PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
16 September 2011
2011-12 கொள்கை விளக்கக் குறிப்பு
நேரடி டவுண்லோடுக்கு இங்கே கிளிக்கவும்
https://docs.google.com/document/d/1wWo7Qfl9RAu8pX4XBXRtRpVflzOX2TjR2i-vLjoLfkQ/edit?hl=en_US
09 September 2011
புதிய மருத்துவர்கள்
செப்டம்பர் 6,7,8 ஆகிய தேதிகளில் உதவி மருத்துவர்களுக்கான 10 a(1) நேர்காணல் சென்னையில் நடந்துள்ளது.காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.மேற்படிப்பிற்கு செனறாதனால் ஏற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட்டுவிடும்.புதியவர்களை வரவேற்போம்.ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய இருக்கும் மருத்துவர்களுக்கான சில டிப்ஸ்.
அவ்வையாரின் ஆத்திச்சூடியிலிருந்து.
1.உடையது விளம்பேல்
2.ஓதுவது ஒழியேல்
3.ஙப்போல் வளை
4.இணக்கம் அறிந்து இணங்கு
உரை: ஒருவரோடு நட்புக் கொள்ளுமுன் அவரைப் பற்றிய செய்திகளை ஆராய்ந்துஅறிந்து ( அவர் நற்குணத்தவர் என்றால் மாத்திரமே) அவரோடு நட்பும் தொடர்பும் கொள்க.
5.இயல்பலாதன செய்யேல்
உரை:இயற்கையோடு ஒத்திராத (வழக்கத்திற்கு விரோதமான) செயல்களை ஒரு போதும் செய்யற்க
6.அழகலாதன செயேல்
7.கேள்வி முயல்
8.சுளிக்கச் சொல்லேல்
9.சேரிடம் அறிந்து சேர்
10.தூக்கி வினை செய்
11.தோற்பன தொடரேல்.
12.நொய்ய உரையேல்
13.பெரியாரைத் துணைக்கொள்
உரை: நாம் தவறு செய்யுங்கால் இடித்துக் கூறித் திருத்தும் பண்புடைய பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
14.மாற்றானுக்கு இடங்கொடேல்.
15.முனைமுகத்து நில்லேல்
16.மைவிழியார் மனையகல் ( ஆண்களுக்கு மட்டும்)
17வல்லமை பேசேல்
18ஒன்னாரைத் தேறேல்
மேலும் சில டிப்ஸ் க்கு இங்கே சொடுக்கவும்.
அவ்வையாரின் ஆத்திச்சூடியிலிருந்து.
1.உடையது விளம்பேல்
2.ஓதுவது ஒழியேல்
3.ஙப்போல் வளை
4.இணக்கம் அறிந்து இணங்கு
உரை: ஒருவரோடு நட்புக் கொள்ளுமுன் அவரைப் பற்றிய செய்திகளை ஆராய்ந்துஅறிந்து ( அவர் நற்குணத்தவர் என்றால் மாத்திரமே) அவரோடு நட்பும் தொடர்பும் கொள்க.
5.இயல்பலாதன செய்யேல்
உரை:இயற்கையோடு ஒத்திராத (வழக்கத்திற்கு விரோதமான) செயல்களை ஒரு போதும் செய்யற்க
6.அழகலாதன செயேல்
7.கேள்வி முயல்
8.சுளிக்கச் சொல்லேல்
9.சேரிடம் அறிந்து சேர்
10.தூக்கி வினை செய்
11.தோற்பன தொடரேல்.
12.நொய்ய உரையேல்
13.பெரியாரைத் துணைக்கொள்
உரை: நாம் தவறு செய்யுங்கால் இடித்துக் கூறித் திருத்தும் பண்புடைய பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
14.மாற்றானுக்கு இடங்கொடேல்.
15.முனைமுகத்து நில்லேல்
16.மைவிழியார் மனையகல் ( ஆண்களுக்கு மட்டும்)
17வல்லமை பேசேல்
18ஒன்னாரைத் தேறேல்
மேலும் சில டிப்ஸ் க்கு இங்கே சொடுக்கவும்.
