Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

26 November 2012

நோயாளிகள் கவனிக்க வைக்க வேண்டிய தகவல்

ஒவ்வொரு மருத்துவ மணைகளிலும் நோயாளிகள் கவனிக்க வைக்க வேண்டிய தகவல் நன்றி http://hainallama.blogspot.in/

05 June 2012

அரசு ஊழியர் இயக்க வரலாற்றில் தோழர் எம்.ஆர். அப்பன்


முதன் முதலாக 31.01.1920 NGO யூனியன் உருவாக்கப்பட்டது முதல், வளர்ச்சிப் போராட்டம், காலவரிசைப்படி கூட்டம், இயக்கம், அதனுடைய பலம், பலகீனம், சந்தித்த துரோகம் பெற்ற படிப்பினைகள், பங்கெடுத்தவர் பட்டியல் என முழு விபரங்களோடு அரசு ஊழியர் சங்க வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் இப்புத்தகத்தை படித்தால் போதுமானது.
அதேபோல் ஆளுகிற கட்சி, ஆட்சிக்கு வருமுன் என்ன சொல்கின்றன. வந்த பின் எப்படி நடந்து கொள்கின்றன என காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள், அரசு ஊழியர்கள் பிரச்சனையிலும், தொழிற் சங்கத்தை அணுகும் முறையிலும், நடந்து கொண்ட விதம் பற்றி தக்க ஆதாரத்தோடு அவர்களின் வர்க்க ‘‘முகங்களை’’ அம்பலப்படுத்தியுள்ளது.
16.10.1947 உள்துறை அமைச்சராக இருந்த டாக்டர் பி. சுப்பராயன் அரசு ஊழியர்கள் பற்றி விவாதிக்க அனுமதிக்கக்கூடாது என்று சட்டமன்றத்தில் வாதாடியது. 15.12.1947 இல் அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தை காங்கிரஸ் அரசு கடுமையாக கையாண்டது. காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. கே. காமராஜ் அவர்களை கண்டித்து அறிக்கை வெளியிட்டது.
மத்திய அரசிற்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என 1968 காலகட்டத்தில் கோரிக்கை வந்தபோது என்னிடம் கருணை இருக்கிறது. நிதிதான் இல்லை என்று கருணாநிதி அவர்கள் நிராகரித்தது.
1982_இல் NGO போராட்டம் நடத்தினால் பதவியை விட்டு விலகி எதிர்போராட்டம் நடத்துவேன், இனியும் என்னை பயமுறுத்த முடியாது என திரு. எம்.ஜி.ஆர். எச்சரிக்கை செய்தது.

1 1/2 வருடமாக MGRஐ பார்க்க முடியாத நிலைமையில் தமிழகத்திலிருந்து சென்ற அரசு ஊழியர் சங்கத் தலைவர்களை 8 நிமிடத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா சந்தித்தது.

இப்படி ஏராளமான ஆதாரங்களோடு இவ்வரலாற்று நூல் எழுதப்பட்டுள்ளது.

இதன் மூலம் தெரிய வந்த ஒரு வருத்தத்திற்குரிய விஷயம் ஆசிரியர்களைவிட அதிகம் ஊதியம் பெற்று வந்த அமைச்சுப்பணியாளர்கள் ஒரு கட்டத்தில் ஆசிரியர்களைவிட குறைவாக ஊதியம் பெறுவது தெரிந்தும் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக தோழர் எம்.ஆர்.அப்பன் அதனை கண்டுகொள்ளாமல் இருந்தது வேதனையாக இருக்கிறது. இன்றைக்கு அமைச்சுப்பணியாளர்களின் மிகக்குறைவான ஊதியத்திற்கு அவர் ஒரு காரணமாக இருந்துவிட்டாரோ எனத் தோன்றுகிறது. மேலும் அமைச்சுப் பணியாளர்களின் ஊதியம் தொடர்பாக அப்போது கோரிக்கைகள் எழுப்பி வந்த என்.ஜி.ஓ , பணியாளர் சங்கம் ஆகியவைகளை அந்த கோரிக்கையை எழுப்பியதற்காகவே கேலிசெய்யும் பாங்கு சில இடங்களில் தெரிய வருகிறது. 

அமைச்சுப்பணியாளர்களின் குறைவான ஊதிய நிர்ணயத்தில் உள்ள குறைகளை களைய மட்டுமே போராட்டத்தை முன்னெடுக்க சிவஇளங்கோ மற்றும் பணியாளர் சங்கங்கள் முயற்சி செய்த போது இதர தரப்பு ஊழியர்களின் கோரிக்கைகளையும் அதில் சேர்த்து பிரச்சினையை நீர்க்கச் செய்து அவர்தம் நிலையில் உள்ள அனைவருக்கும் 5% தனிஊதியம் என்ற நிறைவில்லாத சலுகையினை அமைச்சுபணியாளர்கள் பெற அரசு ஊழியர் சங்கத்தினர் காரணமாக இருந்த வரலாற்றுப் பிழையினை இப்புத்தகம் மூலம் உணர முடிகிறது.இதன் தாக்கம் இன்றுவரை அமைச்சுப்பணியாளர்கள் ஊதிய அளவில் நிமிர முடியாமல் உள்ளனர் என்பது நிதர்சனம்.

ஒட்டு மொத்தத்தில் ஒரு மாவீரனின் வாழ்க்கையினை படித்த திருப்தி.ஒரு இயக்கத்தின் வரலாற்று ஆவணப்படம் பார்த்த மாதிரியான உணர்வு.நிறைய எழுத்துப் பிழைகள் தவிர்த்திருக்கலாம்.பாகம் இரண்டு விரைவில் வெளிவரவேண்டும்.

16 December 2011

தெரிந்து கொள்வோம் நம் துறைச்செயலரை.



Everyday Leadership


வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள  இவரது பேட்டியின் கானொளியும் அவர்பற்றிய சுருக்கமும் கீழே.


