Showing posts with label ஊடகச் செய்திகள். Show all posts
Showing posts with label ஊடகச் செய்திகள். Show all posts

12 April 2012

நக்கீரா நன்றாக எம்மைப் பாரும்.

மகப்பேறு திட்டம் 400 கோடி முடக்கம் என்ற தலைப்பில் நக்கீரன் ஏப் 11-13 ல் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.இந்தக்கட்டுரை தொடர்பாக சில தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.ஒட்டு ,மொத்தமாக இத்திட்டத்தினை குறை கூறுவது மட்டுமே செய்தியாளரின் நோக்கமாக தெரிகிறது.

1.இத்திட்டம் மூலம் தொகை முழுதும் சிந்தாமல் சிதறாமல் முழுமையாக பயனாளருக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2.கர்ப்பமான நான்காவது மாதம் கிராம சுகாதார செவிலியரிடம் பதிவு செய்வது அவசியம்.அவ்வாறு பதிவு செய்யாமல் பிரசவ நேரத்தில் வந்து உதவித்தொகை கேட்பவர்க்கு இத்தொகை வழங்க இயலாது.(தாய் மற்றும் சேயின் ஆரோக்கியம் தொடர்பாகவே இந்த ஏற்பாடு செய்யப்படுள்ளது.)

3.கிராமப்புறங்களில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தொகை பயனாளர் கணக்குக்கு நேரடியாக ஈ.சி.எஸ் முறையில் பணம் வரவு வைக்கப் படுகிறது.

4.செக்காகவோ,பணமாகவோ வழங்கப்படும் போது கையூட்டலுக்கு காரணமாக அமையும் என்பதாலேயே வங்கி கணக்கு துவங்க வற்புறுத்தப்படுகிறது.

5. நக்கீரன் குறிப்பிடுவது போல 500 டெபாசிட் எந்த வங்கியும் கேட்பதில்லை.அந்த அந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் 0 கணக்கு துவங்க அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு வழங்கியுள்ளனர்.

6 நக்கீரன் குறிப்பிடுவது போல்.விண்ணப்பத்தில் 206 கேள்விகள் கேட்கப் படுவதில்லை( மாதிரி விண்ணப்படிவம் பார்க்க).விண்ணப்பம் மிக எளிமையானது, பயனாளர் தொடர்பான விவரங்களை கிராம சுகாதார செவிலியர்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் போதுதான்(picme) அனைத்து விவரங்களும் ஏற்றப்பட வேண்டும்.இவ்விவரங்கள் அனைத்தும் கிராம சுகாதார செவிலியர் வசம் எப்போதும் இருக்கும்.இது தொடர்பான விரிவான பயிற்சிகள் ( பயிற்சி  காட்சி) புரஜக்டர் மூலம் எளிமையாகவும் விரிவாகவும்  அளிக்கப் பட்டுள்ளது.

7.ஜாதி, படிப்பு,பிளட் டெஸ்ட்,எச்.ஐ.வி, டெஸ்ட், தடுப்பூசி,உடல் எடை,ஸ்கேன், இதையெல்லாம் ”அப்புடி...இப்புடின்னு ஒரு 206 கேள்வி “ என குறிப்பிடுவது  எவ்வளவு அறியாமை.? இதெல்லாம் கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு கிடைக்கிறதே என நக்கீரன் மகிழ்ச்சியடைய வேண்டாமா?

8.கம்ப்யூட்டர் பணிக்கு டேட்டா எண்டிரி ஆப்பரேட்டர் பணியமர்த்தப் படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால் இடைக்கால மாக ஒரு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு மாதத்திற்கு ரூ.5000 வீதம் ”அவுட்ஸோர்ஸில் “ ஆன் லைன் வேலைகள் செய்ய ஒரு நபரை வட்டார அளவிலேயே மருத்துவ அக்லுவலர்கள் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்து அதற்கான தொகை டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரயிலான காலங்களுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ20,000/- வழங்கியுள்ளது.(மொத்தம் 385 x 20000  = 77,00,000).

9.மொத்தத்தில் தாமதம் என்பது ஏதுமில்லை.அப்படி இருந்தாலும் வங்கி கணக்கு துவங்குவது மாதிரியான பயனாளர்களின் பாதுகாப்பு கருதியே இத்தாமதம் ஏற்படுகிறது.

10. ஒட்டு மொத்தத்தில் ஒரு நல்ல திட்டம் மிக நல்ல நிலையில் மக்களை சென்றடையும் வேளையில் முழுமையான தகவல் அறியாமல் இதிலும் அரசியல் பார்ப்பது வருந்தத்தக்கது.

மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன் “ நக்கீரா நன்றாக எம்மை பாரும்”

05 December 2011

டிசம்பர் 10 முதல் மகப்பேறு உதவித்திட்டம் ரூ12000

டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித்திட்டம் 10 டிசம்பர் 2012 முதல் அமல் படுத்தப்பட உள்ளதாக பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.டிசம்பர் 2,3 தேதிகளில் சென்னையில் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் அவர்கள் தைலைமையில் நடந்த துணை இயக்குனர்கள் ஆய்வுக்கூட்டத்திற்கு பின் இச்செய்தி வெளியாகியுள்ளது.

எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட்,ஸ்கேன்,மற்றும் இரத்தப் பரிசோதணை உபகரணங்கள் பழுதானால் அதனை பழுது நீக்கம் செய்ய உதவும்  வகையில் ஆன்லைன் மூலம் கண்காணிக்கும் மென்பொருள் குறுந்தகடை நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் அவர்கள் வெளியிட்டுள்ளார்.


60 ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய பல்சிகிச்சை மையம்

அறுபது ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய பல்சிகிச்சை மையம் ஜனவரி 2012 துவங்கப்படும் .வேலூர்,திருச்சி,கடலூர்,திருவண்ணாமலை,தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கண்ட மையம் துவக்கப் பட உள்ளது.05.12.2011 தினமலர் பத்திரிகையில் இயக்குனர்  அவர்கள் கூறியதாக வெளியாகியுள்ள  செய்தி.

 படத்தின் மீது கிளிக் செய்து செய்தி முழுதும் படிக்கலாம்.





27 November 2011

20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்

முதல்வர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைவிதி எண்.110​ன் கீழ் 10.09.2011 அன்று ஒரு அறிக்கை வாசித்தார்.அதன் படி  தமிழகத்தில் 20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்க முதல்வர்  உத்தரவிட்டுள்ளார்.
கிராமப்புற மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 24 ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
 இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை 26.11.2011 அன்றுவெளியிட்ட அறிவிப்பு:


துவக்கப்பட உள்ள 20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்


திருச்சி மாவட்டத்தில் சமயபுரம்,


 வேலூர் மாவட்டத்தில் கொணவட்டம், சுமைதாங்கி, 


கிருஷ்ணகிரி அருகே உள்ள பேஜிபள்ளி, 


கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டம் திருநாவலூர் வட்டாரத்தில் சேந்தநாடு, சின்னசேலம் வட்டாரத்தில் அம்மாகளத்தூர், 


நாகப்பட்டினம் சுகாதார மாவட்டம் கொள்ளிடம் வட்டாரத்தில் மதிரவேலூர்,


 திருப்பூர் சுகாதார மாவட்டம் பல்லடம் வட்டாரத்தில் புளியம்பட்டி, 


பெரம்பலூர் சுகாதார மாவட்டம் பெரம்பலூர் வட்டாரத்தில் எளம்பலூர், 


ஈரோடு சுகாதார மாவட்டம் பெருந்துறை வட்டாரத்தில் காஞ்சிக்கோயில், நம்பியூர் வட்டாரத்தில் மலையம்பாளையம்,


 திருப்பத்தூர் சுகாதார மாவட்டம் கந்திலி வட்டாரத்தில் கோரட்டி,


 சங்கரன்கோவில் சுகாதார மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் தென்மலை, 


திருவள்ளுர் சுகாதார மாவட்டம் திருவள்ளூர் வட்டாரத்தில் கல்யாணகுப்பம்,


 பழனி சுகாதார மாவட்டம் வேடசந்தூர் வட்டாரத்தில் கனப்பாடி,


 புதுக்கோட்டை சுகாதார மாவட்டம் அன்னவாசல் வட்டாரத்தில் ராப்பூசல்

கரூர் சுகாதார மாவட்டம் தாந்தோணி வட்டாரத்திலுள்ள வடக்குபாளையம் கே.பரமத்தி வட்டாரத்தில் தம்பிவாடி, 


தஞ்சாவூர் சுகாதார மாவட்டம் ஒரத்தநாடு வட்டாரத்தில் ஒக்கநாடு கீழையூர்,


 தூத்துக்குடி சுகாதார மாவட்டம் தூத்துக்குடி வட்டாரத்தில் லூர்தம்மாள்புரம்


 ஆகிய 20 இடங்களில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். இதற்கு ரூ.7.71 கோடி செலவாகும்.