07 September 2011
முறையான மருத்துவ சிகிச்சைக்கான வழிகாட்டி நூல்
நன்றி: http://tamilnadu-stg.com/ தளத்திலிருந்து பெறப்பட்ட செய்தி.
தமிழக அரசின் சுகாதார மற்றும் குடும்பநலத்துறையின் தமிழ்நாடு
சுகாதார திட்டம்
முறையான மருத்துவ சிகிச்சைக்கான வழிகாட்டி நூல்
முகப்பு பக்கத்திற்கு
உங்களை கனிவுடன் வரவேற்கிறோம்
27 August 2011
கடவுளை நேரில் பார்த்தால் என்ன கேட்பீர்கள்?
31.08.11 ஆனந்தவிகடனின் இணைப்பிதழான என்விகடன் ( திருச்சி,தஞ்சை,கரூர் பதிப்பு) இதழில் ஒரு கேள்வி பலரிடம் கேட்கப்பட்டு அதற்கான பதில் பெறப்பட்டு பிரசுரமாகியுள்ளது.
கேள்வி:கடவுளை நேரில் பார்த்தால் என்ன கேட்பீர்கள்?
பதில் :( மலர்ச்செல்வி ஆசிரியை கும்பகோணம்)
“சமீபத்தில் எங்க பள்ளிகூடத்துக்கு பார்வைப் பரிசோதனைக்கு வந்த மருத்துவர்கள் எல்லாம் ரொம்ப அர்ப்பணிப்பா வேலை பார்த்தாங்க.எங்களைப்போல ஆசிரியர்களுக்கும் பிள்ளைங்க கிட்ட உள்ள பார்வை குறைபாடுகளை எப்படி கண்டுபிடிக்கறதுன்னு சொல்லித்தந்தாங்க.அதனால் நிறைய பசங்களோட பிரச்சனைகளைக் கண்டுபிடிச்சு பெற்றோர்கிட்ட தெரியப்படுத்தினோம்.இந்த மாதிரியே எல்லா மருத்துவர்களும் இருந்தா நம்ம நாடு எவ்வளவு சுகாதாரமா இருக்கும்கிற எண்ணத்தை அவங்க உருவாக்கிட்டாங்க.மருத்துவத்தைத் தொழிலாகப் பார்க்காமல் சேவையாகப் பார்க்குற மனசு உள்ள நிறையபேர் மருத்துவத்துறைக்கு வரணும்னு கடவுள் கிட்ட நான் கேட்பேன்”
இது பொதுசுகாதாரத்துறையின் சாதனை என்றே சொல்லவேண்டும்.மனமாற வாழ்த்திய ஆசிரியைக்கும் மனங்குளிர பணியாற்றிய கும்பகோணம் கண்மருத்துவ உதவியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கும் வாழ்த்துக்கள்
22 August 2011
13 August 2011
என்ன உலகமடாசாமி.
http://tamilnadu-stg.com/healthmail/
மேலே கண்ட லிங்ல் எனது எல்லா பதிவுகளும் ஸ்டோர்செய்யப்பட்டுள்ளது.எனது அனுமதிவாங்கப்படவில்லை.மேலும் இப் பதிவுகளுக்கான லிங்க் ம் கொடுக்கப்படவில்லை.
என்ன உலகமடாசாமி.
மேலே கண்ட லிங்ல் எனது எல்லா பதிவுகளும் ஸ்டோர்செய்யப்பட்டுள்ளது.எனது அனுமதிவாங்கப்படவில்லை.மேலும் இப் பதிவுகளுக்கான லிங்க் ம் கொடுக்கப்படவில்லை.
என்ன உலகமடாசாமி.
சுகாதார ஆய்வாளர்கள் கிரேடு-1 "பி' HI.Gr.1b
சென்னை : கோர்ட் அவமதிப்பு வழக்கில், சுகாதாரத் துறை செயலர் 15.07.2011 அன்று ஐகோர்ட்டில் ஆஜரானார். தொழுநோய் ஆய்வாளர்களாக 1987ம் ஆண்டு நூற்றுக்கணக்கான பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களை பொது சுகாதாரத் துறையில் இணைத்து, சுகாதார ஆய்வாளர்கள் கிரேடு-1 "பி' என அழைக்கப்பட்டனர். 1997ம் ஆண்டு இது நடந்தது.
