31 March 2011

பிரிவு உபசார விழா


தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 31.03.2011 அன்று வயது முதிர்வின் காரணமாக திருமதி . ஜே. தமிழரசி FNA மற்றும் திருமதி.ஜி.லலிதா SHN அவர்களும் பணி ஓய்வு பெற்றனர்.பிரிவு உபசார விழாவிலிருந்து சில காட்சிகள்.





திருமதி. ஜே.தமிழரசி அவர்களுக்கு நினைவுப்பரிசினை முதன்மை குடிமை மருத்துவர் திரு.கே.குமாரசாமி அவர்கள் வழங்குகிறார்.




Tmt.j.Tamilarasi withT.Lakshmi Staff Nurse, Selvarani Staff Nurse, jayasudha ANM, malarkodi VHN, malliga VHN,Shanthi Staff Nurse


திருமதி.ஜி.லலிதா SHN அவர்களுக்குமரு.நர்மதா அவர்கள் நினைவுப்பரிசு வழங்குகிறார்,




பிரிவாற்றாமை




G.Lalitha SHN, J.Tamilarasi FNA, Dr.k.Visalakshi Senior Civil Surgeon (Rtd),Dr.K.Kumarasamy Chief Civil Surgeon,Dr.Sudhahar,Dr.K.Sowmiya,S.Venkatasubramaniyan Superintendent

13 March 2011

மருத்துவ மேற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வு

தமிழ்நாடு மருத்துவ மேற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகளின் முடிவு அரசு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.முதல் 999 மதிப்பெண் பெற்றவர்களின் புள்ளி விவரங்கள்.
----------------------------------------------------
அரசுப்பணியில் உள்ளவர்கள் = 386

தனியர் = 613
-----------------------------------------------------
OC = 88 (SER14+PRI 74)

BC = 583 (215+368)

MBC = 228 (101+127)

SC = 70 (48+22)

ST = 1 (1+0)

BCM = 28 (7+21)

SCA = 1 (0+1)
----------------------------------------------------------

01 February 2011

Chief Civil Surgeon (முதன்மை குடிமை மருத்துவர்)

25.01.2011 அன்று மரு.கே.குமாரசாமி அவர்கள் தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதன்மை குடிமை மருத்துவராக ( Chief Civil Surgeon Medical Officer) பணியேற்றார்.













18 December 2010

சாதனையாளர் விஞ்ஞானி பொன்முடி

பொது சுகாதாரத்துறையில் பல தனித்திறமைகள் பெற்ற சாதனையாளர்கள் உள்ளனர் அவர்களைப் பற்றிய தகவல்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது நீண்ட நாளைய ஆசை. எழுத்தாளர்கள்,கவிஞர்கள்,நாடகக்காரர்கள்,கூத்துக் கலைஞர்கள்,ஓவியர்கள்,பேச்சாளர்கள், என எத்தனையோ திறமையாளர்கள் இத்துறையில் உள்ளனர்.அவர்களில் ஒருவராக திரு.பொன்முடி அவர்களை பற்றிய பதிவினை இங்கே தருகிறேன்.மேலும் தொடர்ந்து பல சாதனையாளர்கள் பற்றிய விரிவான செய்திகள் தொடரும்.

க.பொன்முடி.
இள நிலை உதவியாளர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
ஈகுவார் பாளையம்

இதுதான் இவ்ரது அலுவலக முகவரி.பூமிப்பந்தினை பற்றிய நெடிய ஆய்வினை மேற்கொண்டு வருகிறார்.இதுவரை இரண்டு நூல்கள் எழுதியுள்ளார்.நியூ சென்சுரி பதிப்பகம் மற்றும் விகடன் பிரசூரம் ஆகியவை இந்நூல்களை வெளியிட்டுள்ளது

பூமிப்பந்தின் புதிர்கள்.இது விகடன் பிரசூரம்.