Girija Vaidyanathan, IAS, is currently the principal secretary of the Health and Family Welfare Department in the Government of Tamil Nadu. Since joining the prestigious Indian Administration Service thirty years ago, she has held numerous positions overseeing departments in health, education, agriculture, transportation and state planning. Ms. Vaidyanathan completed graduate studies in physics, chemistry and mathematics.



The biographical information on this page is current as of the time this 

person was interviewed for the Everyday Leadership video project but 

may not reflect current developments in their life or career.

வீடியோவை கிளிக் செய்து பார்க்கலாம்.

09 December 2011

கவிஞர் ஜீவி


கவிஞர் ஜீவி என்கிற ஜி.வெங்கட்ராமன்

புதுக்கோட்டை துணை இயக்குனர் ( தொழுநோய் ) அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளாராகப் பணிபுரிகிறார். என் எழுத்துகளை யார் படிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது., ஏன் எழுதுகிறேன் என்பதும் எனக்குத் தெரியாது', என்று எழுதுவது பற்றி 'தெளிவாக' கருத்துகளைப் பகிரும் படைப்பாளர்களிடையே, தன் எழுத்துகளை படிக்கும் வாசகன் யார், தன் எழுத்து யாருக்காக எழுதப்படுகிறது, எழுதுவதன் சமூகத் தேவை என்ன என்பது பற்றிய சரியான புரிதல்களோடு கால் நூற்றாண்டு காலமாக தமிழில் கவிதைகள் எழுதிவரும் கவிஞர் ஜீவி பொது சுகாதாரத்துறையை சேர்ந்தவர் என்பது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கக் கூடியது.
சமீபகாலமாக ”டைம்ஸ் ஆப் இந்தியா ” தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும்
ஏ....ஆராரோ ஆரிரரோ......
எங்கண்ணே ஆராரோ ஆரிரரோ......
குறிஞ்சி மலைத்தேனே கொண்டாடும் சந்தனமே.....
சரிஞ்சி படுத்திருக்கும் சென்பகமே கண் உறங்கு. (ஆஆ....)
நிலவே தூங்கும் வேள...நீயேன் தூங்கவில்லை
நிலவே தூங்கும் வேள...நீயேன் தூங்கவில்லை
ஆற்றங்கரை காற்றினிலே அன்பே கண் உறங்கு..... (ஆஆ.....)
ஆற்றங்கரை காற்றினிலே அன்பே கண் உறங்கு
பாடல் அறிவொளி இயக்க காலத்தில் இவர் எழுதியது தான்.

  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மர்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளராக இருக்கிறார்.

வாழ்வை சரியான கோணத்தில் பார்ப்பதும்,அதனை பதிவு செய்வதும் இவரது கவிதைகளில் முன்னிலை வகிக்கிறது.

உதாரணமாக:

மீறல்

அழுத்தி அழுத்தி சீவினாலும் படியாமல்
நெற்றியில் விழுகிறது கற்றை முடி.
பார்த்துப் பார்த்து போட்டாலும்
டீச்சரின் கோட்டை விட்டு
விலகிப் போகிறது பையனின் 'ஆனா'.
தேடித் தேடி நடந்தாலும் பாதச்சுவட்டை விட்டு
தவறிப் போகிறது நடை.
எப்படித்தான் அலசினாலும் எங்காவது ஓரிடத்தில்
அதிகமாய் போய்விடுகிறது சட்டையில் நீலம்
அறைக்குள் வைத்தே வளர்த்தாலும்
ஜன்னலுக்கு வெளியே தலை சீட்டிச்
சிரிக்கிறது பூ !
ஒரே மாதிரி டிக் டிக் கேட்டு
வாழ்க்கை நகரவேண்டுமென
ஏன் நினைக்கிறாய் ?

(நைலான் ஊஞ்சல்)

இன்னொரு கவிதையில் ...

பித்தளை சட்டிகளுக்கு
புளிச்சக்கை.
சில்வர் தட்டுகளுக்கு
விம் பவுடர் .
வெள்ளி பாத்திரங்களுக்கு
விபுதி மட்டும்.
பளபளவென
விளக்கி வைக்கும் அம்மாவால்
கடைசிவரை விளக்கவேமுடியவில்லை
அப்பாவிடம் தன் மனசை...............

ஓட்டு வீடுகள் காங்கிரீட் வீடுகளாகவும்,கைவிசிறிகள்,ஃபேன்,ஏர்கூலர்,ஏசி என மாற்றம் பெறுகிறது.கரி படிந்த சமையலறையில் முன்பு அம்மாக்கள் சமைத்தார்கள்.இப்போதோ டைல்ஸ்பதித்த அழகிய சமையலறையில் பெண்கள் சமைக்கிறார்கள்.வீடுகள் தோறும் புறத்தோற்றம் மாறியிருக்கிறதேயொழிய அதில் வசிக்கும் பெண்களின் மன வெட்கை குறையவில்லை.’ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்எனும் பாரதி வரிகளை வழிமொழிகிற கவிதைகளை கவிஞர்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும்.” என தானும் எழுதுவதோடு சக கவிஞர்களை கைபிடித்து தடம் பார்த்து அழைத்துச் செல்லும் பணியினையும் மேற்கொண்டு வருகிறார்.

படிக்கும் வாசகனின் கண்களைக் கட்டி, இருட் புதருக்குள் இழுத்துப் போகும் பம்மாத்துத் தனங்கள் இல்லாமல், வாசகனருகே சக நண்பனாய் அமர்ந்து தோள்மேல் கைபோட்டு சிநேகமாய்ப் பகிர்ந்து கொள்ளும் எளிய-இயல்பான மொழியிலான கவிதைகள் ஜீவியினுடையவை.

