04 April 2013

பணிமாறுதல்.

02.04.2013 அன்று கரூர் மாவட்டம் தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டேன்.விருப்பத்தின் பேரில் திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 02.04.2013 பி.ப பணியில் சேர்ந்துள்ளேன்.இந்த வலைப்பூவை இதே பெயரில் தொடரலாமா அல்லது இனாம் குளத்தூர் ஆ.சு.நி பெயரில் தொடரலாமா என இன்னும் முடிவு செய்யவில்லை.உங்கள் ஆலோசனைகளும் எதிர்பார்க்கப்படுகிறது.

31 March 2013

பவானிசாகர் பயிற்சி

பொது சுகாதாரத்துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் 25 நபர்களுக்கு 26.4.2013 முதல் 24.06.2013 வரை பவானிசாகர் அடிப்படை பயிற்சி வழங்கப்பட உள்ளது.இத்துடன் பெயர்ப்பட்டியல்.-ஆவனம் உதவி திரு.கு.ராஜா










அமைச்சுப்பணியாளர் சங்கம் இயக்குனருடன் சந்திப்பு

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் சார்பாக 27.03.2013 அன்று மான்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களையும் இயக்குனர் அவர்களையும் சந்தித்துள்ளனர்.-படங்கள் உதவி திரு.கு.ராஜா.






27 March 2013

டாக்டர்.சம்பத்குமார்




நல்ல அதிகாரியாக இருப்பதும் நல்ல மனிதராக இருப்பதும் நல்ல நிர்வாகியாக இருப்பதும் அவ்வளவு எளிதல்ல .எல்லாம் ஒருங்கினைந்த ஓர் மனிதர்,தகப்பன் ஸ்தானத்தில் இருந்து சுகாதார மாவட்டத்தையே வழிநடத்திய ஆசான்,எனது ஆதர்ச புருஷர்.டாக்டர்.சம்பத்குமார் இந்தமாதம் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.ஒவ்வோரு ஆய்வுக் கூட்டத்திலும் இவர் கையாண்ட எளிமையான நேரடியான அனுகுமுறை அனைவரையும் கவர்ந்தது.யாரையும் மனம் புன்படும் படி கடிந்ததில்லை.இனி வரும் காலங்களில் இது போன்ற அதிகாரிகளை காண்பது அரிதாக இருக்கும்.போய் வாருங்கள் சார்.உங்களிடம் கற்றுக் கொண்ட பணியும்,அன்பும்,எங்களை வழிநடத்தும்.





21 March 2013

2013 பல்ஸ் போலியோ

2013 பல்ஸ் போலியோ முகாம் மற்றும் களப்பணி தொடர்பான படங்கள்













06 March 2013

மென்பொருள் உதவித்துளிகள்

முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதிஉதவித்திட்ட மென்பொருள் ஆக்கத்தில் கீழ்கண்ட பயன்பாடுகளை எளிமையாக்கினால் பயன் படுத்துபவர்களுக்கும் பணி துரிதமாக நடைபெறவும் பயனுள்ளதாக இருக்கும்.

அ)       தற்போது 9.0 மென்பொருளின் படி ஒரு செயல்முறைகளுக்கு ( proceedings) ஒரு பட்டியல் என கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் ஒரு செயல்முறைக்கு ஒரு ஈசிஎஸ் மட்டுமெ ஜெனரேட் ஆகிறது.
   இதையே சற்று மாற்றி ஒரு உதாரணத்திற்கு ( proreeding 55 to 60 )  என ஈசிஎஸ் ஜெனரேட் செய்யயும் வசதியினை ஏற்படுத்தலாம்.அதற்கான செயல்முறைகள் வாரியான  பொழிப்பும் ( ABSTRACT)  கிடைக்க வழியேற்படுத்தலாம்.
இதனால் தினந்தோறும் ப்ரொசீடிங்க்ஸ் ஜெனரேட் செய்தாலும் பட்டியலின் எண்ணிக்கை அதிகரிக்காது.ஒருமுறை MTC 70  கருவூலம் சென்றால் திரும்பி வர குறைந்தது 4 நாட்களாவது ஆகும்.அதுவரை புரொசீடிங்க்ஸ் ஜெனரேட் செய்யாமல் இருக்கவேண்டியதில்லை.

