தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2010-11 . இத்துறையில் பணியாற்றும் அனைவரும் படித்தாக வேண்டிய ஆவணம் இது.அரசு என்ன செய்திருக்கிறது என்ன செய்யப்போகிறது இதுவரை செய்ததின் விளைவுகள் என்ன என்பன போன்ற பல தகவல்களை பெற்றுள்ள பெட்டகம் இது. ப்டியுங்கள் உங்களை பற்றிக்கூட இதில் வரலாம்.
PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
23 July 2010
21 July 2010
டெங்கு எதிர்ப்பு மாதம்
டெங்கு எதிர்ப்பு மாத நடவடிக்கையாக 21.07.2010 அன்று தோகமலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளைக் கொண்டு ஒரு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.நிகழ்ச்சியில் முதன்மை பூச்சியியல் வல்லுனர் திரு.S.ஸ்ரீதரன், திருச்சி மண்டல பூச்சியியல் வல்லுனர் திரு A.பாலாஜி,கரூர் பூசிசியியல் வல்லுனர் திரு.A.சிவக்குமார் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் ம்ரு.சவுமியா அவர்களும் கலந்து கொண்டணர்
14 July 2010
மாணவ மாணவியர் களுக்கு பாராட்டுச் சானறிதழ்
பஞ்சப்பட்டி ஆ.சு.நி. கண்மருத்துவ உதவியாளர் திரு.இரவிச்சந்திரன் அவர்கள் மகனுக்கு வழங்கப்பட்ட சான்று.

காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ஓட்டுனராகப் பணியாற்றும் திரு.முருகபூபதி அவர்களின் மகன் திரு கபிலன் சான்றிதழ் பெறும் காட்சி

கரூர் மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறையில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களின் குழந்தைகளில் இநத ஆண்டு (2009-10) 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் 90 சதவிகிதத்திற்கு மேல் மதிபபெண் பெற்றவர்களுக்கு பாராட்டுச் சானறிதழ வழங்கப்பட்டது.மரு வீ.வீரபாண்டியன் துணை இயக்குனர் நலப்பணிகள் மற்றும் குடும்பநலம் அவர்களது முயற்சியில் 12.07.2010 அன்று விழாநடைபெற்றது.தோகமலை வட்டார ஆரம்ப சுகாதாரநிலையத்திற்குட்பட்ட காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ஓட்டுனராகப் பணியாற்றும் திரு.முருகபூபதி அவர்களின் மகன் திரு கபிலன் அவர்களும் 91சதவிதம் பெற்று சான்றிதழ் பெற்றார்.
11 July 2010
ஒருநாள் இரண்டு செய்திகள்
தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக வருமுன் காப்போம் மருத்துவ முகாம் 09.07.2010 அன்று அ.உடையாப்பட்டிக்கு உட்பட்ட கழுகூரில் நடைபெற்றது.அன்று மாலை முகாமிலிருந்து மருந்து எடுத்துவர கரூர் துணைஇயக்குனர் அலுவலகம் சென்ற ஆம்புலன்ஸ் எதிபாராத விதமாக கரூரில் விபத்திற்குள்ளானது.ஓட்டுனர் திரு சந்தோசம் மற்றும் சீராளர் திரு.சக்திவேல் இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர்.எதிரே மோதிய வாகனம் பஞ்சப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ்.அவ்வூர்தி மருந்துகளை ஏற்றிக்கொண்டு எதிரே வந்தது.
22 June 2010
அரசு ஊழியர்கள் இனி கையெழுத்து இடவேண்டாம்
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பெரும்பாலும் ஊதியங்கள் மற்றும் இதர பணப்பயண்கள் கருவூலத்தில் ஒப்பளிப்பு செய்யப்பட்டு நேரடியாக பணியாளர்களது வங்கிக் கணக்கில் பற்று வைக்கப்படுகிறது.அதற்கான பற்றொப்பப் பதிவேட்டில் (acquittance) அவர்களது கையொப்பம் பெறுவது நடைமுறையில் மிகுந்த சிக்கல் உடையதாக இருந்தது.அவர்கள் பணியாற்றுவது ஒரு இடம் acquittance இருப்பது ஒருஇடம், கையெழுத்து இடுவதற்காக பேருந்து பிடித்து அரைநாள் செலவு செய்ய வேண்டியிருந்தது.ஆனால், தணிக்கையின் போது இவ்வாறு கையொப்பம் இல்லாத குறைகளை சுட்டிக்காட்டும் பத்திகளே பெரும்பாலும் இருக்கும். ஊழியர்கள் மாறுதலாகிச் சென்றுவிட்டாலோ,அக்கையொப்பம் பெறுவட்தும் அந்த தணிக்கைத்தடையை நீக்குவதும் பெரும் பாடாகிவிடும்.தற்போது அரசு ஆணை எண்.G.O.No.175 fin(salaries) 18.06.2010 ன் படி ஊதியங்கள் மற்றும் இதர பணப்பயன்கள் ECS முறையில் ஊழியர்களின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டால் அதற்கான கையொப்பம் வாங்க அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.காலவிரயம் மனித ஆற்றல் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. அனால் ECS copy அலுவலக நகலில் ஒட்டி வைக்கப்பட வேண்டும்.
