Showing posts with label கிராமசுகாதார செவிலியர். Show all posts
Showing posts with label கிராமசுகாதார செவிலியர். Show all posts

05 January 2014

கிராம சுகாதார செவிலியர்களுக்கு லேப்டாப்

கிராம சுகாதார செவிலியர்களுக்கு விலையில்லா மடிக்கணினியினை மான்புமிகு.தமிழகமுதல்வர் அவர்கள் வழங்கினார்.இந்த மடிக்கணினி யுடன் ரிலையன்ஸ் டேட்டாகார்டும் வழங்கப்பட்டு:ள்ளது.



22 September 2013

கிராம சுகாதார செவிலியர்களுக்கு யோகா

கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கிராம சுகாதார செவிலியர்களுக்கு திருச்சியில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்ட சுகா தார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் குறித்த பயிற்சி முகாம் நேற்று முன்தினம் துவங்கியது. முகாமில் மாவட்டத்தில் உள்ள 307 கிராம சுகாதார செவிலியர்கள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு குழுவிற்கு 50 நபர்கள் வீதம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
முதல் குழுவிற்கான பயிற்சியை கலெக்டர் ஜெயஸ்ரீ தொடங்கி வைத் தார். தாய், சேய் நலம், சுகப்பிரசவம், தாய்ப்பால் சுரப் பை அதிகப்படுத்துதல் ஆகியவற்றுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு குறித்து கிராம சுகா தார செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் கர்ப்பகால, பிரசவ கால, பிரசவத்திற்கு பிந்திய கால இயற்கை உணவு குறித்தும், அதை தயார் செய்யும் முறை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. கர்ப்பிணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய யோகா பயிற்சி குறித்தும் செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கிராம சுகாதார செவிலியர் கள்  கிராமப்பகுதியில் உள்ள அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் யோகா மற் றும் இயற்கை மருத்துவம் குறித்து விழிப்புணர்வவு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட் டது.
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சீனிவாசன் பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சேரன் கலந்து கொண்டார்.