இதுவரை வெளிவ்ந்துள்ள கவிதை தொகுப்புகள்:
  • வானம் தொலைந்து விடவில்லை ( 1993)
  • இருவேறு முகங்கள் (1996)
  • நைலான் ஊஞ்சல் ( 2001)
  • சின்னஞ்சிறகுகள் (2003)
  • அஞ்சறைப்பெட்டி (2007)

கட்டுரைத் தொகுப்புகள்

  • கவிதை குறித்த சொற்கள் (2008)
  • கவிதையும் கவிதை சார்ந்தும் (2011)
தமிழ்நாடு முழுதும் பட்டிமன்றம் கவியரங்கம் வழக்காடுமன்றம் உரைவீச்சு போன்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுத்துவரும் இவர் புதுக்கோட்டை மாவட்ட அறிவொளி இயக்க ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார்.(அப்போது தான் குறிஞ்சி மலைத்தேனே பாடல் எழுதப்பட்டது).

தமிழ் ஆட்சி மொழியாக 50 ஆண்டுகள் ஆனதை ஒட்டி தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி பண்பாட்டு துறை நடத்திய கவிதை போட்டியில் பரிசுபெற்றார்.

  • கவிதைஉறவுபரிசு,
  • தாரக அரக்கட்டளை பரிசு,
  • ரோட்டரி,லயன்ஸ் சங்கங்கள் பாராட்டுக்களை பெற்றவர்.
இந்த விருதுகளையெல்லாம் தாண்டி மக்களிடமிருந்து கிடைக்கும் வரவேற்பு இவரை மிகுந்த உற்சாகப்படுத்துகிறது என்கிறார்.ஒரு அரை மணிநேர பேச்சுக்காக 8 மணிநேரம் பிரயாணம் செய்து போக வேண்டியிருக்கும்,சில தருணங்களில் மேடைக்கு பின்புறமே முகம் கழுவி வந்த வேகத்தில் மேடை யேற வேண்டியதிருக்கும்.ஆனாலும் மக்களின் ஊக்கமும் தமிழின் ஆர்வமும் சளைக்காமல் இயங்கவைக்கிறது என்கிறார் ஒரு பேட்டியில்.முதல் நாள் இரவு இவரது பேச்சை கேட்ட ஒரு சாலையோர  வியாபாரி பேருந்தில் அமர்திருக்கும் இவர் மடியில் இவர் கேட்காமலே போட்டுச்செல்லும்  கடலை பொட்டலத்தை மக்களிடமிருந்து கிடைத்த விருதாக கருதும் இவர் யாருக்காக இயங்குகிறார் எனத் தெளிவாக்குகிறது.முற்போக்கு முகாம் என்றாலே வரட்டு பிரச்சாரக் கவிதை என்கிற பார்வை சில புத்தி ஜீவிகளிடம் இருக்கிறது.அந்த கருத்துகளை தகர்த்தெரிகிறது இவரது கவிதைகள்.

உதாரணமாக

ச்சே.. சின்னப்புள்ளையாவே இருந்துருக்கலாம்

கொட்டையோடு விழுங்கிய இலந்தை
மரமாய் முளைக்குமோ?
கிளைவிட்டு வளர்ந்து வயிறு கிழிக்குமோ ?

புத்தகத்தில் வைத்த மயிலிறகு
நான் ஊருக்குப் போன நாள் பார்த்து
குட்டி போட்டால்
யார் அதற்கு தீனி போடுவார் ?

பள்ளிநாட்களில்
பால்யவயதில்
இவ்வாறாக
தினமும் ஒரு கவலை
மனதில் எழும்
 0
 வேலைகிடைக்குமா ?
கிடைத்தது நிலைக்குமா ?
வருமானம் போதுமா ?
வாழ்க்கை சிறக்குமா ?
வளர்ந்த பிறகு
வளர்கின்ற கவலையில்
மாட்டிக்கொள்கிற மனசு
நினைத்துப் பார்க்கும்
மீண்டும் வராதா ?
அந்தப் பால்ய நாட்கள் !







இவர் சன் டிவி,பொதிகை,ஜெயா,மக்கள்,விஜய்,ராஜ்
என பல்வேறு தொலைக்காட்சி களில் பேட்டி அளித்துள்ளார்.

பல்வேறு வார,மாத இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகைவருகிறது.
இணைய இதழ்கள் அம்பலம்,ஆறாம்திணை,இந்தாம் போன்றவைகளில் இவர் தன் பங்களிப்பை செய்துள்ளார்.
அப்துல்கலாம்,சுஜாதா ஆகியோர் இவர்து படைப்புகளை குறிப்பிட்டு எழுதியுள்ளனர்.
இதுவரை பேராசிரியர் மோகனசுந்தரம், பழனித்துரை ஆகியோர் இவரது கவிதைகளை ஆய்வு செய்து எம்ஃபில் பட்டம் பெற்றுள்ளனர். 
இவ்வளவு ஆளுமைகள் நிரம்பிய இவர் எமது பொதுசுகாதாரத்துறையில் பணியாற்றுகிறார் என்பது எங்களுக்கெல்லாம் பெருமை அளிக்கக்கூடிய விஷயம்.
ஒரு கவிதையில் இப்படி சொல்கிறார்.

'ஒரு
இரயில்எஞ்ஜினாய்
எப்போதும்இயங்கு.
கூடவேபலரைச்
சேர்த்துக்கொண்டு
உற்சாகமாகக்
கூவிக் கொண்டு...'

வாழ்த்துக்கள் ஜீவி
உஙகளுடன் கம்பார்ட்மெண்ட்டாக இருப்பது எங்களுக்கு பெருமிதம்

இவரது face book முகவரி
http://www.facebook.com/profile.php?id=100001860607183
முகவரி
211/7ஏ பொற்குடையார் கோயில் தெரு
அறந்தாங்கி 614616
செல்:
9443120490
04371-270490
இமெயில்
GEEVEEKAVI@GMAIL.COM


06 December 2011

ஒரு டாக்டரின் டயரியிலிருந்து

                     பொதுவாக பத்திரிகைகளில் வெளிவரும் டாக்டர்கள் பற்றிய ஜோக் நிறைய படித்திருக்கிறேன்.நர்ஸ்ஸுடன் சரசமாடுவது,நோயாளிகளிடம் அதிக ஃபீஸ் வாங்குவது,ஆப்பரேஷன் சக்சஸ் ஆகாமல் நோயாளியை சாகடிப்பது,மருந்தை மாற்றிக் கொடுப்பது,கவனக்குறைவு ஆப்பரேஷன்,என இவைகள் இருக்கும.