 தரம் உயர்த்தப்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்:
 அறந்தாங்கி சுகாதார மாவட்டம் கரம்பகுடி வட்டாரம் மலையூர், 


செய்யார் சுகாதார மாவட்டம் அனுக்காவூர் வட்டாரம் அக்கூர், 


கோயம்புத்தூர் சுகாதார மாவட்டம் கிணத்துக்கடவு வட்டாரம் 
நல்லாட்டிபாளையம்,


 ஈரோடு சுகாதார மாவட்டம் டி.என்.பாளையம், 


கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டம் ரிஷிவந்தியம், 


பழனி சுகாதார மாவட்டம் குஜிலியாம்பாறை, 


பூந்தமல்லி, சைதாப்பேட்டை சுகாதார மாவட்டம் லத்தூர் வட்டாரம் பழஞ்சூர்,


 சேலம் சுகாதார மாவட்டம் கொங்கணாபுரம், பனமரத்துப்பட்டி, தாரமங்கலம், பி.என்.பாளையம் வட்டாரம், ஆரியபாளையம், 


சிவகங்கை சுகாதார மாவட்டம் திருப்புவனம் வட்டாரம் பூவந்தி, 


சிவகாசி சுகாதார மாவட்டம் வெம்பக்கோட்டை, கல்லமனைக்கான்பட்டி, 


தஞ்சாவூர் சுகாதார மாவட்டம் பேராவூரணி வட்டாரம் செருவாவிடுதி, சேதுபாவாசத்திரம் வட்டாரம் அழகியநாயகிபுரம்,


 திருவள்ளூர் சுகாதார மாவட்டம், புழல் வட்டாரம், நர்வாரிகுப்பம், 


வில்லிவாக்கம் வட்டாரம், போரூர், திருப்பத்தூர் சுகாதார மாவட்டம் கந்திலி வட்டாரம், குனிச்சி, காட்பாடி வட்டாரம், திருவலம், 


திருப்பூர் சுகாதார மாவட்டம் குடிமங்கலம், 


திருவண்ணாமலை சுகாதார மாவட்டம் புதுபாளையம் வட்டாரம், காரப்பட்டி,


 உதகமண்டலம் சுகாதார மாவட்டம் கூடலூர் வட்டாரம், நெல்லக்கோட்டை,


 விழுப்புரம் சுகாதார மாவட்டம் வல்லம் வட்டாரம், மேல்சிதாமூர்


       என மொத்தம் 24 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். இதற்கு ரூ.22.55 கோடி செலவாகும்.


10 November 2011

ஹிந்து நாளிதழில் எமது வலைப்பூ பற்றிய செய்தி.

10.11.2011 The Hindu வில் எமது வலைப்பூ பற்றிய கட்டுரை வெளிவந்துள்ளது.நான்கு வருடங்களாக தொடர் பதிவுகள் செய்தமைக்கு அங்கீகாரம் கிடைத்தது போல் உண்ர்கிறேன்.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2613489.ece



22 September 2011

ஒரு கதை கேளுங்கள்.

