இன்று 21.02.2014 திருச்சி மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகக் கூடம் காணொளி காட்சி மூலம் மாண்புமிகு முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.இப் பகுப்பாய்வகத்தினால் திருச்சி,பெரம்பலூர், அரியலூர்,தஞ்சாவூர்,புதுக்கோட்டை,திண்டுக்கல்,கரூர்,திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி,நகராட்சி,ஊராட்சி மற்றும் அரசு நிறுவனங்களில் பொது மக்களூக்கு விநியோகிக்கப்படும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை காலமுறை தோறும் நீர்மாதிரிகளை சேகரித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.இதனால் குடிநீரினால் பரவும் தொற்று நோய்களான வாந்திபேதி,காலரா போன்ற கொள்ளை நோய்கள் வராமல் பொது மக்களை காப்பாற்ற ஏதுவாக இருக்கும்..சென்னை கிங் நிலைய நோய்தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் இயங்கிவரும் தலைமை நீர் பகுப்பாய்வகத்தின் மற்றுமொரு கிளைதான் இது.
PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
Showing posts with label திருச்சி மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகக் கூடம். Show all posts
Showing posts with label திருச்சி மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகக் கூடம். Show all posts
21 February 2014
Subscribe to:
Posts (Atom)
