Showing posts with label அரசு ஆணைகள் ஆவணங்கள். Show all posts
Showing posts with label அரசு ஆணைகள் ஆவணங்கள். Show all posts

11 May 2013

condemnation and disposal







29 November 2011

அரசுப்பணியிலிருந்து விலக படிவம்

துறைப் பணியிலிருந்து மருத்துவர் ஒருவர் விலக வேண்டும் எனில் கிழ்கண்ட படிவத்தில் பூர்த்திசெய்யப்பட்ட மனுவினை உரிய வழிமுறையாக அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

Resignation Form

27 November 2011

20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்

முதல்வர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைவிதி எண்.110​ன் கீழ் 10.09.2011 அன்று ஒரு அறிக்கை வாசித்தார்.அதன் படி  தமிழகத்தில் 20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்க முதல்வர்  உத்தரவிட்டுள்ளார்.
கிராமப்புற மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 24 ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
 இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை 26.11.2011 அன்றுவெளியிட்ட அறிவிப்பு:


துவக்கப்பட உள்ள 20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்


திருச்சி மாவட்டத்தில் சமயபுரம்,


 வேலூர் மாவட்டத்தில் கொணவட்டம், சுமைதாங்கி, 


கிருஷ்ணகிரி அருகே உள்ள பேஜிபள்ளி, 


கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டம் திருநாவலூர் வட்டாரத்தில் சேந்தநாடு, சின்னசேலம் வட்டாரத்தில் அம்மாகளத்தூர், 


நாகப்பட்டினம் சுகாதார மாவட்டம் கொள்ளிடம் வட்டாரத்தில் மதிரவேலூர்,


 திருப்பூர் சுகாதார மாவட்டம் பல்லடம் வட்டாரத்தில் புளியம்பட்டி, 


பெரம்பலூர் சுகாதார மாவட்டம் பெரம்பலூர் வட்டாரத்தில் எளம்பலூர், 


ஈரோடு சுகாதார மாவட்டம் பெருந்துறை வட்டாரத்தில் காஞ்சிக்கோயில், நம்பியூர் வட்டாரத்தில் மலையம்பாளையம்,


 திருப்பத்தூர் சுகாதார மாவட்டம் கந்திலி வட்டாரத்தில் கோரட்டி,


 சங்கரன்கோவில் சுகாதார மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் தென்மலை, 


திருவள்ளுர் சுகாதார மாவட்டம் திருவள்ளூர் வட்டாரத்தில் கல்யாணகுப்பம்,


 பழனி சுகாதார மாவட்டம் வேடசந்தூர் வட்டாரத்தில் கனப்பாடி,


 புதுக்கோட்டை சுகாதார மாவட்டம் அன்னவாசல் வட்டாரத்தில் ராப்பூசல்

கரூர் சுகாதார மாவட்டம் தாந்தோணி வட்டாரத்திலுள்ள வடக்குபாளையம் கே.பரமத்தி வட்டாரத்தில் தம்பிவாடி, 


தஞ்சாவூர் சுகாதார மாவட்டம் ஒரத்தநாடு வட்டாரத்தில் ஒக்கநாடு கீழையூர்,


 தூத்துக்குடி சுகாதார மாவட்டம் தூத்துக்குடி வட்டாரத்தில் லூர்தம்மாள்புரம்


 ஆகிய 20 இடங்களில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். இதற்கு ரூ.7.71 கோடி செலவாகும்.


 தரம் உயர்த்தப்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்:
 அறந்தாங்கி சுகாதார மாவட்டம் கரம்பகுடி வட்டாரம் மலையூர், 


செய்யார் சுகாதார மாவட்டம் அனுக்காவூர் வட்டாரம் அக்கூர், 


கோயம்புத்தூர் சுகாதார மாவட்டம் கிணத்துக்கடவு வட்டாரம் 
நல்லாட்டிபாளையம்,


 ஈரோடு சுகாதார மாவட்டம் டி.என்.பாளையம், 


கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டம் ரிஷிவந்தியம், 


பழனி சுகாதார மாவட்டம் குஜிலியாம்பாறை, 


பூந்தமல்லி, சைதாப்பேட்டை சுகாதார மாவட்டம் லத்தூர் வட்டாரம் பழஞ்சூர்,


 சேலம் சுகாதார மாவட்டம் கொங்கணாபுரம், பனமரத்துப்பட்டி, தாரமங்கலம், பி.என்.பாளையம் வட்டாரம், ஆரியபாளையம், 