ஒரு அரசு ஊழியர் தனது குழந்தைகள் சிறு வயதாக இருக்கும் போது அகால மரணமடந்துவிட்டார்.அவர் பணிபுரிந்த அலுவலகம் பொது சுகாதாரத்துறையைச் சேர்ந்த சிதம்பரம் யானைக்கால் நோய்தடுப்பு திட்ட அலுவலகம்.பணி - உதவியாளர் ( அமைச்சுப்பணி).பெயர் உத்திராபதி.இறந்தவருடம் 1992. பணிக்காலத்தில் சிறந்த முறையில் பணியாற்றி ஊழியர்களிடமும் அதிகாரிகளிடமும் நற்பெயர் எடுத்தவர்.காலத்தின் கோலம் அவரது குடும்பத்தை நிர்கதியாக்கியது.சபரிமலை சென்று வரும்போது மாரடைப்பால் கால்மானார்.குழந்தைகள் 3.மூவரும் பெண்கள்.அவர் இறந்த போது அவர்களுக்கு வயது முறையே 24,10,8.என்ன செய்வாள் அந்த தாய்?.முதல் பெண் திருமணம் ஆணவள்.இரண்டாம் பெண்னோ 6ம் வகுப்பு படித்து வருகிறாள்.மூன்றாவது பெண் 4ம் வகுப்பு படித்து வருகிறாள்.1999ல் தான் இரண்டாவது பெண் 10ம் வகுப்பு முடிக்கிறாள்.அதுவரை தட்டு தடுமாறி குடும்பத்தினை நடத்திய அந்ததாய் 1999 ல் அரசுக்கு மனு சமர்ப்பிக்கிறார்.எனது மகள் தற்போது உரிய கல்வித்தகுதி முடித்துள்ளார்,அவருக்கு இளநிலை உதவியாளர் பணி நியமனம் வழங்கும் படி கேட்கிறார்.துறை கோப்பினை 2003 வரை பரிசீலித்தது? அதன் பிறகு மனு திருப்பப்படுகிறது.காரணம்-’கருணை அடிப்படையில் வேலை வழங்க அரசு தடை விதித்துள்ளது” -என்பதுதான்.2006 ல் அந்தத் தடையினை அரசு நீக்கியது.மீண்டும் அந்தத்தாய் மனு சமர்ப்பிக்கிறார்.இந்த மனுவை பரிசீலனை செய்த? துறை, ஊழியர் இறந்து 3 வருடங்களுக்குள் கருணை வேலை கேட்டு மனு கொடுக்க வேண்டும்,ஆனால் , நீங்கள் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மனு கொடுத்துள்ளதால் உங்களது மனு நிராகரிக்கப் படுகிறது என உத்தரவிட்டது.
என்ன செய்வாள் அந்தத்தாய்?.கணவன் இறந்து 14 வருடங்கள் வனவாசம் வாழ்ந்தாகிவிட்டது.இன்னும் நீதி கிடைத்த பாடில்லை? நீதி மன்றத்தினை நாடினாள்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனபாலன் வரலாற்றுச் சிறப்பு மிக்கதொரு தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

 தீர்ப்பின் சாராம்சம்.

1.ஒரு குடும்பத் தலைவர் இறந்தவுடன் அந்த குடும்பத்தினர் வாழ்வாதாரத்துக்காக கருணை வேலை கேட்கின்றனர்.அப்படிப்பட்ட சூழ்நிலையில் மனுதாரர் கொடுத்த மனு தொடர்பாக அரசு உயர் அதிகாரிகள் நடந்து கொண்ட விதம் சரியானது கிடையாது.

2.இது போன்ற நிகழ்வுகளில் அதிகாரிகள் மனுவினை கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்.

3.ம்னு தாரருக்கு கருணை வேலை வழங்க முடியாது என்று அரசு மறுக்க முடியாது.

4.அரசு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

5.மனுதாரரின் தகுதிக்கேற்ப 2 மாதங்களுக்குள் வேலை வழங்க பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு உத்தரவிடப் படுகிறது.

அந்தத்தாயின் உள்ளம் எவ்வளவு மகிழும்.
சமீப காலமாக நீதிமன்றம் சென்றுதான் நீதியை பெறவேண்டும் என்கிற நிலை உள்ளது.இது மாற வேண்டும்.அதிகாரிகள் எந்த கோப்பிலும் நேரடியாக முடிவெடுப்பதில்லை.
அமைச்சுப்பணியாளர்களின் நேர்மையான ,மனசாட்சியுடனான ,நடவடிக்கைகளால் அதிகாரிகளை நல்லது செய்விக்க முடியும்.மனம் இருந்தால் மார்க்கமுண்டு.

07 September 2011

முறையான மருத்துவ சிகிச்சைக்கான வழிகாட்டி நூல்


நன்றி: http://tamilnadu-stg.com/ தளத்திலிருந்து பெறப்பட்ட செய்தி.

தமிழக அரசின் சுகாதார மற்றும் குடும்பநலத்துறையின் தமிழ்நாடு 


சுகாதார திட்டம்
முறையான மருத்துவ சிகிச்சைக்கான வழிகாட்டி நூல்
முகப்பு பக்கத்திற்கு
உங்களை கனிவுடன் வரவேற்கிறோம்

27 August 2011

கடவுளை நேரில் பார்த்தால் என்ன கேட்பீர்கள்?

31.08.11 ஆனந்தவிகடனின் இணைப்பிதழான என்விகடன் ( திருச்சி,தஞ்சை,கரூர் பதிப்பு) இதழில் ஒரு கேள்வி பலரிடம் கேட்கப்பட்டு அதற்கான பதில் பெறப்பட்டு பிரசுரமாகியுள்ளது.