நாம் வாழும் இந்த பூமி, எப்படி உருவானது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் ஒவ்வொருவருக்கும் இருக்கும். நிலையாக ஓர் இடத்தில் இருப்பதுபோல் நாம் உணரக்கூடிய இந்த பூமி, உண்மையில் ஓரிடத்தில் நிலையாக இல்லை; சுற்றிக்கொண்டே இருக்கிறது. இது பூமி கிரகத்தைப் பற்றிய விஷயம்.
இந்த பூமியும்கூட, நிலம், நீர் என்று பிரிந்துள்ளது. நீர்ப்பரப்புக்கு அடியில்கூட நில மட்டம் இருக்கிறது. இந்த நிலமட்டத்தில் ஏற்படும் பெரும்பாலான மாற்றங்களும் பூமியின் அடிப்பகுதியை மையமாக வைத்தே ஏற்படுகின்றன.
இப்போதெல்லாம் திடீரென்று சில இடங்களில் கடல் மட்டம் உயர்கிறது என்கிறார்கள். ஆனால் உண்மையில் கடல் மட்டம் உயரவில்லை; கடல்நீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ள நிலப் பகுதியே உயர்கிறது.... அதுவே கடல் மட்டம் உயர்வதாக நமக்கு ஒரு தோற்றத்தைத் தருகிறது என்கிறார் இவர்.

கடல் நீர் சூழ்ந்துள்ள நிலம், அதாவது கண்டங்கள்தான் உயர்கின்றன என்பதற்கு சில ஆதாரங்களை இந்த நூலில் முன்வைக்கிறார்

கண்டங்கள் நகர்தல் என்ற கோட்பாட்டை இவர் சில ஆதாரங்களை முன்வைத்து மறுக்கிறார். முன்னொரு காலத்தில் ஒன்றாக இருந்த கண்டங்கள் பிறகு நகர்ந்தன என்ற கூற்றையும் ஏற்கவில்லை

கண்டங்கள் நகரவில்லை; உயர்கின்றன என்பதே இவர் கருத்து.
ஒரு காலத்தில் நட்சத்திரங்களாக இருந்தவையே கால ஓட்டத்தில் குளிர்ந்து பாறையாக இறுகி பூமி போன்ற கிரகங்களாகின்றன என்பதைச் சொல்லி, மேற்கண்ட இந்தக் கருத்துகளுக்கு பக்க பலமாக பல தகவல்களை இந்நூலில் முன்வைக்கிறார்.

இவரது வீட்டு முகவரி.

விஞ்ஞானி.க.பொன்முடி
1 , அப்பு தெரு ,நுங்கம் பக்கம்,
சென்னை.600 034,
பேச : 98400 32928

இவர் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில அதிர்ச்சி சுனாமி ஏற்படுகிறது என்பதை ஆய்வு மூலம் கண்டு பிடித்துஇருக்கிறார்.

கலைஞர் தொலைக்காட்சியில் 25.05.2009,அன்று சந்தித்த வேளையில் நிகழ்ச்சியில் திரு. ரமேஷ் பிரபா அவர்கள் இவரை நேர்காணல் செய்துள்ளார்.அதற்கான லிங்க் கீழே.


ராஜ் தொலைக்காட்சியில் 01.11.2009, அன்று நேரடியாக ஒளிபரப்பான மக்கள் மேடை நிகழ்ச்சியில் நில அதிர்ச்சி குறித்து நேயர்களின் கேள்விகளுக்கும், ஊடகவியலாளர் திரு முருகானந்தன் அவர்களின் கேள்விகளுக்கும் திரு.பொன்முடி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.அதற்கான லிங்க் கீழே.

இவர் இந்த ஆராய்ச்சிக்காக .பதவிஉயர்வு,நான்குவருட பணிக்காலம் மற்றும் ஊதியம் என நிறைய இழந்துள்ளார்.இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.இவரது சாதனைகளுக்காக இவரை வாழ்த்துவோம்.ஊக்கமளிப்போம்.


