PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
11 May 2013
29 November 2011
அரசுப்பணியிலிருந்து விலக படிவம்
Resignation Form
27 November 2011
20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்
கிராமப்புற மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 24 ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை 26.11.2011 அன்றுவெளியிட்ட அறிவிப்பு:
துவக்கப்பட உள்ள 20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்
திருச்சி மாவட்டத்தில் சமயபுரம்,
வேலூர் மாவட்டத்தில் கொணவட்டம், சுமைதாங்கி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள பேஜிபள்ளி,
கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டம் திருநாவலூர் வட்டாரத்தில் சேந்தநாடு, சின்னசேலம் வட்டாரத்தில் அம்மாகளத்தூர்,
நாகப்பட்டினம் சுகாதார மாவட்டம் கொள்ளிடம் வட்டாரத்தில் மதிரவேலூர்,
திருப்பூர் சுகாதார மாவட்டம் பல்லடம் வட்டாரத்தில் புளியம்பட்டி,
பெரம்பலூர் சுகாதார மாவட்டம் பெரம்பலூர் வட்டாரத்தில் எளம்பலூர்,
ஈரோடு சுகாதார மாவட்டம் பெருந்துறை வட்டாரத்தில் காஞ்சிக்கோயில், நம்பியூர் வட்டாரத்தில் மலையம்பாளையம்,
திருப்பத்தூர் சுகாதார மாவட்டம் கந்திலி வட்டாரத்தில் கோரட்டி,
சங்கரன்கோவில் சுகாதார மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் தென்மலை,
திருவள்ளுர் சுகாதார மாவட்டம் திருவள்ளூர் வட்டாரத்தில் கல்யாணகுப்பம்,
பழனி சுகாதார மாவட்டம் வேடசந்தூர் வட்டாரத்தில் கனப்பாடி,
புதுக்கோட்டை சுகாதார மாவட்டம் அன்னவாசல் வட்டாரத்தில் ராப்பூசல்
,
கரூர் சுகாதார மாவட்டம் தாந்தோணி வட்டாரத்திலுள்ள வடக்குபாளையம் கே.பரமத்தி வட்டாரத்தில் தம்பிவாடி,
தஞ்சாவூர் சுகாதார மாவட்டம் ஒரத்தநாடு வட்டாரத்தில் ஒக்கநாடு கீழையூர்,
தூத்துக்குடி சுகாதார மாவட்டம் தூத்துக்குடி வட்டாரத்தில் லூர்தம்மாள்புரம்
ஆகிய 20 இடங்களில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். இதற்கு ரூ.7.71 கோடி செலவாகும்.
தரம் உயர்த்தப்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்:
அறந்தாங்கி சுகாதார மாவட்டம் கரம்பகுடி வட்டாரம் மலையூர்,
செய்யார் சுகாதார மாவட்டம் அனுக்காவூர் வட்டாரம் அக்கூர்,
கோயம்புத்தூர் சுகாதார மாவட்டம் கிணத்துக்கடவு வட்டாரம்
நல்லாட்டிபாளையம்,
ஈரோடு சுகாதார மாவட்டம் டி.என்.பாளையம்,
கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டம் ரிஷிவந்தியம்,
பழனி சுகாதார மாவட்டம் குஜிலியாம்பாறை,
பூந்தமல்லி, சைதாப்பேட்டை சுகாதார மாவட்டம் லத்தூர் வட்டாரம் பழஞ்சூர்,
சேலம் சுகாதார மாவட்டம் கொங்கணாபுரம், பனமரத்துப்பட்டி, தாரமங்கலம், பி.என்.பாளையம் வட்டாரம், ஆரியபாளையம்,