                         ( படத்தை கிளிக் செய்து செய்தியை படியுங்கள்)


கேள்வி:கடவுளை நேரில் பார்த்தால் என்ன கேட்பீர்கள்?
பதில் :( மலர்ச்செல்வி ஆசிரியை கும்பகோணம்)
“சமீபத்தில் எங்க பள்ளிகூடத்துக்கு பார்வைப் பரிசோதனைக்கு வந்த மருத்துவர்கள் எல்லாம் ரொம்ப அர்ப்பணிப்பா வேலை பார்த்தாங்க.எங்களைப்போல ஆசிரியர்களுக்கும் பிள்ளைங்க கிட்ட உள்ள பார்வை குறைபாடுகளை எப்படி கண்டுபிடிக்கறதுன்னு சொல்லித்தந்தாங்க.அதனால் நிறைய பசங்களோட பிரச்சனைகளைக் கண்டுபிடிச்சு பெற்றோர்கிட்ட தெரியப்படுத்தினோம்.இந்த மாதிரியே எல்லா மருத்துவர்களும் இருந்தா நம்ம நாடு எவ்வளவு சுகாதாரமா இருக்கும்கிற எண்ணத்தை அவங்க உருவாக்கிட்டாங்க.மருத்துவத்தைத் தொழிலாகப் பார்க்காமல் சேவையாகப் பார்க்குற மனசு உள்ள நிறையபேர் மருத்துவத்துறைக்கு வரணும்னு கடவுள் கிட்ட நான் கேட்பேன்”
இது பொதுசுகாதாரத்துறையின் சாதனை என்றே சொல்லவேண்டும்.மனமாற வாழ்த்திய ஆசிரியைக்கும் மனங்குளிர பணியாற்றிய கும்பகோணம் கண்மருத்துவ உதவியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கும் வாழ்த்துக்கள்

01 September 2010

உணவுக் கலப்படத் தடைச்சட்டம்

இன்றைக்கு உணவு பொருட்களில் பளீர் நிறத்துக்காக கலக்கபடும் அனைத்து செயற்கை ரசாயனங்களும் நம்முடைய உடலின் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைப்பது மட்டுமின்றி, உயிருக்கே ஆபத்தாகவும் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

பாக்கெட் செய்யப்பட்ட கடைகளில் விற்கப்படும் நொறுக்குத் தீனிகளில் 52 சதவீதம் கலப்படத்தயாரிப்புகள் என்கிற செய்தியும் பொது சுகாதாரத் துறை இயக்குனர் திரு.பொற்கைப்பாண்டியன் அவர்களின் பேட்டியும் 1.9.10 குமுதம் இதழில் வெளிவந்துள்ளது.


இது தொடர்பாக கலப்படம் பற்றியும் கலப்படத்தடை சட்டம் பற்றியும் ஒரு செய்தி தொகுப்பு இங்கே.


உணவுப் பொருட்கள் அனைத்தும் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. பல்வேறு எண்ணெய்களில் பாமாயில் கலப்படம் செய்யப்படுகிறது. பாலில் கார்பனேட், ஹைட்ராக்சைடு, ரசாயன கழிவுகள் போன்றவை கலக்கப்படுகிறது. தேயிலை தூளில் முந்திரி, புளியங்கொட்டை தோல்களின் துகள்கள் கலந்து விற்கப்படுகிறது. இதனை பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய், வாதம் போன்ற நோய்கள் தாக்குகின்றன. சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் பழங்களில் மண்புழுதிகள், வாகன புகை படிவதால் நோய் ஏற்டுகிறது.

பெட்ரோல், டீசல் போன்றவற்றின் தயாரிப்பில் கடைசியாகக் கிடைக்கக் கூடிய தாது எண்ணெய்தான் மினரல் ஆயில். இந்த மினரல் ஆயிலுக்கு நிறமும் கிடையாது. மணமும் கிடையாது. இதை அனைத்து வகையான எண்ணெயிலும் கலக்கலாம். ஒரு மாற்றத்தையும் காட்டாது. ஆனால் சாப்பிட்டபின் முழுவதும் ஜீரணம் ஆகாமல் அப்படியே நம் குடல்களில் தங்கி குறிப்பிட்ட காலத்திற்குப்பின் புற்றுநோயை உண்டாக்கிவிடும்… இதற்கு முக்கியக் காரணம், அந்த எண்ணெயின் அதிகப்படியான அடர்த்தி…. காசுக்காக கலப்படம் செய்பவர்கள் அதன் இரசாயன குணம் தெரியாது கலந்துவிடுகிறார்கள். ஆனால், ஐந்து ரூபாய்க்கும் பத்துரூபாய்க்கும் எண்ணெய் வாங்கும் ஏழைகள் இந்த அபாயத்தை அறியாமல் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்

கொஞ்சம் மிளகுத் தண்ணீரில் நிறைய பப்பாளி விதைகளை ஊறவைத்து, பின் அதை நன்றாகக் காயவைத்து மிளகுடன் கலந்து மிளகு ரசத்தை பப்பாளி விதை ரசமாக மாற்றிவிடுகிறார்கள்.