06 December 2010

நலமான தமிழகம்

தமிழகத்தில் இதய, சர்க்கரை நோயாளிகளை கண்டறிய வீடு தேடி வரும் "நலமான தமிழகம்' திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.தமிழகத்தில் தொற்றில்லாத நோய்களை கண்டறிய "நலமான தமிழகம்' என்ற திட்டம் துணை முதல்வரால் ஆரம்பிக்கப்பட்டு பொது சுகாதார துறை மூலமாக செயல்படுத்தப்படுகிறது. தற்போது இந்தியாவில் இதய நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. வரும் 2020ம் ஆண்டில் இந்நோய்கள் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு மக்களை காப்பாற்றும் வகையில் இத்திட்டம் முதற்கட்டமாக கிராமப்புறத்தில் வாழும் மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக பயிற்சி பெற்ற தன்னார்வ பணியாளர்களை கொண்டு ஒவ்வொரு வீடுகளிலும் சென்று 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரது உடல்நிலை வரலாறு, உடல் உழைப்பு விபரங்கள், பெற்றோருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் விபரங்கள், இடைச் சுற்றளவு ஆகியவை அறியப்பட்ட அதன் அடிப்படையில் புள்ளிகள் (ஸ்கோர்) வழங்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் புள்ளிகள் தெரிவிக்கப்படுகிறது. 30க்கும் கீழ் புள்ளிகள் இருந்தால் அவர்கள் பெயர், விபரங்கள் சேகரிக்கப்படும். அவர்கள் வியாழன், வெள்ளி, சனி ஆகிய 3 நாட்களில் கிராம அளவில் கிராம சுகாதார செவிலியர் மற்றும் சுகாதார ஆய்வாளர்களை கொண்ட முகாமில் பரிசோதனை நடத்தப்படுகிறது.

இதில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டு அதில் குறைபாடு ஏற்பட்டால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சிறப்பு சிகிச்சை பிரிவு செயல்பட்டு அதன் மூலம் சர்க்கரை, ரத்த அழுத்த, இதய நோயாளிகளுக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது.

05 December 2010

After one man commission

fin_e_63305_5_2010










29 October 2010

Pay Authorisation October 2010

27 October 2010

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பணி ஓய்வு









தோகமலை சமுதாய நல நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றி 30.09.2010 அன்று வயது முதிர்வின்காரணமாக பணி ஓய்வு பெற்ற பெரியவர் திரு.இ.ராஜலிங்கம் அவர்களுக்கு தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. வட்டார அளவில் அணைத்து ம்ருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வயதில் தான் இவர் பெரியவர் பணியில் இளைஞர் தான்.ஓய்வு பெறும் வயதில் கூட சுறுசுறுப்பும் பொறுப்புணர்வும் கொண்டு பணிபுரிந்தவர்.இவரது பெருமைகளை அனைவரும் பேசினர்.இவரது மனைவியும் இவருடன் கவுரவிக்கப்பட்டார்கள். திரு.இ.ராஜலிங்கம் அவர்கள்அனைவருக்கும் சிறப்பான விருந்து படைத்தார்.பிறகு அலுவலக சகோதர சகோதரிகள் படை சூழ அவரது சொந்த ஊரான தரகம்பட்டிக்கு அவரை கொண்டுவிட்டு பிரியாவிடைபெற்றுத் திரும்பினோம்.

26 October 2010

அல்மா-அட்டா பிரகடணம் (Alma-ata Declaration)

1978ல் அல்மா அட்டா என்ற ரஷ்ய நகரில் உலக சுகாதார நிறுவனம் (W.H.O) கூட்டிய மாநாட்டின் இறுதியில் வெளியிடப் பட்ட அறிக்கை கி.பி. 2000க்குள் அனைவருக்கும் மருத்துவ நலம் வழங்க உறுதியளித்தது. இந்த உறுதிமொழி பிரகடனத்தில் இந்திய அரசும் கையொப்ப மிட்டிருந்தது

170க்கும் மேற்பட்ட உலக நாட்டு அரசாங்கங்களுக்கு மருத்துவ ஆலோசனைûயும், வழிகாட்டுதலையும் வழங்கி வருவது உலக சுகாதார நிறுவனம். இதில் அங்கம்வகிக்கும் நாடுகளின் சுகாதாரத்துறை தலைமைப் பொறுப்பிலுள்ளோர் ஆண்டுதோறும் கூடி முக்கிய முடிவுகளை மேற்கொள்ளுமிடம் உலக சுகாதாரப் பேரவை. இப்பேரவையின் முடிவாக அந்தந்த காலத்திற்கேற்ப உலக சுகாதார அறிக்கைகள் வெளிவருகின்றன

கி.பி. 2000க்குள் எல்லோருக்கும் மருத்துவ நலம் என்ற இலக்கை முன்வைத்த அல்மா அட்டா அடிப்படை மருத்துவ மாநாட்டின் பிரகடனம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த்து.

தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு 2010-11 ல் பக்கம் 56 அத்யாயம் 5ல் கீழ்கண்டவாறு இப்பிரகடணத்தைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

1978 அல்மா அட்டா வில் தான் ஆரம்ப சுகாதார சேவை என்பதற்கான இலக்கணம் வகுக்கப்பட்ட்து.ஆரம்ப சுகாதார சேவை என்பது ஒரு அடிப்படையான அத்டியாவசிய சுகாதார சேவையாகும்.இதில் முழுமையாக சமூக பங்கேற்போடு மக்கள் வாழும் கிராமங்களுக்கு அருகிலேயே அவர்களது விருப்பத்திற்கு ஏற்றதாகவும்,பொருளாதார சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும்.

பொது சுகாதாரம் மர்றும் மருத்துவத்துறையில் பணியாற்றும் அனைவரும் படிக்க வேண்டிய பிரகடணம் இது.



Declaration Almaata

23 October 2010

கருத்தரித்த பெண்களின் மரண விகிதம் பற்றிய சர்ச்சை

கருத்தரித்தப் பெண்கள் உடல் நலம்மற்றும் அவர்கள் மரணவிகிதம் பற்றியஇந்திய அரசின் உரிமை கோரல்களை ஆசியமகளிர் உரிமை மற்றும் மனித உரிமைகண்காணிப்பு ஆய்வாளர் அருணா காஷ்யப்கடுமையாக மறுத்துள்ளார்.

கருத்தரித்த பெண்களின் மரண விகிதத்தில் ஐ.நா. நிர்ணயித்துள்ள இலக்குகளைஎட்டுவதில் இந்தியா சரியான பாதையில்தான்சென்று கொண்டிருக்கிறது என்று இந்தியஅரசு தெரிவித்திருந்தது.


இது குறித்து அருணா காஷ்யப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியஅரசு அபாயகரமாக இந்திய மக்களை திசை திருப்புகிறது." என்றுகூறியுள்ளார்.

(“The Indian government should stop playing number games with women's lives,”)

கருத்தரித்த பெண்கள் மரண விகிதத்தை இந்தியா குறைத்து வந்தாலும் ஐ.நா. நிர்ணயித்துள்ள புத்தாயிரமாண்டு இலக்குகளுக்கு அருகில் அதுஇல்லை என்று உலகச் சுகாதார மையமும், ஐ.நா. அமைப்புகளும் செய்துள்ளமதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. புத்தாயிர வளர்ச்சி இலக்குகள் உச்சி மாநாட்டிற்கு முன்னதாகவேவெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி, இந்தியா, ஆப்கான், வங்கதேசம்,காங்கோ குடியரசு, எத்தியோப்பியா, இந்தோனேசியா, கென்யா, நைஜீரியா,பாகிஸ்தான், சூடான், தான்சானியா, ஆகிய நாடுகள் கருத்தரித்த பெண்களின்உலக அளவிலான மரண விகிதத்தில் 65% என்று பங்களிப்பு செய்துவருகிறதுஎன்று தெரிவித்துள்ளது. அதாவது உலக அளவில் கர்ப்பம்தரித்த பெண்கள்அதிக அளவில் இந்த நாடுகளில்தான் மரணம் அடைந்து வருகின்றனர்.

2008ஆம் ஆண்டு புள்ளிவிவரம் இது. ஆனால் இதனை இந்திய அரசுமறுத்தது. ஆனால் ஐ.நா. சுகாதாரப் பிரிவு உடனடியாக இந்திய அரசின்மறுப்பை எதிர்த்து ஐ.நா. இலக்குகளை இந்தியா சந்திக்காது போகும்நிலை உள்ளது என்று தெரிவித்திருந்தது.

அதாவது "இன்ஸ்டிட்யூஷனல் டெலிவரீஸ்" என்று அழைக்கப்படும் ஒருசுகாதார நிலையத்தில், அது மருத்துவமனைகள் மற்றும் பிற வசதிகள்நிரம்பிய இடங்களில் மகப்பேறு நடக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதைவைத்துக் கொண்டு இந்தியா இந்த விவகாரத்தில் தாங்கள் முன்னேற்றம்கண்டு வருவதாகத் தவறாக கூறிவருகிறது.