ஆ) proceedings submission details entry தற்போது user friendly ஆக இல்லை.காரணம் ஒவ்வொரு proceedings க்கும் தனித்தனியாக விண்டோவருவது காலதாமதமாகிறது.அப்ளிகேஷன் ஃபார்வேர்டுச் செய்வது போல ஒரே பக்கத்தில் அனைத்து பதிவுகளும் வந்தால் எளிதாக இருக்கும். 
   பதிவு செய்யப்பட்ட proceeding பதிவுகளை ஒரு முறை பதிவு செய்து விட்டால் ஆக்டிவேட் ஆகாமல் இருப்பதில்லை.மீண்டும் மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவு செய்யமுடிவதும் எவ்வளவு பதிவு செய்துள்ளோம் என பதிவு செய்பவர்கள் அறிவதும் சிரமமாக உள்ளது.

இ) print proceedings,ECS, ஆகிய பக்கங்களில் எத்தையாவது தவனை என்பதும் வரவழைப்பது பயனுள்ளதாக இருக்கும்.


06 February 2013

9.1 PAY ROLL SOFTWARE

25 January 2013

அஞ்சலி


டாக்டர்.பாக்கியலட்சுமி (வயது30).  மலைக்கோவிலூர் அரசு 

ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். 

சேலம்-மதுரை பைபாஸ் ரோட்டில் கரூர் அருகே உள்ள சுக்காலியூர் 

ரவுண்டானா பகுதியில் அரசு வேனில் சென்ற போது அந்த வழியாக வந்த 

லாரியும், வேனும் மோதிக் கொண்டவிபத்தில் வேன் தலைகீழாக கவிழ்ந்து 
  
இதில் வேனின் அடியில் டாக்டர் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 

தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 

டாக்டர்.பாக்கிய லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு 

தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 

கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி 

அவர் பரிதாபமாக இறந்தார்.இவரைப் பிர்ந்து வாடும் குடும்பத்தினருக்கு 

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இம் மரணம் எதிர்காலத்தில்  கவனிக்க வேண்டிய சில கேள்விகளையும் 

விட்டுச் சென்றுள்ளன.






1.விலைமதிப்பிலா உயிர்களான  மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பயணம் 

செய்யும் வாகனங்களுக்கு MMU,JSSK. போன்ற திட்டங்களுக்கு தற்காலிக 

தினக்கூலி ஓட்டுனர்களை நியமிப்பது நியாயமா?

2.வாகனங்களில் பயணம் செய்யக்கூடிய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 

விபத்துக்கான அதிக தொகைக்கான காப்பீட்டினை ஏன் அரசு 

செலுத்தக்கூடாது?






15 January 2013

திரு.மனோகரன் என்.எம்.எஸ் பணிஓய்வு


                                பணி ஓய்வு திரு மனோகரன் மருத்துவமல்லா மேற்பார்வையாளர் (Manoharan NMS) அவர்கள் வயது முதிர்வின் காரணமாக 31.12.2012 அன்று தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து பணிஓய்வு பெற்றார்.இனிய நண்பர்.பணி அல்லாது ஏனைய உறவுகளையும் நன்கு பேணி காப்பவர்.எங்களுக்கு அவர் ஒரு குட்டி விக்கிபீடியா,கூகிள் சர்ச் இஞ்சின், என கூறலாம்.சிமெண்ட் வாங்குவது முதல் சிம்கார்டு மாற்றுவது வரை எதைப்பற்றி வேண்டுமானாலும் அவரிடம் கேட்கலாம்.தெரிந்துவைத்திருப்பார் அல்லது எங்கு தொடர்பு கொண்டால் தெரியும் என சொல்லுவார்.பண்பாளர்.வயதுக்கு மீறிய பணிவு கொண்டவர்.ஓய்வு பெறும் மாதம் கூட டெங்கு களப்பணியினை சிறப்பாகச் செய்தவர்.அதிகாரிகளுக்கு இணக்கமானவர்.நம்பி பல காரியங்களை மருத்துவ அலுவலர்கள் இவரிடம் ஒப்படைப்பார்கள்.அதிர்ந்து பேசாதவர்.நம் தவறுகளைக் கூட மென்மையாக சுட்டிக் காட்டுபவர்.நெகிழ்வுத்தன்மை கொண்டவர்.யாருடனும் ஒத்துப் போய்விடுவார்.