இலவம் பிஞ்சு, மஞ்சநத்தி இலையைக் காயவைத்து வறுத்து அரைத்து டீத்தூளுடன் கலக்கிறார்கள். ஏதோ உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, உணவு என்ற பெயரில் ஏழைகள் உதட்டில் வைக்கும் ஒவ்வொன்றையும் இப்படி விஷமாக மாற்றிவிடுகின்றனர் கலப்படக்காரர்கள். கொஞ்சம் மனசாட்சியுள்ளவர்கள் மிளகுத் தூளுடன் பொட்டுக்கடலைத் தூளைக் கலப்பது; சர்க்கரையையும் வெள்ளை ரவையையும் கலப்பது; கடலைப் பருப்புடன் வடைபருப்பைக் கலப்பது என எடையை மட்டும் கூட்ட, விலை கூடுதலான பொருட்களுடன் விலை குறைந்த ஆபத்தில்லாத பொருட்களை கலக்கின்றனர்.

சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் மஞ்சள் தூளுக்கு ரேஷன் கடையில் விற்கப்படும் ஒரு ரூபாய் அரிசியை மாவு போல பவுடராக்கி, அதனுடன், "லெட் குரோமேட்' என்ற துத்தநாக ரசாயனத்தை கலப்படம்

செய்கின்றனர்

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்ற பருப்பு வகைகளில் இரண்டு அயிட்டம் உண்டு. ஒன்றுக்குப் பெயர் சில்கி, இன்னொன்று செகண்ட்ஸ். இந்த சில்கி தான் ஒரிஜினல். எவ்வளவு நாள் வைத்திருந்தாலும் கெடாது. ஆனால் இந்த செகண்ட்ஸ் பதப்படுத்தி, பாதுகாப்பாக வைத்திருக்கும் குடோன்களில் இருந்து வெளியே எடுத்துவிட்டால் பத்துப் பதினைந்து நாட்களில் பூச்சியரித்து, புழுபூத்து, பவுடராகக் கொட்டும். கல்யாணவீட்டுச் சமையல், ஓட்டல் என உடனடி பயன்பாட்டுக்கு இந்த செகண்ட்ஸைதான் விலை குறைவு என்பதால் சரக்கு மாஸ்டர்கள், சமையல்காரர்கள் வாங்குவதுண்டு… காசு கொடுத்து ஓட்டலுக்குச் சென்றாலும், அழைப்புக்காக கல்யாண விருந்துக்குச் சென்றாலும் கலப்பட ஆபத்து இப்படியொரு ரூபத்தில்

அங்கே காத்துக் கொண்டிருக்கும்

கூட்டு பெருங்காயத்துடன் கால்போனி மற்றும் கருவேல மரத்தின் பிசின் ஆகிய பொருட்கள் கலக்கபடுகின்றன. குளிர்பானங்களில் எத்தலின், கிளிக்கால், பாஸ்பரிக் போன்ற அமிலங்கள் மற்றும் சாபரின் என்னும் போதை பொருட்களும் கலக்கபடுகின்றன

பி.கு( டீத்தூளில் சாயம் கலந்ததை கண்டுபிடிக்க வழி உண்டு. அதாவது ஈரமான வடிதாளின் மீது டீத்தூளை தூவும் போது, வண்ணங்கள் தோன்றினால், அது சாயம் கலந்த தூள் என்று அறியலாம்

2.நன்றாக பொடியாக்கபட்ட ஒரு கிராம் பெருங்காயத்துடன், ரெக்டிபைடு ஸ்பிரிட் சேர்த்துக் குலுக்கி, வடிகட்டி அதை ஐந்து மில்லி எடுத்து, அத்துடன் பத்து சதவிகித பெர்ரிக் குளோரைடு சேர்த்துக் குலுக்கவும். இளம் பச்சை நிறம் தோன்றினால் பெருங்காய துடன் வேறு பிசின்களும் கலந்திருப்பது உறுதி)