சிவகங்கை சுகாதார மாவட்டம் திருப்புவனம் வட்டாரம் பூவந்தி, 


சிவகாசி சுகாதார மாவட்டம் வெம்பக்கோட்டை, கல்லமனைக்கான்பட்டி, 


தஞ்சாவூர் சுகாதார மாவட்டம் பேராவூரணி வட்டாரம் செருவாவிடுதி, சேதுபாவாசத்திரம் வட்டாரம் அழகியநாயகிபுரம்,


 திருவள்ளூர் சுகாதார மாவட்டம், புழல் வட்டாரம், நர்வாரிகுப்பம், 


வில்லிவாக்கம் வட்டாரம், போரூர், திருப்பத்தூர் சுகாதார மாவட்டம் கந்திலி வட்டாரம், குனிச்சி, காட்பாடி வட்டாரம், திருவலம், 


திருப்பூர் சுகாதார மாவட்டம் குடிமங்கலம், 


திருவண்ணாமலை சுகாதார மாவட்டம் புதுபாளையம் வட்டாரம், காரப்பட்டி,


 உதகமண்டலம் சுகாதார மாவட்டம் கூடலூர் வட்டாரம், நெல்லக்கோட்டை,


 விழுப்புரம் சுகாதார மாவட்டம் வல்லம் வட்டாரம், மேல்சிதாமூர்


       என மொத்தம் 24 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். இதற்கு ரூ.22.55 கோடி செலவாகும்.


07 November 2011

சான்றொப்பம் Attestation

சான்றொப்பம் இடக்கூடிய அலுவலர்கள் ( attestation ) யார்?
அரசு ஆணை எண் 189 P&A R (s) Dept dt. 18.07.2007 ல் அரசு இதனை தெளிவு படுத்தியுள்ளது.
யார் சான்றொப்பம் இடலாம்                                                                                            

2012 அரசு விடுமுறை தினங்கள்

2012 அரசு விடுமுறை தினங்கள்                                                                                            

பச்சை மையினால் யார் எழுதலாம்? யார் கையொப்பம் இடலாம்?

அரசு அலுவலகங்களில் பச்சை மை பயன்படுத்துவது தொடர்பான அரசு ஆணை,பச்சை மைகொண்டு யார் எழுதலாம் யார் கையொப்பம் இடலாம் என இதில் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.

இதன்படி

 அரசு அலுவலகங்களில் நிலைத்த நீலம், கருப்பு,சிவப்பு ஆகிய மை யினால் மட்டுமே அரசு ஆவணங்களில் எழுத,கையெழுத்திட வேண்டும் ,

மற்ற நிற மையினால் எழுதுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

. சான்றொப்பம் (Attestation)  இட அனுமதிக்கப்பட்ட அலுவலர்கள் மட்டும் (A Grade and B Grade)( கிரெடு பே 4400 லிருந்து  பெறுபவர்கள்) சான்றொப்பம் இட மட்டும் பச்சை வண்ண  மை பயன்படுத்தலாம்.(பி.கு: கண்காணிப்பாளர் (Superintendent) கிரேடு பே 4800,செவிலியர் (Staff Nurse) கிரேடு பே 4450 இவர்களும் சான்றொப்பம் இடலாம்)

A கிரேடு அலுவலர்கள் (கிரேடு பே 6600 க்கு மேல் பெறுபவர்கள்) மட்டும் அரசு கோப்புகளில் சிறு குறிப்பு எழுத மட்டும் பச்சை வண்ண மையினை பயன்படுத்தலாம்.( யார் A grade  அலுவலர்கள்? இதனை தெரிந்து கொள்ள இங்கு செல்லவும்.)

இதிலிருந்து தெரிய வருவது சான்றொப்பம் (Attestation) தவிர ஏனைய கையெழுத்துக்களை யாரும் பச்சை மைகொண்டு எழுதக் கூடாது.

பட்டியல்களில்,கடிதங்களில்,பதிவேடுகளில், பச்சை மை கொண்டு அரசு அலுவலர்கள் கையொப்பம் இடுவது விதிகளுக்கு முரணானது.



http://www.scribd.com/fullscreen/71883531?access_key=key-21a52msc721yrkn9b3po

சான்றொப்பத்திற்கு பச்ச்சை மை                                                                                           

16 September 2011

2011-12 கொள்கை விளக்கக் குறிப்பு

2011-12 மக்கள் நல்வாழ்வுத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு

Health Family Welfare t

நேரடி டவுண்லோடுக்கு இங்கே கிளிக்கவும்
https://docs.google.com/document/d/1wWo7Qfl9RAu8pX4XBXRtRpVflzOX2TjR2i-vLjoLfkQ/edit?hl=en_US

07 September 2011

முறையான மருத்துவ சிகிச்சைக்கான வழிகாட்டி நூல்


நன்றி: http://tamilnadu-stg.com/ தளத்திலிருந்து பெறப்பட்ட செய்தி.

