் தேவையை அறிந்து நிறைவேற்றுவது அரசின் கடமை.
22.5.10 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய 57வது மாநில மாநாட்டில் தமிழக் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி.
11 May 2010
09 April 2010
திருமணம்
05 August 2009
தொடர் கேள்விபதில்
>மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்
அவர்களுக்கு நன்றி.


