உதாரணமாக,

”நோயாளி:  நான் பிழைக்கிறதுக்கு ஏதும் வழி இருக்கா?
உறவினர்:  ஒரு வழிதான் இருக்கு. இந்த ஹாஸ்பிட்டளோட பின் வழி. எந்திருச்சு ஓடி போயிடு.. பிழைசுக்குவே..”
                                 
நோயாளி„ டாக்டர் குருட்டு அதிர்ஷ்டம்னா என்ன?
 டாக்டர்„  நான் ஆபரேஷன் செய்தும் என் முன்னால் உட்கார்ந்து பேசறீங்களே அதான்

நோயாளி„ ஆபரேஷன் பண்றப்ப பாதியில் கரண்டு போயிட்டா என்ன டாக்டர் பண்ணுவீங்க?

 டாக்டர்„ அதை அந்த நர்சிடம் கேளுங்க...?

 நர்ஸ்„ போங்க டாக்டர்* எனக்கு வெட்கமா இருக்கு.. 

நோயாளி„ ?.....?......?.....? 

இப்படியாக எல்லாவற்றிலுமே  கோமாளிகளாகவும்,பணத்தாசை கொண்டவர்களாகவும்,காமுகனாகவும், டாக்டர்கள் சித்தரிக்கப் படுகிறார்கள்.மனிதர்களின் கடைசிக்கு முந்தைய நம்பிக்கை டாக்டர்கள் தான் என்றாலும் இத்தகைய ஜோக்குகள் காலம் காலமாக பல்வேறு மொழிகளிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.இது ஒரு அழகியல் முரண்.

                உண்மையில் டாக்டர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பல்வேறு நகைச்சுவைகளை ஆவணப்படுத்தினால் கணக்கிலட்ங்காது.ஒவ்வொரு நாளும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காணும் நகைச்சுவைகள் எண்ணற்றவை.”கார்டூனிஸ்ட் மதனின் “முன்னெசரிக்கை முத்தண்னா” “ரெட்டைவால் ரெங்குடு” போன்ற பல கேரக்டர்களை டாக்டர்கள் தினமும் சந்தித்து வருகிறார்கள்.அதை பற்றி பேசவோ,பதியவோ அவர்கள் முனைவதுமில்லை ஒருசிலரைத்தவிர.பெரும்பாலும் நோயாளிகளின்அறியாமைதான் இதன் முக்கிய கருவாக இருக்கும். அதனால் இதனை பதிவு செய்வதென்பது கேலி செய்வதாகிவிடுமோ என்ற அச்சமும் இருக்கும். மேலும் நோயாளிகளின் அந்தரங்கம் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகி விடுகிறது.இதர்கெல்லாம் மேலாக அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

ஆனால் மாறாக சமீபத்தில் டாக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களின் ”ஒரு டாக்டரின் டைரியிலிருந்து” மென் நூல் இணையத்தில் படிக்கக் கிடைத்தது.ஒரு டாக்டரின் அனுபவங்கள் அற்புதமாக பதிவு செய்யப்படுள்ள நூல் இது.இவர் ஈழத்தை சேர்ந்த இவரது ஒவ்வொரு கட்டுரையிலும் (பத்தி) நகைச்சுவை கொப்பளிக்கிறது.எதுவும் வலிந்து ஏழுதப்படவில்லை.மிக எதார்த்தமான பதிவுகள் அவை.நகைச்சுவையினூடாக ஈழத்தின் அவலம், மருத்துவத் தொழிலில் சந்திக்கக் கூடிய அபத்தங்கள் ஆகியவைகள் நேர்த்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக....
               ஈழத்தில் போர்க்காலங்களில் இவர் புலம் பெயறாமல் மக்களோடு இருந்து சேவை செய்திருக்கிறார்.அதை அவர் பெருமையாக்வும் நினைத்துக் கொண்டிருக்கிறார்.”
             ஆனால் நோயாளி இன்னொருவருடன் பேசிக்கொள்கிறார் ”கெட்டிக்கார டாக்டர்மார்லாம் நல்ல வேலை எடுத்துக் கொண்டு வெளியே போட்டினம்.இஞ்சை மிஞ்சி இருப்பவர்களுக்கு கெட்டிக்காரத்தன்ம் காணாது எண்டு போல” - எப்படி?..இதன் தலைப்பு ”வெளிநாட்டிற்கு ஓடித் தப்பலாமா?” 

இன்னொரு கட்டுரையில் டாக்டர்கள் கல்யாணவீடுகளில் சந்திக்கிற நிகழ்வுகள் பற்றிய குறிப்பு வருகிறது ..நல்லது கெட்டது எனப்பாராமல் டாக்டரை பார்த்தவுடன் நோவுபற்றியே பேசும் மனிதர்களை சுட்டுகிறார்.கொடுமையாக குழந்தைகளிடம் கூட “டாக்டர் மாமா ஊசிபோட்டுவார்” என டாக்டர்களை பூச்சாண்டியாக்குவர்களை வேடிக்கையாக இவர் குறிப்பிட்டாலும் அதன் பின்னுள்ள வேதனை உணரமுடிகிறது.

ஒரு ஞாவிறு மாலைப்பொழுதை கூறத்துவங்கும் இவர் இப்படி சொல்கிறார் “ அது ஓர் அமைதியான ஞாயிறு மாலை! ( ஆச்சிரியக் குறி கவனத்தில் கொள்ள வேண்டும்) குண்டடிப்புச் சத்தங்களும் ஷெல்களின் ஓசைகளும் ஹெலியின் வட்டமிடல்களும் கேட்காத அந்திமாலைப் பொழுது” என்கிறார்.ஈழத்தின் களேபரம் படிப்பவர் கண்களில் நிறைகிற்து.