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த சட்டம் ஒன்றை மத்திய அரசு 2006_ல் இயற்றியுள்ளது. இதில் சில முக்கியமான பொருட்களில் செய்யப்படுகின்ற கலப்படத்திற்காக ஆயுள் தண்டனை வரை வழங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்தச் சட்டமெல்லாம் நடைமுறைப்படுத்த முடியாமல் கிடப்பில் கிடக்கிறது

நன்றி http://thogamalaiphc.blogspot.com/2008/10/blog-post_7706.html

http://foodsafetynews.wordpress.com/

http://cchepeye.blogspot.com/

http://tamilcnn.com/

http://www.mohfw.nic.in/pfa.htm

http://www.pfndai.com/Gazette%20pdfs/GSR44E22-01-09DraftPFAamend_SampleAmtForAnalysis.pdf

http://www.mohfw.nic.in/pfa%20acts%20and%20rules.pdf


1.09.2010 குமுதத்தில் இயக்குனரின் பேட்டி





குளித்தலை பகுதியில் சுகாதார ஆய்வாளர்களின் ஆய்வு.



கலப்படப் பொருட்களும் அதனால் வரும் நோய்களும்



கரூர் மாவட்டம் தாந்தோணி பகுதியில் குடிநீர் பாட்டில்,பாக்கெட் ஆய்வு.






பால் கலப்பட ஆய்வு மேற்கொள்ளும் சுகாதார ஆய்வாளர்கள் குழு.(பழைய படம்)














11 July 2010

ஒருநாள் இரண்டு செய்திகள்

தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக வருமுன் காப்போம் மருத்துவ முகாம் 09.07.2010 அன்று அ.உடையாப்பட்டிக்கு உட்பட்ட கழுகூரில் நடைபெற்றது.அன்று மாலை முகாமிலிருந்து மருந்து எடுத்துவர கரூர் துணைஇயக்குனர் அலுவலகம் சென்ற ஆம்புலன்ஸ் எதிபாராத விதமாக கரூரில் விபத்திற்குள்ளானது.ஓட்டுனர் திரு சந்தோசம் மற்றும் சீராளர் திரு.சக்திவேல் இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர்.எதிரே மோதிய வாகனம் பஞ்சப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ்.அவ்வூர்தி மருந்துகளை ஏற்றிக்கொண்டு எதிரே வந்தது.






06 August 2009

டி.கல்லுப்பட்டி

வாழ்த்துவோம்,பெருமை கொள்வோம்,தலை வணங்குவோம்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளதை கடந்த இரண்டு வருடங்களில் கண்டு வருகிறோம்.

12 மணி நேரத்தில் 10 பிரசவம் நடைபெருவது என்பது சாதாரணமானதல்ல.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

5 ஆண் குழந்தைகள் 5 பெண் குழந்தைகள்.அனைத்தும் சுகப்பிரசவம்.

கடந்த 28 ம் தேதி மாலை 3.00 மணியிலிருந்து மறுநாள் அதிகாலை 3.00 மணி வரை இப் பிரசவங்கள் நடைபெற்றுள்ளன.

ஒரு குழந்தை பிறந்து அந்த மேசையையும் அறையையும் சுத்தம் செய்யக்கூட நேரம் இருந்திருக்காது.

இச் செய்தியின் பின்னால் இருக்கும் மருத்துவர்கள்,(medical officer) செவிலியர்கள்,(staff nurse)கிராம சுகாதார செவிலியர்கள்,(village health nurse)துப்புரவுப்பணியாளர்கள்,(sanitory worker) இதர உதவியாளர்களின் உழைப்பு போற்றுதலுக்குரியது.

வாழ்த்துவோம்,பெருமை கொள்வோம்,தலை வணங்குவோம்



31 July 2009

பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்3


தோகமலை அரசு மேல் நிலைப்பள்ளியில் நடை பெற்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடர்பான ஊடகச்செய்தி.படத்தின் மேல் கிளிக் செய்தால் பெரிதாக பார்க்கலாம்

30 December 2008

இதய அறுவை சிகிச்சை உதவித்தொகை அதிகரிப்பு




Photobucket

அரசு ஆணை எண் 407 நாள் 05.12.2008 படி ஏழை குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு அளித்துவரும் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது
Name of the Surgery Existing Rate Revised Rate
1 Closed Heart Surgeries Rs.10,000/- Rs.20,000/-
2 Major Open Heart Surgeries Rs.30,000/- Rs.50,000/-
3 Complex Open Heart Surgeries Rs.70,000/- Rs.1,00,000/-

