Showing posts with label புதிய வருகை. Show all posts
Showing posts with label புதிய வருகை. Show all posts

09 September 2011

புதிய மருத்துவர்கள்

செப்டம்பர் 6,7,8 ஆகிய தேதிகளில் உதவி மருத்துவர்களுக்கான  10 a(1) நேர்காணல் சென்னையில் நடந்துள்ளது.காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.மேற்படிப்பிற்கு செனறாதனால் ஏற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட்டுவிடும்.புதியவர்களை வரவேற்போம்.ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய இருக்கும் மருத்துவர்களுக்கான சில டிப்ஸ்.


அவ்வையாரின் ஆத்திச்சூடியிலிருந்து.

1.உடையது விளம்பேல்
2.ஓதுவது ஒழியேல்
3.ஙப்போல் வளை
4.இணக்கம் அறிந்து இணங்கு
 உரை: ஒருவரோடு நட்புக் கொள்ளுமுன் அவரைப் பற்றிய செய்திகளை ஆராய்ந்துஅறிந்து ( அவர் நற்குணத்தவர் என்றால் மாத்திரமே) அவரோடு நட்பும் தொடர்பும் கொள்க.
5.இயல்பலாதன செய்யேல்
உரை:இயற்கையோடு ஒத்திராத (வழக்கத்திற்கு விரோதமான) செயல்களை ஒரு போதும் செய்யற்க
6.அழகலாதன செயேல்
7.கேள்வி முயல்
8.சுளிக்கச் சொல்லேல்
9.சேரிடம் அறிந்து சேர்
10.தூக்கி வினை செய்
11.தோற்பன தொடரேல்.
12.நொய்ய உரையேல்
13.பெரியாரைத் துணைக்கொள்
உரை: நாம் தவறு செய்யுங்கால் இடித்துக் கூறித் திருத்தும் பண்புடைய பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
14.மாற்றானுக்கு இடங்கொடேல்.
15.முனைமுகத்து நில்லேல்
16.மைவிழியார் மனையகல் ( ஆண்களுக்கு மட்டும்)
17வல்லமை பேசேல்
18ஒன்னாரைத் தேறேல்

மேலும் சில டிப்ஸ் க்கு இங்கே சொடுக்கவும்.

01 February 2011

Chief Civil Surgeon (முதன்மை குடிமை மருத்துவர்)

25.01.2011 அன்று மரு.கே.குமாரசாமி அவர்கள் தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதன்மை குடிமை மருத்துவராக ( Chief Civil Surgeon Medical Officer) பணியேற்றார்.













22 December 2009

தோகமலையில் சித்த மருத்துவம்

16.12.2009 இன்று சித்த மருத்துவர் திருமதி.சங்கரவடிவு அவர்கள் தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் சேர்ந்தார்.அவருடன் மருந்தாளுனர் திருமதி ஆனந்தி அவர்களும் பணியேற்றார்.பிரதிவாரம் புதன்,வியாழன்,வெள்ளி ஆகிய மூன்று தினங்கள் இவர்களுக்குப் பணி.தேசிய கிராமப்புர சுகாதார மிஷன் திட்டம் மூலமாக இவர்களுக்கு பணி நியமனம் வழங்கியுள்ளது.
இப்புதிய வரவினால் தோகமலை பகுதி மக்கள் மிகுந்த பயனடைவர்.
இவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

தமிழ் நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில்

200 இடங்களில் சித்த மருத்துவப் பிரிவும்,
30 இடங்களில் ஓமியோபதி பிரிவும்
25 ஆயுர் வேதா பிரிவும்,
25 யுனானி சிகிச்சை பிரிவும் ,
20 இடங்களில் இயற்கை மற்றும் யோகா பிரிவும்,
என மோத்தம் 300 ஆரம்ப சுகாதார நிலையங்களில் என்.ஆர்.எச்.எம் மூலமாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமொயோபதி பிரிவு துவக்கப்பட்டுள்ளது

30 August 2009

திருமணம்

இன்று 30.08.2009 தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனைப் பணியாளராக பணிபுரியும் திரு.எஸ்.கண்ணன் அவரிகளின் திருமணம் திருச்சி காட்டூர் பரத் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.எங்களது குடும்பத்தின் புது வரவான மணப்பெண் ஜி.விஜயலட்சுமி அவர்களை வரவேற்கிறோம்.



23 August 2009

புதிய வருகை


கடந்த இரண்டு மாதங்களில் புதிதாக மூன்று நபர்கள் தோகமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியேற்றுள்ளார்கள் 

1. செல்வி.ராஜலக்ஷ்மி செவிலி.நடமாடும் மருத்துவ குழு விற்கான செவிலியராக பணி யேற்றுள்ளார்.அரசுப்பணிக்கு புதியவர்.

2.மரு. திருமதி.நிறைமதி திருச்சி மாவட்டம் தண்டலைப்புத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மாறுதலாகி தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியேற்றுள்ளார்.இவர் தண்டலை புத்தூர் ஆ.சு.நி ல் நடமாடும் மருத்துவ குழு விற்கான உதவி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.
 
3. திரு.சந்தோஷம் நடமாடும் மருத்துவ குழு விற்கான ஊர்தி ஓட்டுனர். அரசுப்பணிக்கு புதியவர்.

மூவரையும் மனமுவந்து வரவேற்கிறோம்.