”மருந்து கட்டாவிட்டால் சிறிய காயம் என கொமிட்டிக்காரர் லீவு தரமாட்டினம்.அடிக்கடி கோயில் பூசைக்கு குளிப்பது சிரமமாக இருக்கும்” என்கிற கோயில் அய்யமாருக்கு சிறிய காயத்திற்கு பெரிய கட்டுகட்டி விடநேர்கிறது டாக்டருக்கு.

வயது போனவர்கள் தானே என அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யாத உறவுகளை விமரிசிக்கிறார்.

போனவரியம் இளையவள் ஷெல் அடிச்சு என்ரை கண்முன்னாலே துசிச்சு செத்துப்போனாள்........மூத்தவன் போனமாதம் ஹெலி சுட்டு சன்னம் வயித்தில பட்டு பத்துநாளா ஆஸ்பத்திரியில் கிடந்து அவனும் போட்டான்......என கூறி ஏற்கனவே செய்த குடும்பக் கட்டுபாட்டு ஆப்பரேஷனை மாற்று ஆபரேஷன் செய்ய முடியுமா என கதறும் தகப்பனை படிக்கும் போது “ விதியே விதியே என் செய்ய நினைத்தாய் எம் தமிழ்ச்சாதியை”  என கண்கள் கலங்குகிறது.

”உன்னுடை பரம்பரை மாத்திரமல்ல ,எங்கடை தமிழ்ச்சமுதாயமே அழிஞ்சி போகாமால் இருக்க வேணும் என்றால் , இனி இங்கே ஒரு கருத்தடை ஆப்பரேஷன் கூட நடக்கக் கூடாது” என எண்ணிக்கொண்டேன் என முடிக்கிறார் அக்கட்டுரையை.

போரும்,அடக்குமுறையும் குதறிப்போட்ட உயிருக்கு உத்தரவாதமில்லாத ஒரு சமூகத்தில் குடும்பக்கட்டுப்பாடு ஆப்பரேஷன் அபத்தமாகத்தான் படுகிறது.இந்தக் கட்டுரையில் இது பல்வேறு பாத்திரங்கள் வாயிலாக விவாதம் நம்மை அடைகிறது.நல்ல உத்தி.

இன்னொரு கட்டுரையில் மண்ணெண்னைகடையில் கூட மருந்து விற்கிறார்கள் என்கிறார்.மருந்து வியாபாரிகளிடமிருந்து தமிழ் மக்களை காக்க க்டவுளாலும் முடியுமா என கேட்கிறார்.

இந்தக்கடுரைகள் 1986 -87 களில் எழிதப்பட்டு சஞ்சிகைகளில் பிரசுரிக்கப் பட்டவை, டொமெனிக்ஜீவா முகவுரை எழுதியுள்ளார்.மருத்துவத் துறை தாண்டிய ஒரு அற்புதப் படைப்பு இது.

இவரது வலைப்பூ

இது போல இன்ன பிற டாக்டர்களின் அனுபவப்பதிவுகள்

மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்

டாக்டர் சுரேஷ்


புத்தகம் டவுன்லோட் செய்ய




ஒரு டாக்டரின் டயரியிலிருந்து





  



13 August 2011

என்ன உலகமடாசாமி.

http://tamilnadu-stg.com/healthmail/

மேலே கண்ட லிங்ல் எனது எல்லா பதிவுகளும் ஸ்டோர்செய்யப்பட்டுள்ளது.எனது அனுமதிவாங்கப்படவில்லை.மேலும் இப் பதிவுகளுக்கான லிங்க் ம் கொடுக்கப்படவில்லை.
என்ன உலகமடாசாமி.

26 October 2010

அல்மா-அட்டா பிரகடணம் (Alma-ata Declaration)

1978ல் அல்மா அட்டா என்ற ரஷ்ய நகரில் உலக சுகாதார நிறுவனம் (W.H.O) கூட்டிய மாநாட்டின் இறுதியில் வெளியிடப் பட்ட அறிக்கை கி.பி. 2000க்குள் அனைவருக்கும் மருத்துவ நலம் வழங்க உறுதியளித்தது. இந்த உறுதிமொழி பிரகடனத்தில் இந்திய அரசும் கையொப்ப மிட்டிருந்தது

170க்கும் மேற்பட்ட உலக நாட்டு அரசாங்கங்களுக்கு மருத்துவ ஆலோசனைûயும், வழிகாட்டுதலையும் வழங்கி வருவது உலக சுகாதார நிறுவனம். இதில் அங்கம்வகிக்கும் நாடுகளின் சுகாதாரத்துறை தலைமைப் பொறுப்பிலுள்ளோர் ஆண்டுதோறும் கூடி முக்கிய முடிவுகளை மேற்கொள்ளுமிடம் உலக சுகாதாரப் பேரவை. இப்பேரவையின் முடிவாக அந்தந்த காலத்திற்கேற்ப உலக சுகாதார அறிக்கைகள் வெளிவருகின்றன

கி.பி. 2000க்குள் எல்லோருக்கும் மருத்துவ நலம் என்ற இலக்கை முன்வைத்த அல்மா அட்டா அடிப்படை மருத்துவ மாநாட்டின் பிரகடனம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த்து.

தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு 2010-11 ல் பக்கம் 56 அத்யாயம் 5ல் கீழ்கண்டவாறு இப்பிரகடணத்தைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

1978 அல்மா அட்டா வில் தான் ஆரம்ப சுகாதார சேவை என்பதற்கான இலக்கணம் வகுக்கப்பட்ட்து.ஆரம்ப சுகாதார சேவை என்பது ஒரு அடிப்படையான அத்டியாவசிய சுகாதார சேவையாகும்.இதில் முழுமையாக சமூக பங்கேற்போடு மக்கள் வாழும் கிராமங்களுக்கு அருகிலேயே அவர்களது விருப்பத்திற்கு ஏற்றதாகவும்,பொருளாதார சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும்.