19 June 2010
செவிலியர் திறன் ஆய்வு மதிப்பீடு
தமிழ்நாட்டில் செவிலியர்களின் நிர்வாகமேலாண்மைதிறன் தொடர்பான ஒர் ஆய்வு மதிப்பீடு இது.இதை படித்து முடித்த போது இது மேசையில் அமர்ந்தவாறு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையாகத் தெரியவில்லை கடினமான களப்பணியின் வெளிப்பாடு இது.சிற்சில தகவல் குறை பாடு இருந்தாலும் இவ்வக்கறை பாராட்டப் படவேண்டியதே.
Assessment of Nursing Management capacity in Tamilnadu.
Tamil Nadu Report
Assessment of Nursing Management capacity in Tamilnadu.
Tamil Nadu Report
18 June 2010
புதிய ஓய்வூதியத்திட்டம்
01.4.2003-க்குப் பின் தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு மாதமும் பணியாளர்களது அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதற்கு சமமான தொகையை அரசு வழங்கும். இவ்வாறு எல்லா ஊழியர்களிடம் இருந்தும் பிடித்தம் செய்யப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.1.2004 முதல் இந்தத் திட்டம் அமலானது. தமிழகத்தில் அப்போதைய அரசால் 1.4.2003-ல் அமல்படுத்தப்பட்டது.
கீழே கொடுத்துள்ளகடித்த்தின்படி17786 / Finance (PGC) Department / 2010-1, Date: 21.05.2010 பணியில் சேர்ந்து ஒரு மாதத்திற்குள் CPS Index Number மாநில கனக்காயரிடமிருந்து பெறவேண்டும் எனவும் பணிவரன் முறைக்காக காத்திருக்கத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Contributory Pension
இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு மாதமும் பணியாளர்களது அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதற்கு சமமான தொகையை அரசு வழங்கும். இவ்வாறு எல்லா ஊழியர்களிடம் இருந்தும் பிடித்தம் செய்யப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.1.2004 முதல் இந்தத் திட்டம் அமலானது. தமிழகத்தில் அப்போதைய அரசால் 1.4.2003-ல் அமல்படுத்தப்பட்டது.
கீழே கொடுத்துள்ளகடித்த்தின்படி17786 / Finance (PGC) Department / 2010-1, Date: 21.05.2010 பணியில் சேர்ந்து ஒரு மாதத்திற்குள் CPS Index Number மாநில கனக்காயரிடமிருந்து பெறவேண்டும் எனவும் பணிவரன் முறைக்காக காத்திருக்கத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Contributory Pension
07 June 2010
15 மணி நேர இடைவெளியில் 7 பிரசவங்கள்
குழுமணி ஆ.சு.நி.ன் எழில் மிகு தோற்றம்.
(பெரிதாக பார்க்க படத்தின்மேல் கிளிக் செய்யுங்கள்.)
The Hindu செய்தி 06.06.2010 திருச்சி பதிப்பு
(பெரிதாக பார்க்க படத்தின்மேல் கிளிக் செய்யுங்கள்.)
05 June 2010
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் Tamilnadu Government Doctors
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள்( Doctors) சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்று அரசு வெளியிட்ட அரசு ஆணை எண்.G.O.Ms.No.354 Health and Family welfare Department dt.23.10.2009 இங்கே ஆவணப்படுத்தும் நோக்கில் இணைக்கப்படுகிறது.
03 June 2010
ஓய்வூதியப்படிவம் TN Government Pension form
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் பணி ஓய்வு பெறுவதற்கு நான்கு மாதத்திற்கு முன்னதாக ஓய்வூதியக் கருத்துருவினை மாநில கணக்காய்வுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்.ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைக்குப் பிறகு புதிய ஓய்வூதியப்படிவம் வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதியத்துடன் பொது வருங்கால வைப்புநிதிக்கான (GPF Final closer) மனுவும் ஒருங்கினைக்கப்பட்டு இப்படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)