14 December 2008

சுகாதாரத் துறையில் காலி பணியிடங்கள் மூன்று மாதங்களில் நிரப்பப்படும்



சுகாதாரத் துறையில் காலி பணியிடங்கள் மூன்று மாதங்களில் நிரப்பப்படும் என மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மான்புமிகு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் திருச்சியில் தெரிவித்துள்ளார்.5124 செவிலியர்களும்,4418 டாக்டர்களும்,12332 மருத்துவம் சாராத பணியாள்ர்களும் இதுவரை நியமணம் செய்யப்பட்டுள்ளனர்.11 சதவிகிதமாக இருந்த காலிபணியிடஙள் தற்போது 3 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.இன்னும் 3 மாதங்களில் காலிபணியிடங்களே இல்லாத நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

16 November 2008

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிசேரியன்


திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிசேரியன் முறையில் பிரசவம் நடைபெற்றுள்ளது.சிறுகாம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இப் பணியினை மேற்கொண்ட மருத்துவகுழுவிற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

14 November 2008

தடுப்பூசி பெரிய சவால்






தட்டம்மை தொடர்பான இந்த ஊடகச்செய்தி கவலை அளிக்கிறது.
போலியோவும்,பெரியம்மையும்,தமிழ்நாட்டில் இல்லாமல் செய்த பொது சுகாதாரத் துறைக்கு இது பெரிய சவால்தான்.இதனை எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறோம்?.
தற்போது குழந்தைகளுக்கு தடுப்பபூசி போட தாய்மார்கள் ஆரம்ப சுகாதார நிலயதிற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.ந‌டைமுறையில் இது அவர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கிறது.அவர்கள் வசிக்கும் கிராமங்களிலேயே துணை சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதில் இருக்கும் வசதி இதில் இல்லை.பெரும்பாலும் விவசாயக் கூலிகளாக இருக்கும் பெண்கள் தடுப்பூசி போடும் நாட்களிள் பேருந்து பிடித்து அருகில் உள்ள ஆரம்பசுகாதார நிலையத்திற்கு வரவேண்டியுள்ளதோடு ஒரு நாள் கூலியையும் இழக்க நேரிடுகிறது.அறிவுசால் நமது துறை அறிஞர்கள் இது தொடர்பாக ஆரோக்யமான விவாத பங்களிப்பை தரவேண்டிய அவசியம் உள்ளது.
மரு.புருனோ,பழனி சுரேஷ் போன்றோர் இதனை முன்னெடுக்கலாம்.

17 October 2008

உணவு கலப்படத்தடுப்புத் திட்டம்




22.07.2008 அன்று சென்னை முதல் கன்யாகுமரி வரை ஒரே நாளில் பால் பொருட்களில் கலப்பட‌த்தைக் கண்டுபிடிப்பதற்காக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறையினரால் பெரிய அளவிலான ரெய்டு நடத்தப்பட்டது.
இந்தியாவிலேயே இப்படி ஒரே நேரத்தில் மாநிலம் முழுதும் நடத்தப்பட்ட ரெய்டு இது ஒன்றாகத் தான் இருக்கும்.
இந்த ரெய்டு தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இணை இயக்குநரும் உணவு கலப்படத்த‌டுப்புத்திட்ட அதிகாரியுமான திரு.டி.ஜெயக்குமார் அவர்கள் 5.10.2008 தினமணி கதிர் இதழுக்கு இந்த ரெய்டு பற்றியும் உணவு கலப்படத்தடுப்புத் திட்டம் ப்ற்றியும் அளித்துள்ள விரிவான பேட்டி மேலே.
தோகமலை ஆரம்ப சுகாதார நிலைய களப்பணியாளர்கள் ரெய்டின்போது slide show வாக‌ (சிலைடு ஷோ தெரிய flash player தேவை)


டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் கனவு.



எனக்கு ஒரு கனவு உண்டு அது நாடு முழுதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்க‌ள் திற‌மையான மருத்துவர்களைக் கொண்டும், மருத்துவ வசதிகளைக் கொண்டும் 100 சதவீதம் செயல்படவேண்டும் என புதுவை ஜிப்மர் மருத்துவமணையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பேசினார்.(16.10.2008 தினகரன் செய்தி)

உங்கள் கனவு நன‌வாகும் நாள் வெகு தொலைவில் இல்லை அய்யா.