பொது சுகாதாரம் மர்றும் மருத்துவத்துறையில் பணியாற்றும் அனைவரும் படிக்க வேண்டிய பிரகடணம் இது.



Declaration Almaata

23 October 2010

கருத்தரித்த பெண்களின் மரண விகிதம் பற்றிய சர்ச்சை

கருத்தரித்தப் பெண்கள் உடல் நலம்மற்றும் அவர்கள் மரணவிகிதம் பற்றியஇந்திய அரசின் உரிமை கோரல்களை ஆசியமகளிர் உரிமை மற்றும் மனித உரிமைகண்காணிப்பு ஆய்வாளர் அருணா காஷ்யப்கடுமையாக மறுத்துள்ளார்.

கருத்தரித்த பெண்களின் மரண விகிதத்தில் ஐ.நா. நிர்ணயித்துள்ள இலக்குகளைஎட்டுவதில் இந்தியா சரியான பாதையில்தான்சென்று கொண்டிருக்கிறது என்று இந்தியஅரசு தெரிவித்திருந்தது.


இது குறித்து அருணா காஷ்யப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியஅரசு அபாயகரமாக இந்திய மக்களை திசை திருப்புகிறது." என்றுகூறியுள்ளார்.

(“The Indian government should stop playing number games with women's lives,”)

கருத்தரித்த பெண்கள் மரண விகிதத்தை இந்தியா குறைத்து வந்தாலும் ஐ.நா. நிர்ணயித்துள்ள புத்தாயிரமாண்டு இலக்குகளுக்கு அருகில் அதுஇல்லை என்று உலகச் சுகாதார மையமும், ஐ.நா. அமைப்புகளும் செய்துள்ளமதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. புத்தாயிர வளர்ச்சி இலக்குகள் உச்சி மாநாட்டிற்கு முன்னதாகவேவெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி, இந்தியா, ஆப்கான், வங்கதேசம்,காங்கோ குடியரசு, எத்தியோப்பியா, இந்தோனேசியா, கென்யா, நைஜீரியா,பாகிஸ்தான், சூடான், தான்சானியா, ஆகிய நாடுகள் கருத்தரித்த பெண்களின்உலக அளவிலான மரண விகிதத்தில் 65% என்று பங்களிப்பு செய்துவருகிறதுஎன்று தெரிவித்துள்ளது. அதாவது உலக அளவில் கர்ப்பம்தரித்த பெண்கள்அதிக அளவில் இந்த நாடுகளில்தான் மரணம் அடைந்து வருகின்றனர்.

2008ஆம் ஆண்டு புள்ளிவிவரம் இது. ஆனால் இதனை இந்திய அரசுமறுத்தது. ஆனால் ஐ.நா. சுகாதாரப் பிரிவு உடனடியாக இந்திய அரசின்மறுப்பை எதிர்த்து ஐ.நா. இலக்குகளை இந்தியா சந்திக்காது போகும்நிலை உள்ளது என்று தெரிவித்திருந்தது.

அதாவது "இன்ஸ்டிட்யூஷனல் டெலிவரீஸ்" என்று அழைக்கப்படும் ஒருசுகாதார நிலையத்தில், அது மருத்துவமனைகள் மற்றும் பிற வசதிகள்நிரம்பிய இடங்களில் மகப்பேறு நடக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதைவைத்துக் கொண்டு இந்தியா இந்த விவகாரத்தில் தாங்கள் முன்னேற்றம்கண்டு வருவதாகத் தவறாக கூறிவருகிறது.

இதனாலெல்லாம் கருத்தரித்த பெண்களின் மரண விகிதம் இந்தியாவில்குறிப்பிடத்தகுந்த அளவில் குறைந்துள்ளது என்றாலும் அந்த வசதிகள்இன்மையால் நிகழும் மரணங்கள் பற்றி இந்திய அரசு எதையும்குறிப்பிடுவதில்லை.

2009, 2010 ஆம் ஆண்டுகளில் சுமார் 1 கோடிப் பெண்கள் மருத்துவமனைகளில்பாதுகாப்பான பிரசவம் பெற்றனர். என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் மருத்துவமனைகளில் அல்லதுசுகாதார மையங்களில் மகப்பேறு அடையும்தாய்மார்களில் எத்தனை பேர் அதன் பிறகுஅல்லது அங்கிருந்து வெளியேறி வீட்டுக்குச்சென்ற பிறகு உயிரிழந்துள்ளனர் என்பதைஇந்திய அரசு கண்டு கொள்வதில்லை,இதுதான் இந்தத் திட்டம்வெற்றிபெற்றதற்கான அளவு கோல் என்றுமனித உரிமை கண்காணிப்பு அமைப்புதெரிவித்துள்ளது.

சுகாதார வசதிகள் இன்மை, மோசமானபோக்குவரத்து வசதிகள், அவசரகாலமகப்பேறு வசதிகள், மகப்பேறுக்குப் பிந்தைய சிகிச்சை மற்றும் கவனிப்புகள்ஆகியவற்றில் போதாமை காரணமாக இந்தியாவில் இன்னும் மரண விகிதம்அதிகமாகவே உள்ளது.

மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தனது அறிக்கையில் தங்களது இந்தஅறிக்கைக்கு உதாரணமாக கடந்த ஜூலை மாதம் புதுடெல்லியில் எந்தவசதியுமின்றி நடைபாதையில் குழந்தை பெற்ற தாய் ஒருவர் படுமோசமான சூழ்நிலையில், அசுத்தமான மழைநீர் நிரம்பிய இடத்துக்கு அருகில்பிரசவம் முடிந்து 4 நாட்கள் அவதியுற்று கவனிப்பாரற்று பிறகு இறந்துபோனதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் உள்ள ஒரு திட்டத்தின் படி பிரசவ விடுதிகளில் பிரசவம்செய்து கொண்ட தாய்மார்களுக்கு ரொக்க ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது.ஆனால் வீட்டில் பிரசவம் பார்த்தவர்களைக் கூட பிரசவ மருத்துவமனையில்பிரசவம் பார்த்துக் கொண்டதாக சுகாதார ஊழியர்கள் வலியுறுத்தி வரும்பணத்தில் சரிபாதி பங்கு பெறுவதும் இந்த நாட்டில் நடந்து வருகிறதுஎன்று மனித உரிமை அமைப்பிடம் பெண்கள் சிலர் புகார் கூறியதையும்இந்த அறிக்கை பதிவு செய்துள்ளது.

சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாமையால், பிரசவ ஆஸ்பத்திரிக்குச்செல்லும் முன்னரே பல கருத்தரித்த பெண்கள் இறந்து விடுவதும் தினசரிநிகழ்வாக இருந்து வருகிறது.

இவையெல்லாம் இந்திய அரசு வெளியிடும் உரிமை கோரல் அறிக்கைகளில்காணப்படுவதில்லை. மேலும் அவசரகால போக்குவரத்து வசதிகள் மேம்பாடுஅடைந்ததாகவும் தெரியவில்லை.

மனித உரிமை கண்காணிப்பினர் வருகை தந்த பெரும்பாலானமருத்துவமனைகளில் சாதாரண பிரசவம் மட்டுமே நடைபெறுகிறது.

தொடர்ந்து கருத்தரித்த பெண்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டால் தொடர்ந்துஅவர்களை வேறு வேறு மருத்துவமனைகளுக்குச் செல்லுமாறுகூறப்படுகிறது. கடைசியாக மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளுக்குஅவர்கள் செல்லும்போது காலதாமதமாகி விடுகிறது. மேலும் நல்லசிகிச்சையும், கவனிப்பும் பெற ஏழைத் தாய்மார்களும் ஒரு சிலரை 'கவனிக்க'வேண்டிய நிலையும் உள்ளது என்று அந்த மனித உரிமை அமைப்பின்அறிக்கை இந்திய அரசுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

31 July 2010

போய்வாருங்கள் நரேஷ் குப்தா.


உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் நரேஷ் குப்தா. 1973-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், தொடர்ந்து 37 ஆண்டுகள் அரசின் பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றியவர். இன்று 31.07.2010 அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.ஒரு சாமானியனைப்போல எந்த பந்தாவுமின்றி எளிமையுடனும் நேர்மையாகவும் பணியாற்றிய இவரது ஸ்டெயில் எனக்கு ரொம்ப பிடிக்கும்.சிலரை பார்க்கும் போது நாமும் இப்படி இருக்க வேண்டும் என எனக்குள் தோன்றும். அப்படி நான் பார்த்து வியந்த, விரும்பிய, ஒரு அதிகாரி இவர்.இவரது பணியே ஒரு பாடம் என்னைபோல பலருக்கு. மனநிறைவுடன் ஓய்வு பெறுவதாக நேற்று தலைமச்செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.இவரின் பாதையில் இவருக்கே தெரியாமல் இவரது பாதம் பட்டு எத்தனையோ விதைகள் விதைக்கப்பட்டிருக்கிற்து .அவைகள் பெரும் விருட்சமாகி இவரை எப்போதும் நினைவுகூறும். போய்வாருங்கள் நரேஷ் குப்தா.

14 July 2010

மாணவ மாணவியர் களுக்கு பாராட்டுச் சானறிதழ்

பஞ்சப்பட்டி ஆ.சு.நி. கண்மருத்துவ உதவியாளர் திரு.இரவிச்சந்திரன் அவர்கள் மகனுக்கு வழங்கப்பட்ட சான்று.
காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ஓட்டுனராகப் பணியாற்றும் திரு.முருகபூபதி அவர்களின் மகன் திரு கபிலன் சான்றிதழ் பெறும் காட்சி

கரூர் மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறையில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களின் குழந்தைகளில் இநத ஆண்டு (2009-10) 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் 90 சதவிகிதத்திற்கு மேல் மதிபபெண் பெற்றவர்களுக்கு பாராட்டுச் சானறிதழ வழங்கப்பட்டது.மரு வீ.வீரபாண்டியன் துணை இயக்குனர் நலப்பணிகள் மற்றும் குடும்பநலம் அவர்களது முயற்சியில் 12.07.2010 அன்று விழாநடைபெற்றது.தோகமலை வட்டார ஆரம்ப சுகாதாரநிலையத்திற்குட்பட்ட காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ஓட்டுனராகப் பணியாற்றும் திரு.முருகபூபதி அவர்களின் மகன் திரு கபிலன் அவர்களும் 91சதவிதம் பெற்று சான்றிதழ் பெற்றார்.

23 May 2010

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய 57வது மாநில மாநாடு



அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மற்றும் சலுகைகள் செலவினமாக கருதவேண்டியதில்லை. அரசு ஊழியர்கள் அரசின் திட்டங்களை, பணிகளை செய்து முடிப்பவர்கள். அவர்கள் இல்லையென்றால் அரசு இயந்திரம் இயங்காது. அரசு ஊழியர்களுக்கு தரப்படும் ஊதியம் மூலதனமே என, நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். அரசு ஊழியர்கள் தான் அரசின் பணிகளை செய்து முடிக்கின்றனர். அரசு ஊழியர்களுக்கு ஓட்டுக்காக சலுகைகள் தரப்படுகின்றன என, கருதுவது தேவையற்றது.

அரசு ஊழியர்களும் தொழிலாளர்கள் தான். நாங்களும் தொழிலாளர்கள் தான். தொழிலாளர்களிடம் பாகுபாடு பார்க்க முடியாது. தொழிலாளர்களின் தேவையை அறிந்து நிறைவேற்றுவது அரசின் கடமை.

22.5.10 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய 57வது மாநில மாநாட்டில் தமிழக் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி.