தங்களுக்கும் சுகாதார ஆய்வாளர்கள் கிரேடு -1 "ஏ'க்கும் இடையே சம்பள வேறுபாடு உள்ளது; ஆனால், இருவரும் ஒரே பணியை தான் செய்கிறோம் என அரசிடம் சுகாதார ஆய்வாளர்கள் கிரேடு-1 "பி' முறையிட்டனர். இதையடுத்து, கிரேடு-1 "ஏ'க்கு இணையாக கிரேடு-1 "பி' ஆய்வாளர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது. 2007ம் ஆண்டு அக்டோபர் முதல் இது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவால், தங்களது சீனியாரிட்டி பாதிக்கப்படும் எனக் கூறி, அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, ஐகோர்ட்டில் சேலத்தைச் சேர்ந்த வெங்கடரமணன், இளங்கோ மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்', "1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்களாக சேர்க்கப்பட்ட தொழுநோய் ஆய்வாளர்களை, சுகாதார ஆய்வாளர்கள் கிரேடு-1 என கருத வேண்டும். அவர்களுக்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் டெக்னிக்கல் தனி உதவியாளர் என பதவி உயர்வு வழங்க வேண்டும். இவர்களின் ஜூனியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்ட தேதியில் இருந்து சம்பள பலன்களுடன் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்' என உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை அமல்படுத்தவில்லை எனக் கூறி, அப்போதைய சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ், பொது சுகாதார இயக்குனர் பொற்கை பாண்டியனுக்கு எதிராக, கோர்ட் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தனர். இவ்வழக்கு நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
சுகாதாரத் துறை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜரானார். ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த அரசுக்கு இரண்டு வார காலம் அவகாசத்தை, "டிவிஷன் பெஞ்ச்' வழங்கியது. கோர்ட் உத்தரவை அமல்படுத்தி, இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட் அவமதிப்பு விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரப்பட்டது. இம்மனு, நீதிபதிகள் அல்டமாஸ் கபீர், சுரேந்தர் சிங் நிஜார் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட்-ஜெனரல் கோமதிநாயகம் ஆஜரானார். சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், "ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்து பதவி உயர்வு ஏதும் அளிக்கப்பட்டால், அது அப்பீல் மனுவின் மீதான இறுதி முடிவைப் பொறுத்தது. ஐகோர்ட்டில் உள்ள கோர்ட் அவமதிப்பு விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது' எனக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட் அவமதிப்பு விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரப்பட்டது. இம்மனு, நீதிபதிகள் அல்டமாஸ் கபீர், சுரேந்தர் சிங் நிஜார் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட்-ஜெனரல் கோமதிநாயகம் ஆஜரானார். சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், "ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்து பதவி உயர்வு ஏதும் அளிக்கப்பட்டால், அது அப்பீல் மனுவின் மீதான இறுதி முடிவைப் பொறுத்தது. ஐகோர்ட்டில் உள்ள கோர்ட் அவமதிப்பு விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது' எனக் கூறப்பட்டுள்ளது.
04 August 2011
கிராமப்புற பெண்களுக்கு இலவச நாப்கின்
கிராமப்புற பெண்களுக்கு இலவச நாப்கின் வ்ழங்க இருப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த இலவசம் தேவையானது தான்.நடுத்தர குடும்பங்களிளேயே இது ஆடம்பரம் என்றும் அவசியமற்றது எனவும் கருதும் குடும்பப் பெருசுகளும், ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.கிராமப் புறத்தில் கேட்கவே வேண்டாம்.வரவேற்போம்.