தமிழக அரசின் சுகாதார மற்றும் குடும்பநலத்துறையின் தமிழ்நாடு 


சுகாதார திட்டம்
முறையான மருத்துவ சிகிச்சைக்கான வழிகாட்டி நூல்
முகப்பு பக்கத்திற்கு
உங்களை கனிவுடன் வரவேற்கிறோம்

20 May 2011

மகப்பேறு விடுப்பு ஆறு மாதங்கள்.

https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B8bAzhodG17gNTA2OWU2Y2EtODk0YS00ZmZlLTllZGEtNDA1OWNlZTE4YTNl&hl=en_US&authkey=CJ36zcQK

தமிழக அரசுப்பணியில் உள்ள மணமான பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஆறு மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

26 October 2010

அல்மா-அட்டா பிரகடணம் (Alma-ata Declaration)

1978ல் அல்மா அட்டா என்ற ரஷ்ய நகரில் உலக சுகாதார நிறுவனம் (W.H.O) கூட்டிய மாநாட்டின் இறுதியில் வெளியிடப் பட்ட அறிக்கை கி.பி. 2000க்குள் அனைவருக்கும் மருத்துவ நலம் வழங்க உறுதியளித்தது. இந்த உறுதிமொழி பிரகடனத்தில் இந்திய அரசும் கையொப்ப மிட்டிருந்தது

170க்கும் மேற்பட்ட உலக நாட்டு அரசாங்கங்களுக்கு மருத்துவ ஆலோசனைûயும், வழிகாட்டுதலையும் வழங்கி வருவது உலக சுகாதார நிறுவனம். இதில் அங்கம்வகிக்கும் நாடுகளின் சுகாதாரத்துறை தலைமைப் பொறுப்பிலுள்ளோர் ஆண்டுதோறும் கூடி முக்கிய முடிவுகளை மேற்கொள்ளுமிடம் உலக சுகாதாரப் பேரவை. இப்பேரவையின் முடிவாக அந்தந்த காலத்திற்கேற்ப உலக சுகாதார அறிக்கைகள் வெளிவருகின்றன

கி.பி. 2000க்குள் எல்லோருக்கும் மருத்துவ நலம் என்ற இலக்கை முன்வைத்த அல்மா அட்டா அடிப்படை மருத்துவ மாநாட்டின் பிரகடனம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த்து.

தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு 2010-11 ல் பக்கம் 56 அத்யாயம் 5ல் கீழ்கண்டவாறு இப்பிரகடணத்தைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

1978 அல்மா அட்டா வில் தான் ஆரம்ப சுகாதார சேவை என்பதற்கான இலக்கணம் வகுக்கப்பட்ட்து.ஆரம்ப சுகாதார சேவை என்பது ஒரு அடிப்படையான அத்டியாவசிய சுகாதார சேவையாகும்.இதில் முழுமையாக சமூக பங்கேற்போடு மக்கள் வாழும் கிராமங்களுக்கு அருகிலேயே அவர்களது விருப்பத்திற்கு ஏற்றதாகவும்,பொருளாதார சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும்.

பொது சுகாதாரம் மர்றும் மருத்துவத்துறையில் பணியாற்றும் அனைவரும் படிக்க வேண்டிய பிரகடணம் இது.



Declaration Almaata

23 July 2010

கொள்கை விளக்கக் குறிப்பு 2010-11



தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2010-11 . இத்துறையில் பணியாற்றும் அனைவரும் படித்தாக வேண்டிய ஆவணம் இது.அரசு என்ன செய்திருக்கிறது என்ன செய்யப்போகிறது இதுவரை செய்ததின் விளைவுகள் என்ன என்பன போன்ற பல தகவல்களை பெற்றுள்ள பெட்டகம் இது. ப்டியுங்கள் உங்களை பற்றிக்கூட இதில் வரலாம்.