சிவகங்கை சுகாதார மாவட்டம் திருப்புவனம் வட்டாரம் பூவந்தி,
சிவகாசி சுகாதார மாவட்டம் வெம்பக்கோட்டை, கல்லமனைக்கான்பட்டி,
தஞ்சாவூர் சுகாதார மாவட்டம் பேராவூரணி வட்டாரம் செருவாவிடுதி, சேதுபாவாசத்திரம் வட்டாரம் அழகியநாயகிபுரம்,
திருவள்ளூர் சுகாதார மாவட்டம், புழல் வட்டாரம், நர்வாரிகுப்பம்,
வில்லிவாக்கம் வட்டாரம், போரூர், திருப்பத்தூர் சுகாதார மாவட்டம் கந்திலி வட்டாரம், குனிச்சி, காட்பாடி வட்டாரம், திருவலம்,
திருப்பூர் சுகாதார மாவட்டம் குடிமங்கலம்,
திருவண்ணாமலை சுகாதார மாவட்டம் புதுபாளையம் வட்டாரம், காரப்பட்டி,
உதகமண்டலம் சுகாதார மாவட்டம் கூடலூர் வட்டாரம், நெல்லக்கோட்டை,
விழுப்புரம் சுகாதார மாவட்டம் வல்லம் வட்டாரம், மேல்சிதாமூர்
என மொத்தம் 24 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். இதற்கு ரூ.22.55 கோடி செலவாகும்.
07 November 2011
சான்றொப்பம் Attestation
அரசு ஆணை எண் 189 P&A R (s) Dept dt. 18.07.2007 ல் அரசு இதனை தெளிவு படுத்தியுள்ளது.
யார் சான்றொப்பம் இடலாம்
பச்சை மையினால் யார் எழுதலாம்? யார் கையொப்பம் இடலாம்?
இதன்படி
அரசு அலுவலகங்களில் நிலைத்த நீலம், கருப்பு,சிவப்பு ஆகிய மை யினால் மட்டுமே அரசு ஆவணங்களில் எழுத,கையெழுத்திட வேண்டும் ,
மற்ற நிற மையினால் எழுதுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
. சான்றொப்பம் (Attestation) இட அனுமதிக்கப்பட்ட அலுவலர்கள் மட்டும் (A Grade and B Grade)( கிரெடு பே 4400 லிருந்து பெறுபவர்கள்) சான்றொப்பம் இட மட்டும் பச்சை வண்ண மை பயன்படுத்தலாம்.(பி.கு: கண்காணிப்பாளர் (Superintendent) கிரேடு பே 4800,செவிலியர் (Staff Nurse) கிரேடு பே 4450 இவர்களும் சான்றொப்பம் இடலாம்)
A கிரேடு அலுவலர்கள் (கிரேடு பே 6600 க்கு மேல் பெறுபவர்கள்) மட்டும் அரசு கோப்புகளில் சிறு குறிப்பு எழுத மட்டும் பச்சை வண்ண மையினை பயன்படுத்தலாம்.( யார் A grade அலுவலர்கள்? இதனை தெரிந்து கொள்ள இங்கு செல்லவும்.)
இதிலிருந்து தெரிய வருவது சான்றொப்பம் (Attestation) தவிர ஏனைய கையெழுத்துக்களை யாரும் பச்சை மைகொண்டு எழுதக் கூடாது.
பட்டியல்களில்,கடிதங்களில்,பதிவேடுகளில், பச்சை மை கொண்டு அரசு அலுவலர்கள் கையொப்பம் இடுவது விதிகளுக்கு முரணானது.
http://www.scribd.com/fullscreen/71883531?access_key=key-21a52msc721yrkn9b3po
சான்றொப்பத்திற்கு பச்ச்சை மை
16 September 2011
2011-12 கொள்கை விளக்கக் குறிப்பு
நேரடி டவுண்லோடுக்கு இங்கே கிளிக்கவும்
https://docs.google.com/document/d/1wWo7Qfl9RAu8pX4XBXRtRpVflzOX2TjR2i-vLjoLfkQ/edit?hl=en_US
07 September 2011
முறையான மருத்துவ சிகிச்சைக்கான வழிகாட்டி நூல்
20 May 2011
மகப்பேறு விடுப்பு ஆறு மாதங்கள்.