தேசிய ஊரக சுகாதார திட்டம் (என்।ஆர்।ஹெச்.எம்.)NRHM மூலம் குறைந்த விலை அளவில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது என மேமாதமே அறிவிப்பு வந்தது..மத்திய அரசின் அறிவிப்பின் படி வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள பெண்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு பொட்டலம் வழங்குவதாக உத்தேசம்.ஒரு பாக்கெட்டில் 6 நாப்கின் இருக்கும்.ஆனால் தமிழக அரசு இலவசமாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
இதற்காக மத்திய அரசு 150 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.இந்திய அளவில் 235 மாவட்டங்களில் இத்திட்டம் முதலில் நடைமுறை படுத்தப்பட உள்ளது.கர்நாடகா,ஆந்திரா,கேரளா,தமிழ்நாடு,மராட்டியம், குஜராதில் 30 மாவட்ட பெண்கள் பயனடைவர் என NRHM அறிவிதிருந்தது.NRHM வழங்க உள்ள இதன் brand Name " freedays"
தேசிய ஊரக சுகாதார திட்டம் (என்।ஆர்।ஹெச்.எம்.)NRHM மூலம் குறைந்த விலை அளவில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது என மேமாதமே அறிவிப்பு வந்தது..மத்திய அரசின் அறிவிப்பின் படி வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள பெண்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு பொட்டலம் வழங்குவதாக உத்தேசம்.ஒரு பாக்கெட்டில் 6 நாப்கின் இருக்கும்.ஆனால் தமிழக அரசு இலவசமாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
இதற்காக மத்திய அரசு 150 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.இந்திய அளவில் 235 மாவட்டங்களில் இத்திட்டம் முதலில் நடைமுறை படுத்தப்பட உள்ளது.கர்நாடகா,ஆந்திரா,கேரளா,தமிழ்நாடு,மராட்டியம், குஜராதில் 30 மாவட்ட பெண்கள் பயனடைவர் என NRHM அறிவிதிருந்தது.NRHM வழங்க உள்ள இதன் brand Name " freedays"
26 July 2011
உலக மக்கள் தொகை தினம் World Population Day
“இன்று அபிவிருத்தியடைந்து வரும் உலக நாடுகளில் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்களே பெண்களைப் பிரதானமாகக் கொன்று வருகின்றன. மேலும் தாய் மரண வீதமே உலகில் மிகப்பெரிய அளவில் ஆரோக்கிய நியாயமின்மையாக விளங்குகின்றது”
1987ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. மக்கள் தொகைப் பெருக்கத்தின் அபாயத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை 1987 ஆம் ஆண்டு முதல் ஜூலை 11 ஆம் திகதியை (World Population Day, recognized by the UN ) உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. 1989 முதல் இத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மக்கள் தொகை பெருக்கத்தின் தீமைகளையும், சிறுகுடும்ப நெறியின் நன்மைகளையும் எடுத்துரைப்பது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
சராசரியாக உலக மக்கள் தொகை நிமிடத்திற்கு 150 பேர், மணிக்கு 9000 பேர், நாளைக்கு 2,160,000 பேர்
ஐக்கிய நாடுகள் சனத்தொகைக் கல்வி நிறுவகத்தின் அறிக்கையின் படி கி.பி. 01இல் உலக சனத்தொகை சுமார் 20 மில்லியன்களாக காணப்பட்டது. இத்தொகை கி.பி. 1000ஆம் ஆண்டில் 275 மில்லியனாகவும், கி.பி. 1500ஆம் ஆண்டில் 455 மில்லியனாகவும், 1650ஆம் ஆண்டில் 500 மில்லியனாகவும், 1750ஆம் ஆண்டில் 700 மில்லியனாகவும் காணப்பட்டது. இவ்வாறு அதிகரித்த மக்கள் தொகை 1804ஆம் ஆண்டில் 1 பில்லியனாகவும், 1850ஆம் ஆண்டில் 1.2 பில்லியனாகவும், 1900 ஆம் ஆண்டில் 1.6 பில்லியனாகவும், 1927ஆம் ஆண்டில் 2 பில்லியனாகவும், 1950ஆம் ஆண்டில் 2.55 பில்லியனாகவும், 1960ஆம் ஆண்டில் 3 பில்லியனாகவும், 1975ஆம் ஆண்டில் 4 பில்லியனாகவும், 1987ஆம் ஆண்டில் 5 பில்லியனாகவும் உயர்ந்தது. இத்தொகை 1990ஆம் ஆண்டில் 5.3 பில்லியனாகவும், 1995ஆம் ஆண்டில் 5.7 பில்லியனாகவும், 1999ஆம் ஆண்டில் 6பில்லியனாகவும், 2006ஆம் ஆண்டில் 6.5பில்லியனாகவும் உயர்ந்து தற்போது (2009 ஜுலை) 6.76 பில்லியனாக ஆகியுள்ளது. 2012ஆம் ஆண்டில் 7 பில்லியனாகவும், 2020ஆம் ஆண்டில் 7.6 பில்லியனாகவும், 2030ஆம் ஆண்டில் 8.2 பில்லியனாகவும், 2040ஆம் ஆண்டில் 8.8பில்லியனாகவும், 2050ஆம் ஆண்டில் 9.2 பில்லியனாகவும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுவாக நோக்குமிடத்து 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தைத் தொடர்ந்து சனத்தொகையானது மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்பது பயமுறுத்தும் உண்மை.
