PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
18 April 2013
மென்பொருள் உதவித்துளி
06 March 2013
மென்பொருள் உதவித்துளிகள்
22 November 2012
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்ட பிரச்சினைகள்
12 April 2012
நக்கீரா நன்றாக எம்மைப் பாரும்.
1.இத்திட்டம் மூலம் தொகை முழுதும் சிந்தாமல் சிதறாமல் முழுமையாக பயனாளருக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
2.கர்ப்பமான நான்காவது மாதம் கிராம சுகாதார செவிலியரிடம் பதிவு செய்வது அவசியம்.அவ்வாறு பதிவு செய்யாமல் பிரசவ நேரத்தில் வந்து உதவித்தொகை கேட்பவர்க்கு இத்தொகை வழங்க இயலாது.(தாய் மற்றும் சேயின் ஆரோக்கியம் தொடர்பாகவே இந்த ஏற்பாடு செய்யப்படுள்ளது.)
3.கிராமப்புறங்களில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தொகை பயனாளர் கணக்குக்கு நேரடியாக ஈ.சி.எஸ் முறையில் பணம் வரவு வைக்கப் படுகிறது.
4.செக்காகவோ,பணமாகவோ வழங்கப்படும் போது கையூட்டலுக்கு காரணமாக அமையும் என்பதாலேயே வங்கி கணக்கு துவங்க வற்புறுத்தப்படுகிறது.
5. நக்கீரன் குறிப்பிடுவது போல 500 டெபாசிட் எந்த வங்கியும் கேட்பதில்லை.அந்த அந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் 0 கணக்கு துவங்க அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு வழங்கியுள்ளனர்.
6 நக்கீரன் குறிப்பிடுவது போல்.விண்ணப்பத்தில் 206 கேள்விகள் கேட்கப் படுவதில்லை( மாதிரி விண்ணப்படிவம் பார்க்க).விண்ணப்பம் மிக எளிமையானது, பயனாளர் தொடர்பான விவரங்களை கிராம சுகாதார செவிலியர்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் போதுதான்(picme) அனைத்து விவரங்களும் ஏற்றப்பட வேண்டும்.இவ்விவரங்கள் அனைத்தும் கிராம சுகாதார செவிலியர் வசம் எப்போதும் இருக்கும்.இது தொடர்பான விரிவான பயிற்சிகள் ( பயிற்சி காட்சி) புரஜக்டர் மூலம் எளிமையாகவும் விரிவாகவும் அளிக்கப் பட்டுள்ளது.
7.ஜாதி, படிப்பு,பிளட் டெஸ்ட்,எச்.ஐ.வி, டெஸ்ட், தடுப்பூசி,உடல் எடை,ஸ்கேன், இதையெல்லாம் ”அப்புடி...இப்புடின்னு ஒரு 206 கேள்வி “ என குறிப்பிடுவது எவ்வளவு அறியாமை.? இதெல்லாம் கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு கிடைக்கிறதே என நக்கீரன் மகிழ்ச்சியடைய வேண்டாமா?
8.கம்ப்யூட்டர் பணிக்கு டேட்டா எண்டிரி ஆப்பரேட்டர் பணியமர்த்தப் படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால் இடைக்கால மாக ஒரு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு மாதத்திற்கு ரூ.5000 வீதம் ”அவுட்ஸோர்ஸில் “ ஆன் லைன் வேலைகள் செய்ய ஒரு நபரை வட்டார அளவிலேயே மருத்துவ அக்லுவலர்கள் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்து அதற்கான தொகை டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரயிலான காலங்களுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ20,000/- வழங்கியுள்ளது.(மொத்தம் 385 x 20000 = 77,00,000).
9.மொத்தத்தில் தாமதம் என்பது ஏதுமில்லை.அப்படி இருந்தாலும் வங்கி கணக்கு துவங்குவது மாதிரியான பயனாளர்களின் பாதுகாப்பு கருதியே இத்தாமதம் ஏற்படுகிறது.
10. ஒட்டு மொத்தத்தில் ஒரு நல்ல திட்டம் மிக நல்ல நிலையில் மக்களை சென்றடையும் வேளையில் முழுமையான தகவல் அறியாமல் இதிலும் அரசியல் பார்ப்பது வருந்தத்தக்கது.
மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன் “ நக்கீரா நன்றாக எம்மை பாரும்”
15 March 2012
யார் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி?
- புதுக்கோட்டையில் பிறாந்த இவர் முதன் முதல் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பெண்.
- மருத்துவத்துறைக் கல்வியில் எம்.பி.சி.எம் என்கிற பட்டத்தை முதன் முதல் பெற்ற தமிழகப் பெண்மணி
- இந்திய அரசின் உதவித்தொகை பெற்று பிரிட்டனுக்கு சென்று, பெண்கள் - குழந்தைகளின் நோய் பற்றி ஆராய்ச்சி செய்த முதல் பெண்.
- தமிழக சட்டமன்றாத்தில் துணைத்தலைவர் என்ற பதவியை எதிர்ப்பில்லாமல் ஒரு மனதாகத் தேர்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
- அன்னி பெசண்ட் அம்மையார் மற்றும் மார்கரெட் கசின்ஸ் அகியவர்களுடன் இணைந்து இந்திய மகளிர் மன்றம் என்ற அமைப்பை பெண்ணுரிமைகளுக்காகப் போராடுவதற்காக துவங்கியவர்.
- பால்ய விவாகம் ஒழிய முக்கியக் காரணமாக இருந்தவர்.
- நகராட்சி,சட்டமன்றம்,சட்டமேலவை ஆகியவைகளில் பெண்களுக்கும் உரிமைவேண்டும் என்பற்கு எடுத்துக் காட்டாக இவைகளில் உறுப்பினர்களாக இருந்தவர்.
- தேவதாசி முறைகள் இருக்கக் கூடாது பெண்கள் தன்மானத்துடனும் ஒழுக்கத்துடனும் வாழவேண்டும் என்பதற்காக தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர்.
- அவ்வை பொதுநலப்பணி மருத்துவமணையை சென்னை அடையாறில் நிறுவியவர்.கிராம முன்னேற்றம், கிராம சுகாதாரம்,தண்ணீர்வசதி,கல்வி வசதி,நூலக வசதி ஆகியவைகளை அமைத்துத் தந்தவர்.
- அவ்வை இல்லம் உறுவாக்கியவர். இங்குள்ள பெண்கள் மருத்துவ மணைகளில் நர்ஸ்களாகவும்,சுகாதார மேற்பார்வையாளர்களாகவும்,கிராம சேவகிகளாகவும்,சுகாதார செவிலியராகவும்,பெண்கள் நலத் தொண்டர்களாகவும் உறுவாக்கப் பட்டுள்ளனர்.
- சென்னை புற்று நோய் ஆராய்ச்சி கழகத்தை நிறுவியவர்.
- மகாத்மா காந்தியினிடத்தில் இவருக்கிருந்த செல்வாக்கினை பயன் படுத்தி 1945 ல் டாக்டர் ராமச்ச்சந்திரன் என்பவர் திண்டுக்கல் அருகே காந்திகிராமம் என்ற ஒரு கிராமம் அமைய பரிந்துரைச் செய்து , காந்தி கிராமம் நிறுவிடச் செயல்பட்டார்.
- காந்தியடிகள் கைது செய்யப்பட்ட போது அதைக் கண்டித்து ஆங்கில கவர்னரால் நியமனம் செய்யப்பட்ட தனது சட்ட மன்ற மேலவை உறுப்பினர், துணைத்தலைவர்,பதவிகளை ராஜினாமா செய்தவர்.
- 1933ல் அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டவர்.
- “மிஸ்மேயோவின்” புத்தகக் குறிப்புகள் இந்திய மருத்துவமணை நோயாளிகள் பற்றிய குறிப்புத்தானே தவிர இந்தியர்களின் வாழ்க்கைப் படப்பிடிப்பு அல்ல::” என அமெரிக்காவிலே பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தவர்.
- 1952 ல் ராஜாஜி முதல்வராக பதவி ஏற்றபோது இவரை மீண்டும் மேலவை உறுப்பினராக கேட்டுக் கொண்டார்.அதைவிட முக்கியமானது புற்று நோய் மருத்துவ மணை அமைப்பது என்று சொல்லி மேலவை உறுப்பினர் பதவியை நிராகரித்தார்.