11 May 2010

பதிவர்கள் குடும்பத்தினர் சந்திப்பு
























09 April 2010

திருமணம்

தோகைமலை (என்.எம்.எஸ்) மருத்துவமல்லா மேற்பார்வையாளர் திரு.ஆர்.மனோகரன் அவர்களின் புதல்வன் திரு.கவுதம் அவர்களுக்கும் செல்வி.ஆர்.சங்கீதா அவர்களுக்கும் 22.03.2010 அன்று திருச்சி கலைஞர் அரங்கம் திருமண மண்டபத்தில் திருமணம் இனிதே நடைபெற்றது.எங்களது குடும்பத்தில் புதிய வரவான சங்கீதா அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்




















05 August 2009

தொடர் கேள்விபதில்

அழைத்த

>மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்

அவர்களுக்கு நன்றி.
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ? அம்மாவின் அப்பா பெயர் வேங்கட்ராமன்.அப்பாவின் அப்பா பெயர் சுப்ரமணியன்.இதன் காரணமாக தாத்தாவால் வைக்கப்பட்ட பெயர். சிறுவயதில் நீளமான பெயர் பிடிக்காமலிருந்தது.ஸ்,ஷ்..சேர்ந்த மூன்றெழுத்துப்பேர் ஸ்டெயிலாக இருந்திருக்கலாம் என நினைப்பேன். இப்போது அம்மா, அப்பா, மனைவி, மாதிரி என்னோடது என்பதில் சந்தோஷம் உண்டு.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
இது அடிக்கடி நிகழ்ந்து விடுகிறது.என் அப்பாவின் இளமைக்கால நெருக்கமான நண்பரை போனவாரம் தற்செயலாக சந்தித்தபோது.(1984 ல் எனது தகப்பனார் இறந்தார்.)அப்பாவையே நேரில் பார்த்தது போல இருந்தது.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ம்.ம்..ஹூம்.
4).பிடித்த மதிய உணவு என்ன?
சூடாக சாம்பார்,ரஸம்,மோர்
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இல்லை.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடல் பயம் தனியாக ராட்டிணம் சுற்றுவது மாதிரி
அருவி சுகம் அப்பாவின் மடியில் உட்கார்ந்து ராட்டிணம் சுற்றுவது போல.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
ஆணா? பெண்ணா?
பாடி லாங்வேஜ்
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ? கர்வம்.இரண்டுக்கும் இது தான் பதில்
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்ச விஷயம் : என் மீது அக்கறை
பிடிக்காத விஷயம் : என் மீது ஓவர் அக்கறை
10. யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?..
அப்பா. அவர் உயிரோடு இருக்கும் வரை உருப்படாத பிள்ளையாய் இருந்துவிட்டேன்.இப்போது இருந்தால் சந்தோஷப்படுவார். எங்கிருந்தாவது பார்த்துக்கொண்டு தான் இருப்பார்.
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
இன்று ஆவணியாவிட்டம் பூனூல் மாற்றிக்கொண்ட கையோடு இருக்கிறேன்.சட்டை இல்லை .வேட்டி மட்டும்.
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
பாட்டு எதுவும் இப்போது கேட்கவில்லை.
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை? வெள்ளை
14.பிடித்த மணம்?
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல?
அதிகாலை தலயணைசூட்டு மணம்
பசி நேரத்தில் சமயலரையிலிருந்து வரும் தாளிக்கும் வாசனை.
குளிகாலத்தில் போர்வைக்குள் அடுத்த உயிரின் சுவாசம்.
அலைச்சலில் வீடு திரும்பும் போது மனைவி செய்யும் பூஜை மணம்.
நிறைய....உள்ளது.
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
1.R.P. ராஜ நாயஹம் http://rprajanayahem.blogspot.com/ அனுபவக் கடல் 2.அகநாழிகை வாசுதேவன்http://aganaazhigai.blogspot.com/ கவித்துவமான மனிதர் 3.லதானந்த் http://lathananthpakkam.blogspot.com/ சிங்கம்
4.சபாநாயகம் சார் .http://ninaivu.blogspot.com/ என் மண்ணின் மைந்தர்.குரு.
5.http://kanavukale.blogspot.com/
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ? http://www.payanangal.in/2008/10/blog-post_15.html http://www.payanangal.in/search/label/அரசு_ஊழியர் 17.
பிடித்த விளையாட்டு ?
கிரிக்கெட்,ஷெட்டில்,
18.கண்ணாடி அணிபவரா?
படிக்கும்போது
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
சேரன் படங்கள் மாதிரி
20.கடைசியாகப் பார்த்த படம்?
பொண்ணு ஊருக்குப் புதுசு.
(பி.கு.கிராம சுகாதார செவிலியின் கதை,நன்றி மோசர் பியர்)
21.பிடித்த பருவ காலம் எது?
பின் பனிக்காலம்.
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
கீதை(சித்பவானந்தர் உரை தினமும் ஒரு பக்கமாவது)
கோயிலொழுகு 5ம் பாகம்
வடு (கே.ஏ.குணசேகரன்)
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எத்தனை மணி நேரத்திற் கென்று என் இளய மகன் விபின் சந்தரிடம் தான் கேட்கவேண்டும். 24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
மழை பெய்யும் சத்தம் பிடிக்கும்
பெய்து ஓயும் சத்தம் பிடிக்காது.
(பெய்து கொண்டிருக்கும் போதே தூங்கிவிட வேண்டும் என நினைப்பேன்)
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
திருப்பதி
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தெரியவில்லை.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அவமதிப்பு
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
நான் எனும் கர்வம்.அகங்காரம்.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
மூணார்.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
எழுத்தாளனா,சினிமா டைரக்டரா,பத்திரிக்கையாளரா,அரசியல்வாதியா, ஆன்மீக வாதியா, வயசுக்கு ஏத்த மாதிரி எப்படியெல்லாமோ இருக்க கனவு கண்டு, இப்போது இருப்பது சராசரி அரசு ஊழியனா.
31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
துணையின் பெருமை பற்றி அடுத்தவரிடம் சொல்வது.
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
பாசவலை.