டாப் டென் மக்கள் தொகை நாடுகள்
1.சீனா 1,331,630,000 (19.67%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
2. இந்தியா 1,165,930,000 (17.22%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
3. ஐக்கிய அமெரிக்க 306,829,000 (4.53%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
4. இந்தோனேசியா 230,512,000 (3.4%) ஜுன் 24, 2009 மதிப்பீட்டின்படி
5. பிரேசில் 191,437,000 (2.83%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
6. பாக்கிஸ்தான் 166,826,000 (2.46% ) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
7. பங்களாதேஸ் 162,221,000 (2.4%) ஐ.நா மதிப்பீட்டின்படி
8. நைஜீரியா 154,729,000 (2.29%) ஐ.நா மதிப்பீட்டின்படி
9. ரஸ்யா 141,832,000 (2.1%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
10. ஜப்பான் 127,580,000 (1.89%) மே 1, 2009 மதிப்பீட்டின்படி
உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கான பிரதான காரணங்களாக பிறப்பு வீதம், இறப்பு வீதம் என்பன அமைந்துள்ளன. உலக மக்கள் தொகை நிர்ணயப்படி பிறப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பெண்களின் கருவலம் பிறப்பு வீதத்தை நிர்ணயிக்கின்றது. இனப்பெருக்க திறன்கொண்ட பெண்கள் பெறும் உயிருள்ள குழந்தைகளின் எண்ணிக்கை ‘கருவலம்” எனப்படும். ஓராண்டில் ஆயிரம் மக்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை பிறப்பு வீதம் எனப்படும். நாடுகளின் பிறப்பு வீதமானது உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையை ஆயிரத்தால் பெருக்கி நாட்டின் மொத்த சனத்தொகையால் பிரிக்கும்போது வருகின்றது. பிறப்பு வீதத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக வயது, மதம், கல்வி நிலை, பொருளாதார நிலை, இருப்பிடம் போன்றன அமைகின்றன.