Health Family Welfare t

22 June 2010

அரசு ஊழியர்கள் இனி கையெழுத்து இடவேண்டாம்

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பெரும்பாலும் ஊதியங்கள் மற்றும் இதர பணப்பயண்கள் கருவூலத்தில் ஒப்பளிப்பு செய்யப்பட்டு நேரடியாக பணியாளர்களது வங்கிக் கணக்கில் பற்று வைக்கப்படுகிறது.அதற்கான பற்றொப்பப் பதிவேட்டில் (acquittance) அவர்களது கையொப்பம் பெறுவது நடைமுறையில் மிகுந்த சிக்கல் உடையதாக இருந்தது.அவர்கள் பணியாற்றுவது ஒரு இடம் acquittance இருப்பது ஒருஇடம், கையெழுத்து இடுவதற்காக பேருந்து பிடித்து அரைநாள் செலவு செய்ய வேண்டியிருந்தது.ஆனால், தணிக்கையின் போது இவ்வாறு கையொப்பம் இல்லாத குறைகளை சுட்டிக்காட்டும் பத்திகளே பெரும்பாலும் இருக்கும். ஊழியர்கள் மாறுதலாகிச் சென்றுவிட்டாலோ,அக்கையொப்பம் பெறுவட்தும் அந்த தணிக்கைத்தடையை நீக்குவதும் பெரும் பாடாகிவிடும்.தற்போது அரசு ஆணை எண்.G.O.No.175 fin(salaries) 18.06.2010 ன் படி ஊதியங்கள் மற்றும் இதர பணப்பயன்கள் ECS முறையில் ஊழியர்களின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டால் அதற்கான கையொப்பம் வாங்க அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.காலவிரயம் மனித ஆற்றல் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. அனால் ECS copy அலுவலக நகலில் ஒட்டி வைக்கப்பட வேண்டும்.

18 June 2010

புதிய ஓய்வூதியத்திட்டம்

01.4.2003-க்குப் பின் தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.


இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு மாதமும் பணியாளர்களது அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதற்கு சமமான தொகையை அரசு வழங்கும். இவ்வாறு எல்லா ஊழியர்களிடம் இருந்தும் பிடித்தம் செய்யப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.1.2004 முதல் இந்தத் திட்டம் அமலானது. தமிழகத்தில் அப்போதைய அரசால் 1.4.2003-ல் அமல்படுத்தப்பட்டது.
கீழே கொடுத்துள்ளகடித்த்தின்படி17786 / Finance (PGC) Department / 2010-1, Date: 21.05.2010 பணியில் சேர்ந்து ஒரு மாதத்திற்குள் CPS Index Number மாநில கனக்காயரிடமிருந்து பெறவேண்டும் எனவும் பணிவரன் முறைக்காக காத்திருக்கத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Contributory Pension

05 June 2010

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் Tamilnadu Government Doctors

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள்( Doctors) சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்று அரசு வெளியிட்ட அரசு ஆணை எண்.G.O.Ms.No.354 Health and Family welfare Department dt.23.10.2009 இங்கே ஆவணப்படுத்தும் நோக்கில் இணைக்கப்படுகிறது.

03 June 2010

ஓய்வூதியப்படிவம் TN Government Pension form

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் பணி ஓய்வு பெறுவதற்கு நான்கு மாதத்திற்கு முன்னதாக ஓய்வூதியக் கருத்துருவினை மாநில கணக்காய்வுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்.ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைக்குப் பிறகு புதிய ஓய்வூதியப்படிவம் வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதியத்துடன் பொது வருங்கால வைப்புநிதிக்கான (GPF Final closer) மனுவும் ஒருங்கினைக்கப்பட்டு இப்படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

02 February 2010

போனஸ்

vonus 2010clarifiation

02 January 2010

போனஸ்


2008-2009ம் ஆண்டிற்கு 'சி' மற்றும் 'டி' பிரிவு அரசு அலுவலர்கள் அனைவருக்கும் 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக சென்ற ஆண்டு இருந்த உச்ச வரம்பான ரூ. 2500யுடன் ரூ. 500 உயர்வு அளித்து ரூ. 3,000 உச்சவரம்பிற்கு உட்பட்டு போனஸ் வழங்கிடவும்,

'ஏ' மற்றும் 'பி' தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் ரூ. 1,000 சிறப்பு போனஸ் வழங்கிடவும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ. 500 பொங்கல் பரிசு வழங்கிடவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்த, மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழு நேர மற்றும் பகுதி நேரப்பணியாளர்கள், தொகுப்பூதியம் பெற்று வந்த பணியாளர்கள், தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வந்த சத்துணவுத் திட்டப்பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள்,

குறு அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரகவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையில் பணிபுரிந்து வரும் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் உள்ள பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் மற்றும் ஒரு பகுதி தினக்கூலிகளாக பணியாற்றி பின்னர் தொடர்ந்து நிரந்தர பணியாளர்களாக பணியாற்றியவர்களுக்கும் சிறப்பு மிகை ஊதியம் ரூ. 1000 வழங்கப்படும்.

உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில் நுட்பக்கல்விக் குழு, இந்திய வோளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சம்பள விகிதம் மற்றும் அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் வரும் அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும்.