- மகாகவி பாரதியை நேரில் சந்தித்தவர்.பாரதியே இவரிடம் பெணுரிமை பற்றி அவர் ஆசிரியராக இருந்த இந்தியா பத்டிரிக்கையி எழுத கேட்டுக் கொண்டார்.
- “எனது சட்டமன்ற அனுபவங்கள்” என்ற நூலை எழுதியவர்.
- இவரது கணவர் திரு.சுந்தர ரெட்டி.இவரும் டாக்டர்.தென்னாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த சுப்பராய ரெட்டியாரின் தமக்கை மகன் இவர்.
02 January 2012
05 December 2011
டிசம்பர் 10 முதல் மகப்பேறு உதவித்திட்டம் ரூ12000
எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட்,ஸ்கேன்,மற்றும் இரத்தப் பரிசோதணை உபகரணங்கள் பழுதானால் அதனை பழுது நீக்கம் செய்ய உதவும் வகையில் ஆன்லைன் மூலம் கண்காணிக்கும் மென்பொருள் குறுந்தகடை நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
27 November 2011
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டம் புதிய ஆணை
சிறப்பம்சங்கள்
- உதவித்தொகை ரூ 6000 க்கு பதிலாக ரூ.12000
- 4000 வீதம் மூறு தவணைகளில்
- ஆன் லைன் PICME பதிவு அவசியம்
- முதல் 4000 ஆன் லைன் பதிவின் அடிப்படையில்
- அரசு மருத்துவமணை , ஆரம்ப சுகாதார நிலையம்,இங்கெல்லாம் பிரசவம் நடை பெற்றிருந்தால் மட்டும் வழங்கப்படும்
- தனியார் மருத்துவ மணை பிரசவங்களுக்கு கிடையாது
- 01.06.2011 லிருந்து நடக்கும் பிரசவங்களுக்கு மட்டும் பொருந்தும்.
29 September 2011
Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme Scheme details
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக கீழ்கண்ட குறிப்புகள் செய்யாறு மாவட்ட உதவி இயக்குனர் (புள்ளியியல்) திரு.பாஸ்கர் அவர்கள் அவர்களது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.இது அரசு கடிதமா எனத் தெரியவில்லை.ஆரம்ப நிலையில் ஒரு புரிதலுக்குப் பயன்படும்.
Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme Scheme details
16 February 2009
டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் படிவம்
மாதிரிகள் இங்கே.
1.வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள கர்பிணி பெண்களுக்கான படிவம்.
2.உழவர்பாதுகாப்பு அட்டை பெற்றுள்ள குடும்பத்து உறுப்பினர்களுக்கு உரிய படிவம்.
3.உழவர்பாதுகாப்பு அட்டை பெற்றுள்ள குடும்பத்து கர்பிணிப்பெண் கருக்கலைப்பு செய்து கொண்டால் அதற்கன படிவம்
வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள கர்பிணி பெண்களுக்கான படிவம்
Muthulakshmi Application Form-Revised
உழவர்பாதுகாப்பு அட்டை பெற்றுள்ள குடும்பத்து உறுப்பினர்களுக்கு உரிய படிவம்
FSSS Application Form-Revised
உழவர்பாதுகாப்பு அட்டை பெற்றுள்ள குடும்பத்து கர்பிணிப்பெண் கருக்கலைப்பு செய்து கொண்டால் அதற்கன படிவம்
FSSS Abortion Application Form-Revised
14 February 2009
டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்
Jan 09
02 September 2008
டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்
டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள கர்பிணி பெண்களுக்கு
கருவிலே வளரும் சிசு உருவுடனும் திருவுடனும் வளர்ந்திட கர்ப்பிணித்தாய்வலிவோடும் பொலிவோடும் வாழ்ந்திட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதிஉதவித்திட்டத்தின் கீழ் நிதி உதவி அளிக்கப்படுகிறது றது. இத்திட்டத்திற்கென ரூ.400கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2006 ஆம் ஆண்டில் 2,41,095 கர்ப்பிணிகளும்,2007 ஆம் ஆண்டில் 5,62,420 கர்ப்பிணித்தாய்மார்களும் இதுவரைபயனடைந் திருக்கிறார்கள்.