நன்றி: அமலதாஸ் எல்றோய் லெஸ்ஸி http://amalathaselroy.blogspot.com/2010/07/world-population-day.html
1987ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. மக்கள் தொகைப் பெருக்கத்தின் அபாயத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை 1987 ஆம் ஆண்டு முதல் ஜூலை 11 ஆம் திகதியை (World Population Day, recognized by the UN ) உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. 1989 முதல் இத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மக்கள் தொகை பெருக்கத்தின் தீமைகளையும், சிறுகுடும்ப நெறியின் நன்மைகளையும் எடுத்துரைப்பது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
சராசரியாக உலக மக்கள் தொகை நிமிடத்திற்கு 150 பேர், மணிக்கு 9000 பேர், நாளைக்கு 2,160,000 பேர்
ஐக்கிய நாடுகள் சனத்தொகைக் கல்வி நிறுவகத்தின் அறிக்கையின் படி கி.பி. 01இல் உலக சனத்தொகை சுமார் 20 மில்லியன்களாக காணப்பட்டது. இத்தொகை கி.பி. 1000ஆம் ஆண்டில் 275 மில்லியனாகவும், கி.பி. 1500ஆம் ஆண்டில் 455 மில்லியனாகவும், 1650ஆம் ஆண்டில் 500 மில்லியனாகவும், 1750ஆம் ஆண்டில் 700 மில்லியனாகவும் காணப்பட்டது. இவ்வாறு அதிகரித்த மக்கள் தொகை 1804ஆம் ஆண்டில் 1 பில்லியனாகவும், 1850ஆம் ஆண்டில் 1.2 பில்லியனாகவும், 1900 ஆம் ஆண்டில் 1.6 பில்லியனாகவும், 1927ஆம் ஆண்டில் 2 பில்லியனாகவும், 1950ஆம் ஆண்டில் 2.55 பில்லியனாகவும், 1960ஆம் ஆண்டில் 3 பில்லியனாகவும், 1975ஆம் ஆண்டில் 4 பில்லியனாகவும், 1987ஆம் ஆண்டில் 5 பில்லியனாகவும் உயர்ந்தது. இத்தொகை 1990ஆம் ஆண்டில் 5.3 பில்லியனாகவும், 1995ஆம் ஆண்டில் 5.7 பில்லியனாகவும், 1999ஆம் ஆண்டில் 6பில்லியனாகவும், 2006ஆம் ஆண்டில் 6.5பில்லியனாகவும் உயர்ந்து தற்போது (2009 ஜுலை) 6.76 பில்லியனாக ஆகியுள்ளது. 2012ஆம் ஆண்டில் 7 பில்லியனாகவும், 2020ஆம் ஆண்டில் 7.6 பில்லியனாகவும், 2030ஆம் ஆண்டில் 8.2 பில்லியனாகவும், 2040ஆம் ஆண்டில் 8.8பில்லியனாகவும், 2050ஆம் ஆண்டில் 9.2 பில்லியனாகவும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுவாக நோக்குமிடத்து 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தைத் தொடர்ந்து சனத்தொகையானது மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்பது பயமுறுத்தும் உண்மை.
டாப் டென் மக்கள் தொகை நாடுகள்
1.சீனா 1,331,630,000 (19.67%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
2. இந்தியா 1,165,930,000 (17.22%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
3. ஐக்கிய அமெரிக்க 306,829,000 (4.53%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
4. இந்தோனேசியா 230,512,000 (3.4%) ஜுன் 24, 2009 மதிப்பீட்டின்படி
5. பிரேசில் 191,437,000 (2.83%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
6. பாக்கிஸ்தான் 166,826,000 (2.46% ) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
7. பங்களாதேஸ் 162,221,000 (2.4%) ஐ.நா மதிப்பீட்டின்படி
8. நைஜீரியா 154,729,000 (2.29%) ஐ.நா மதிப்பீட்டின்படி
9. ரஸ்யா 141,832,000 (2.1%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
10. ஜப்பான் 127,580,000 (1.89%) மே 1, 2009 மதிப்பீட்டின்படி
உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கான பிரதான காரணங்களாக பிறப்பு வீதம், இறப்பு வீதம் என்பன அமைந்துள்ளன. உலக மக்கள் தொகை நிர்ணயப்படி பிறப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பெண்களின் கருவலம் பிறப்பு வீதத்தை நிர்ணயிக்கின்றது. இனப்பெருக்க திறன்கொண்ட பெண்கள் பெறும் உயிருள்ள குழந்தைகளின் எண்ணிக்கை ‘கருவலம்” எனப்படும். ஓராண்டில் ஆயிரம் மக்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை பிறப்பு வீதம் எனப்படும். நாடுகளின் பிறப்பு வீதமானது உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையை ஆயிரத்தால் பெருக்கி நாட்டின் மொத்த சனத்தொகையால் பிரிக்கும்போது வருகின்றது. பிறப்பு வீதத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக வயது, மதம், கல்வி நிலை, பொருளாதார நிலை, இருப்பிடம் போன்றன அமைகின்றன.
நன்றி: அமலதாஸ் எல்றோய் லெஸ்ஸி http://amalathaselroy.blogspot.com/2010/07/world-population-day.html
Subscribe to:
Posts (Atom)