Pongal Bonus 2010 height="500" width="100%" > value="http://d1.scribdassets.com/ScribdViewer.swf?document_id=24725783&access_key=key-15mouiye4wjw8dijroky&page=1&version=1&viewMode=list">

15 October 2009

ஆரம்ப சுகாதார நிலையங்களில் உதவிமருத்துவர்களின் பணி நேரம்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் உதவிமருத்துவர்களின் பணி நேரம் அரசு ஆணை எண் 339 (சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை)14.10.2009ன் படி குறைக்கப்பட்டுள்ளது .
புதிய வேலை நேரம் மேம்படுத்தப்பட்ட ஆ.சு.நி
5 மருத்துவர்கள் பணிபுரியும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மூன்று பிரிவான பணிப்பகிர்வு.
1.காலை 8.00 முதல் 2.00 வரை
2.மதியம் 2.00 முதல் 8.00
3.இரவு 8.00 முதல் மறுநாள் காலை 8.00 வரை ( தங்கி பணிபுரிதல்) (இதில் காலை முதல் பணிப்பிரிவின் போது பொறுப்பு மருத்துவரும் (இன்சார்ஜ்) ஒரு உதவி மருத்துவரும். ஏனைய பணிப்பிரிவில் ஒரு மருத்துவர்.முந்தைய ஆணையில் இருந்த நிர்வாகப் பணிக்கான காலம் 2.00 முதல் 4.00 வரை தற்போது நீக்கப்பட்டுள்ளது.மேலும் காலை பணிப்பிரிவில் பணிபுரியும் உதவிமருத்துவர் எப்போதும் ஒருவர் மட்டுமே பணியாற்றுவது போன்ற நிலை வரும்.களப்பணி, நிவாகப்பணி,ஆய்வுக்கூட்டங்கள்,பள்ளிகளுக்கு செல்தல், ஏஎன்சி செக்கப் ,தடுப்பூசிப்பணிகள் மேற்பார்வை, போன்ற‌ ஏனைய பொதுசுகாதார பணிகளுக்கான பணிப்பகிர்வு இல்லை.சராசரியாக ஒரு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 300 க்கும் குறையாத புற நோயாளிகள் வருகை இருக்கும்.மேற்கண்ட பணிகளில் ஈடுபடும் இன்சார்ஜ் மருத்துவர்கள் புறநோயாளிகளைப் பார்க்க நேரம் இருக்காது.காலை பணிப்பிரிவில் இன்சார்ஜ் மருத்துவரை சேர்த்து 3 மருத்துவர்கள் பணியில் இருப்பது மட்டுமே பணிப்பளுவை குறைக்கும். எனவே 5 மருத்துவர்களுக்கு மாறாக‌ 6 மருத்துவர்கள்பணியிடம்
உருவாக்கவேண்டும்.)
ஒரு/இரு/மூன்று மருத்துவர்கள் பணிபுரியும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களிள்
ஒன்று அல்லது இரண்டு மருத்துவர்கள் காலை 9.00 முதல் 4.00 வரை பணி புரிய வேண்டும்.

( உணவு இடைவேளை 1.00 முதல் 1.30)
4.00 முதல் மறுநாள் காலை 9.00 வரை ஒருமருத்துவர் அழப்புப்பணிக்கு தயாராக இருக்க வேண்டும்.
அழைப்பு பணி என்பது நான்கு வித சூழல்களுக்கு மட்டும் தான்
1. பேரிடர்
2. தடுப்பூசி
3. கொள்ளை நோய்
4. உணவுநஞ்சேறல்
மேலும் புறநோயாளிகள் பரிசோதனை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது??
(இனி மேம்படுத்தப்பட்ட‌ ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் தட்டுப்பாடு இருக்கும்.இப்போதே கூடுதல் ஆ.சு.நி. பணியைத்தான் மருத்துவர்கள் விரும்புகிறார்கள்.)


மேலும் விவரங்களுக்கும் ஆனை நகல் பார்ப்பதற்கும்
http://www.payanangal.in/2009/10/blog-post_15.html

23 September 2009

அகவிலைப்படி 01.07.2009

தமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு 01.07.2009 முதல் 5% சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டுள்ளது.


DA go 1.7.09

22 September 2009

புதிய நால்வருணங்கள்

திருத்திஅமைக்கப்பட்ட ஊதிய விகிதங்களுக்கு ஏற்ப அரசு ஊழியர்களை நான்கு வகுப்புகளாக பிரித்து அரசு ஆணைவெளியிட்டுள்ளது

Revised Grade GO