தமிழக அரசுப்பணியில் உள்ள மணமான பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஆறு மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
26 October 2010
அல்மா-அட்டா பிரகடணம் (Alma-ata Declaration)
1978ல் அல்மா அட்டா என்ற ரஷ்ய நகரில் உலக சுகாதார நிறுவனம் (W.H.O) கூட்டிய மாநாட்டின் இறுதியில் வெளியிடப் பட்ட அறிக்கை கி.பி. 2000க்குள் அனைவருக்கும் மருத்துவ நலம் வழங்க உறுதியளித்தது. இந்த உறுதிமொழி பிரகடனத்தில் இந்திய அரசும் கையொப்ப மிட்டிருந்தது
தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு 2010-11 ல் பக்கம் 56 அத்யாயம் 5ல் கீழ்கண்டவாறு இப்பிரகடணத்தைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
1978 அல்மா அட்டா வில் தான் ஆரம்ப சுகாதார சேவை என்பதற்கான இலக்கணம் வகுக்கப்பட்ட்து.ஆரம்ப சுகாதார சேவை என்பது ஒரு அடிப்படையான அத்டியாவசிய சுகாதார சேவையாகும்.இதில் முழுமையாக சமூக பங்கேற்போடு மக்கள் வாழும் கிராமங்களுக்கு அருகிலேயே அவர்களது விருப்பத்திற்கு ஏற்றதாகவும்,பொருளாதார சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும்.
பொது சுகாதாரம் மர்றும் மருத்துவத்துறையில் பணியாற்றும் அனைவரும் படிக்க வேண்டிய பிரகடணம் இது.
23 July 2010
கொள்கை விளக்கக் குறிப்பு 2010-11
22 June 2010
அரசு ஊழியர்கள் இனி கையெழுத்து இடவேண்டாம்
18 June 2010
புதிய ஓய்வூதியத்திட்டம்
இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு மாதமும் பணியாளர்களது அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதற்கு சமமான தொகையை அரசு வழங்கும். இவ்வாறு எல்லா ஊழியர்களிடம் இருந்தும் பிடித்தம் செய்யப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.1.2004 முதல் இந்தத் திட்டம் அமலானது. தமிழகத்தில் அப்போதைய அரசால் 1.4.2003-ல் அமல்படுத்தப்பட்டது.
கீழே கொடுத்துள்ளகடித்த்தின்படி17786 / Finance (PGC) Department / 2010-1, Date: 21.05.2010 பணியில் சேர்ந்து ஒரு மாதத்திற்குள் CPS Index Number மாநில கனக்காயரிடமிருந்து பெறவேண்டும் எனவும் பணிவரன் முறைக்காக காத்திருக்கத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Contributory Pension
05 June 2010
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் Tamilnadu Government Doctors
03 June 2010
ஓய்வூதியப்படிவம் TN Government Pension form
02 February 2010
02 January 2010
போனஸ்
'ஏ' மற்றும் 'பி' தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் ரூ. 1,000 சிறப்பு போனஸ் வழங்கிடவும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ. 500 பொங்கல் பரிசு வழங்கிடவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்த, மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழு நேர மற்றும் பகுதி நேரப்பணியாளர்கள், தொகுப்பூதியம் பெற்று வந்த பணியாளர்கள், தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வந்த சத்துணவுத் திட்டப்பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள்,
குறு அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரகவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையில் பணிபுரிந்து வரும் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் உள்ள பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் மற்றும் ஒரு பகுதி தினக்கூலிகளாக பணியாற்றி பின்னர் தொடர்ந்து நிரந்தர பணியாளர்களாக பணியாற்றியவர்களுக்கும் சிறப்பு மிகை ஊதியம் ரூ. 1000 வழங்கப்படும்.
உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில் நுட்பக்கல்விக் குழு, இந்திய வோளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சம்பள விகிதம் மற்றும் அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் வரும் அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும்.
15 October 2009
ஆரம்ப சுகாதார நிலையங்களில் உதவிமருத்துவர்களின் பணி நேரம்
புதிய வேலை நேரம் மேம்படுத்தப்பட்ட ஆ.சு.நி
5 மருத்துவர்கள் பணிபுரியும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மூன்று பிரிவான பணிப்பகிர்வு.
1.காலை 8.00 முதல் 2.00 வரை
2.மதியம் 2.00 முதல் 8.00
3.இரவு 8.00 முதல் மறுநாள் காலை 8.00 வரை ( தங்கி பணிபுரிதல்) (இதில் காலை முதல் பணிப்பிரிவின் போது பொறுப்பு மருத்துவரும் (இன்சார்ஜ்) ஒரு உதவி மருத்துவரும். ஏனைய பணிப்பிரிவில் ஒரு மருத்துவர்.முந்தைய ஆணையில் இருந்த நிர்வாகப் பணிக்கான காலம் 2.00 முதல் 4.00 வரை தற்போது நீக்கப்பட்டுள்ளது.மேலும் காலை பணிப்பிரிவில் பணிபுரியும் உதவிமருத்துவர் எப்போதும் ஒருவர் மட்டுமே பணியாற்றுவது போன்ற நிலை வரும்.களப்பணி, நிவாகப்பணி,ஆய்வுக்கூட்டங்கள்,பள்ளிகளுக்கு செல்தல், ஏஎன்சி செக்கப் ,தடுப்பூசிப்பணிகள் மேற்பார்வை, போன்ற ஏனைய பொதுசுகாதார பணிகளுக்கான பணிப்பகிர்வு இல்லை.சராசரியாக ஒரு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 300 க்கும் குறையாத புற நோயாளிகள் வருகை இருக்கும்.மேற்கண்ட பணிகளில் ஈடுபடும் இன்சார்ஜ் மருத்துவர்கள் புறநோயாளிகளைப் பார்க்க நேரம் இருக்காது.காலை பணிப்பிரிவில் இன்சார்ஜ் மருத்துவரை சேர்த்து 3 மருத்துவர்கள் பணியில் இருப்பது மட்டுமே பணிப்பளுவை குறைக்கும். எனவே 5 மருத்துவர்களுக்கு மாறாக 6 மருத்துவர்கள்பணியிடம்
உருவாக்கவேண்டும்.)
ஒரு/இரு/மூன்று மருத்துவர்கள் பணிபுரியும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களிள்
ஒன்று அல்லது இரண்டு மருத்துவர்கள் காலை 9.00 முதல் 4.00 வரை பணி புரிய வேண்டும்.
( உணவு இடைவேளை 1.00 முதல் 1.30)
4.00 முதல் மறுநாள் காலை 9.00 வரை ஒருமருத்துவர் அழப்புப்பணிக்கு தயாராக இருக்க வேண்டும்.
அழைப்பு பணி என்பது நான்கு வித சூழல்களுக்கு மட்டும் தான்
1. பேரிடர்
2. தடுப்பூசி
3. கொள்ளை நோய்
4. உணவுநஞ்சேறல்
மேலும் புறநோயாளிகள் பரிசோதனை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது??
(இனி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் தட்டுப்பாடு இருக்கும்.இப்போதே கூடுதல் ஆ.சு.நி. பணியைத்தான் மருத்துவர்கள் விரும்புகிறார்கள்.)
மேலும் விவரங்களுக்கும் ஆனை நகல் பார்ப்பதற்கும்
http://www.payanangal.in/2009/10/blog-post_15.html
23 September 2009
22 September 2009
புதிய நால்வருணங்கள்
Revised Grade GO