                             நான்,கண்மருத்துவ உதவியாளர் செல்வமோகன்குமார் இவர் ஆகிய மூவரும் பெரும்பாலும் எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒன்றாக கலந்து கொள்ளுவோம்.அப்படி பழனி,ஏற்காடு ஆகிய பகுதிகளுக்கு இவருடன் சென்றுள்ளேன்.நல்ல இணை.வயது வித்தியாசம் தெரியாது.ஒன்றிவிடுவார்.நல்ல குடும்பம்.ஒரு மகன் ஒரு மகள்.இவ்வளவுகாலம் ஒரு நபர் அரசுப்பணியில் இருந்து பணியாற்றி ஓய்வு பெறுவதற்கு பின்னே அவரது மனைவிக்கு பெரும் பங்கு உண்டு.வேலைக்கு செல்லும் நாட்களில் கையில் சாப்படு கட்டிக் கொடுப்பது முதல் சரியான நேரத்தில் பஸ்பிடிப்பதுவரை துணைவியின் துணையின்றி ஆகாது.நானும் மோகனும் இவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மதிய உணவு ஒன்றாகத்தான் சாப்பிடுவோம்.இவரது வீட்டு உணவு சாத்வீகமாகவும் சுவையாகவும் இருக்கும்.உணவு குணத்தை நிர்ணயிக்கும் முக்கியக் காரணி  என்பது இவர் உணவை வைத்துத் தெரிந்து கொள்ளலாம்.மொத்தமாக இவரது பணிஓய்வு என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு பெரிய இழப்பு.நல்ல நண்பர்,நல்ல ஊழியர்,நல்லகணவர்,நல்ல தகப்பன்,நல்ல தாத்தா?..என பல பரிமாணங்களிலும் கிரேடு எடுத்தவர்.இவரைபற்றி நினைக்கும் போது  மகாகவி பாரதியின் கண்ணன் என் சேவகன் பாடல் எனக்கு நினைவுக்கு வரும்.

“நண்பனாய்,மந்திரியாய்,நல்லாசிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்.
எங்கிருந்தோ வந்தான்..இடைச்சாதி என்று சொன்னான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!.

ஆம் எங்கள் நண்பரை,மந்திரியை,நல்லாசிரியரை….நாங்கள் மிஸ் பண்னுகிறோம்.






























02 January 2013

NRHM STAFFNURSE PAY ENHANCEMENT

ENHANCEMENT OF CONSOLIDATED PAY TO NRHM STAFF NURSE W.E.F.01.04.2012
G.O.MS.NO.342/ H&FW Dept.dt.14.12.2012.
என்.ஆர்.ஹெச்.எம்.மூலமாக பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான ஊதியம் பெறும் செவிலியர்களுக்கு மேர்கண்ட அரசு ஆணை மூலமாக ஊதியம் பிரதி மாதம் ரூ3000 உயர்த்தப்பட்டுள்ளது.மூன்றுவருடம் பணியாற்றியவர்களுக்கு ரூ2500 உயர்வு.


                             Existing pay            Revised pay

                         pay         allow       Total    pay       allow   toal         Diff
IST YEAR 4000 500 4500 7000 500 7500 3000

2ND YEAR 4500 500 5000 7500 500 7500 3000

3RD YEAR 5500 500 6000 8000 500 8500 2500


01.04.2012  முதல் நிலுவைத்தொகை  பெற்றுக் கொள்ளலாம்.