இதனாலெல்லாம் கருத்தரித்த பெண்களின் மரண விகிதம் இந்தியாவில்குறிப்பிடத்தகுந்த அளவில் குறைந்துள்ளது என்றாலும் அந்த வசதிகள்இன்மையால் நிகழும் மரணங்கள் பற்றி இந்திய அரசு எதையும்குறிப்பிடுவதில்லை.

2009, 2010 ஆம் ஆண்டுகளில் சுமார் 1 கோடிப் பெண்கள் மருத்துவமனைகளில்பாதுகாப்பான பிரசவம் பெற்றனர். என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் மருத்துவமனைகளில் அல்லதுசுகாதார மையங்களில் மகப்பேறு அடையும்தாய்மார்களில் எத்தனை பேர் அதன் பிறகுஅல்லது அங்கிருந்து வெளியேறி வீட்டுக்குச்சென்ற பிறகு உயிரிழந்துள்ளனர் என்பதைஇந்திய அரசு கண்டு கொள்வதில்லை,இதுதான் இந்தத் திட்டம்வெற்றிபெற்றதற்கான அளவு கோல் என்றுமனித உரிமை கண்காணிப்பு அமைப்புதெரிவித்துள்ளது.

சுகாதார வசதிகள் இன்மை, மோசமானபோக்குவரத்து வசதிகள், அவசரகாலமகப்பேறு வசதிகள், மகப்பேறுக்குப் பிந்தைய சிகிச்சை மற்றும் கவனிப்புகள்ஆகியவற்றில் போதாமை காரணமாக இந்தியாவில் இன்னும் மரண விகிதம்அதிகமாகவே உள்ளது.

மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தனது அறிக்கையில் தங்களது இந்தஅறிக்கைக்கு உதாரணமாக கடந்த ஜூலை மாதம் புதுடெல்லியில் எந்தவசதியுமின்றி நடைபாதையில் குழந்தை பெற்ற தாய் ஒருவர் படுமோசமான சூழ்நிலையில், அசுத்தமான மழைநீர் நிரம்பிய இடத்துக்கு அருகில்பிரசவம் முடிந்து 4 நாட்கள் அவதியுற்று கவனிப்பாரற்று பிறகு இறந்துபோனதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் உள்ள ஒரு திட்டத்தின் படி பிரசவ விடுதிகளில் பிரசவம்செய்து கொண்ட தாய்மார்களுக்கு ரொக்க ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது.ஆனால் வீட்டில் பிரசவம் பார்த்தவர்களைக் கூட பிரசவ மருத்துவமனையில்பிரசவம் பார்த்துக் கொண்டதாக சுகாதார ஊழியர்கள் வலியுறுத்தி வரும்பணத்தில் சரிபாதி பங்கு பெறுவதும் இந்த நாட்டில் நடந்து வருகிறதுஎன்று மனித உரிமை அமைப்பிடம் பெண்கள் சிலர் புகார் கூறியதையும்இந்த அறிக்கை பதிவு செய்துள்ளது.

சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாமையால், பிரசவ ஆஸ்பத்திரிக்குச்செல்லும் முன்னரே பல கருத்தரித்த பெண்கள் இறந்து விடுவதும் தினசரிநிகழ்வாக இருந்து வருகிறது.

இவையெல்லாம் இந்திய அரசு வெளியிடும் உரிமை கோரல் அறிக்கைகளில்காணப்படுவதில்லை. மேலும் அவசரகால போக்குவரத்து வசதிகள் மேம்பாடுஅடைந்ததாகவும் தெரியவில்லை.

மனித உரிமை கண்காணிப்பினர் வருகை தந்த பெரும்பாலானமருத்துவமனைகளில் சாதாரண பிரசவம் மட்டுமே நடைபெறுகிறது.

தொடர்ந்து கருத்தரித்த பெண்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டால் தொடர்ந்துஅவர்களை வேறு வேறு மருத்துவமனைகளுக்குச் செல்லுமாறுகூறப்படுகிறது. கடைசியாக மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளுக்குஅவர்கள் செல்லும்போது காலதாமதமாகி விடுகிறது. மேலும் நல்லசிகிச்சையும், கவனிப்பும் பெற ஏழைத் தாய்மார்களும் ஒரு சிலரை 'கவனிக்க'வேண்டிய நிலையும் உள்ளது என்று அந்த மனித உரிமை அமைப்பின்அறிக்கை இந்திய அரசுக்கு பதிலடி கொடுத்துள்ளது.